-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்
Showing posts with label பரிகாரங்கள். Show all posts
Showing posts with label பரிகாரங்கள். Show all posts

Tuesday, July 14, 2015

திருமணம் தாமதமாகும் கிரக சூழ்நிலைகள் - பரிகாரங்கள்

திருமணம் தாமதமாகும் கிரக சூழ்நிலைகள் - பரிகாரங்கள்

தி,மு. மற்றும் தி.பி. அதாவது திருமணத்திற்கு முன் மற்றும் திருமணத்திற்கு பின் என்ற இரு வாழ்க்கை முறைதான் மிகவும் சிறந்தது. திருமணத்திற்குப் பின் நிச்சயம் ஒரு மாற்றம் என்ற ஒன்று வரவேண்டும். திருமணத்திற்கு முன்பு எப்படி இருந்தேனோ அப்படியே மாறாமல் திருமணத்திற்குப் பின்னும் இருக்கிறேன் என்று கூறும்படி வாழ்வது சிறப்பானது அல்ல. காரணம், நம்முடைய தகுதிகள் உயரும் போது நம்முடைய எண்ணங்களில் செயல்களில் முன்னேற்றம் ஏற்பட்டு மாற்றங்களை உருவாக்க வேண்டும். திருமணம் ஒரு சடங்கு அல்ல. வாழ்வியல் முறை. உள்ளத்தையும் உடலையும் பக்குவப்படுத்தக்கூடிய வாழ்வியல் நடைமுறைதான் திருமணம். அப்படிப்பட்ட திருமண வைபவம் விரைவில் நடந்தால் மிக நல்லது. அது அனைவருக்கும் அமைவதில்லை. உண்ண உணவும் உடுக்க உடையும் எப்படி அவசியமோ அப்படித்தான் திருமணமும். நிச்சயம் காலம் கடப்பதற்குள் திருமணத்தை முடிக்க வேண்டும்.

திருமணம் தாமதவாவது ஒன்றும் பெரிய பாவச் செயல் அல்ல. நல்ல வரன் அமைவது தான் முக்கியம். குரு எனப்படும் வியாழன் கிரகம் மிகுந்த சுப கிரகம். குரு பார்க்க கோடி நன்மை ஆனால் களத்திர பாவம் எனப்படும் 7ம் பாவத்தை தனித்த குரு பார்த்தால் திருமணம் தாமதமாகிறது. பல சமயங்களில் 7ம் பாவாதிபதியைப் பார்த்தாலும் திருமணம் தாமதமாகத் நடக்கிறது. ஆனால் நிச்சயம் திருணம வாழ்க்கை உண்டு. அதில் மாற்றம் இல்லை. மிக விரைவாக திருமணம் நடைபெற என்ன பரிகாரம்.



திருமணம் விரைவில் நடைபெற என்ன செய்ய வேண்டும்


குரு - புத்திர காரகர். பெற்றோர் பிள்ளைக்கு நல்ல வரனைத் தேடிக் கொடுக்கக் கூடிய பொறுப்பில் உள்ளனர். அதனால் ஓரு பிள்ளை உள்ளவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள் உள்ள வீடுகளில் வரன் தேடலாம். பிள்ளைகள் அதிகம் உள்ளவர்கள் ஒரு பிள்ளைமட்டுமே உள்ள வீடுகளில் வரன்களைத் தேடுவதால் நல்ல பலன் விரைவில் கிட்டும்.

குரு ஓரை நடப்பில் உள்ள நேரங்களில் திருமணம் தொடர்பான செயல்களை மேற்கொண்டால் நல்ல பலன் விரைவில் கிட்டும்.

ஜாதகத்தில்  ஜென்ம குருவிற்கு 2, 5, 7, 9, 11 ஆகிய இடங்களுக்கு கோச்சார குரு வரும் காலங்களிலும், குரு அந்தரம் சூட்சும அந்தர காலங்களிலும் திருமணம் நடைபெற வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் அந்த காலங்களில் விரைந்து செயலாற்றினால் வெற்றி நிச்சயம்.

 தொடரும்.

Monday, January 12, 2015

நவக்கிரக வழிபாடு தேவையா?

நவக்கிரகங்களை வழிபடலாமா?

வேண்டாம்.
ஏன் என்பதற்கு முன்னால் உங்களுக்கு ஒரு கேள்வி.
வேலை செய்பவர்களுக்கு என்ன அழகு?  சொன்ன வேலையை திறம்பட குறித்த நேரத்தில் முடித்துத் தருவது.
நன்கு திறம்பட வேலையை முடித்துத் தர என்ன தெரிந்திருக்க வேண்டும்? நன்றாக வேலைபார்க்கத் தெரிந்திருக்க வேண்டும்.
அப்படி ஒழுக்கமாக நியாயமாக வேலைசெய்பவரை சுதந்திரமாக செயல்பட விடாமல் ஓயாமல் தொந்தரவு செய்து கொண்டிருப்பது சரியா?
தவறு என்றால் நவக்கிரகங்கள் சுதந்திரமாக செயல்பட தயவு செய்து வழிபாடு என்ற பெயரில் தொந்தரவு செய்யாதீர்கள்.

நன்றும் தீதும் பிறர் தர வாரா. இது இயற்கையின் தத்துவம் கிரகங்கள் உங்களின் முன்வினைப் பயனுக்கேற்ப இப்பிறவியில் நீங்கள் அடைய இருக்கும் சுக துக்கங்களுக்கான சூழ்நிலைகளை உருவாக்கக் கடமைப் பட்டவர்கள். அவர்களை சுதந்திரமாக வேலை செய்ய அனுமதியுங்கள்.

ஜோதிடம் இயற்கை. யாவருக்கும் பொதுவானது. உங்களின் சுக துக்கங்கள் உங்களை மட்டும் பாதிக்காது. உங்களோடும் உங்களின் செயல்களோடும் தொடர்புடைய அனைவரையும் பாதிக்கிறது. நீங்கள் ஒருவருக்கு உதவி செய்தால் அது உங்களின் புண்ணியம் மட்டுமல்ல. உதவி பெற்றவரோடைய அதிர்ஷ்டமும் அதில் அடங்கியுள்ளது. மழை பொழிய வேண்டுபவர்கள் மத்தியில் வேண்டாம் என்று நினைப்பவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். அப்படியென்றால் இயற்கை யாருக்கு சாதமாக அமையும். இயற்கை என்பது நவக்கிரகங்களின் தூண்டுதலால் செயல்படுகிறது. வெப்பத்திற்கு சூரியன் என்றால் குளிர்ச்சிக்கு சந்திரன். யோகத்திற்கு குரு என்றால் போகத்திற்கு செவ்வாய், சுக்கிரன். பேரின்பத்திற்கு கேது என்றால் சிற்றின்பத்திற்கு ராகு. எல்லோருக்கும் வளைந்து கொடுக்கும் தன்மை புதன் என்றால் யாருக்கும் வளையாமல் நடுநிலையோடு பலன் தரும் சனி.  இப்படி நவக்கிரக்கிரகங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையது தான். நன்மை தீமை இரண்டும் சேர்ந்து தான் வாழ்க்கை. வாழப் பழகிக் கொள்ளுங்கள். அனுபவங்கள் வேண்டாம் என்று முடிவு செய்தால் வாய்ப்புகளை இழக்க வேண்டி வரும்.

இயற்கையை மாற்ற முயலுவது முடியாத காரியம் மட்டுமல்ல கூடாத காரியமும் கூட. இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை அனுபவிக்க பழகிக் கொள்வோம். பிறகு ஏன் ஜோதிடம் தெரிந்து கொள்ள வேண்டும் ? ஜோதிடத்தால் என்ன பலன்?

தொடர்வோம்...

Wednesday, November 28, 2012

திருமணத்திற்கு பின் வரும் பிரச்சனைகளும் ஜோதிடத் தீர்வுகளும்.

திருமணத்திற்கு பின் வரும் பிரச்சனைகளும் ஜோதிடத் தீர்வுகளும்.

விதிக்கப்பட்டதை அனுபவிப்பதேயன்றி வேறுஒன்றும் செய்வதற்கில்லை. அப்படியானால் நம்முடைய முயற்சி, வேண்டுதல்கள், தியாகம் இவற்றிற்கெல்லாம் என்ன பயன்?
பரிகாரங்கள் என்ற ஒன்று இல்லவே இல்லையா? என்றால்,  இதற்கெல்லாம் பதில் விதியை அனுபவிப்பது தான். ஆனால் நம் விருப்பப்படி அனுபவிப்பது. அது எப்படி?

அனைவருடைய திருமண வாழ்க்கையிலும் சிறு சிறு பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். பிரச்சனைகள் இல்லாத் வாழ்க்கை இல்லவே இல்லை. காரணம் தனிமனிதனாக இருக்கும் போது நாம் ஒருவர் மட்டும்தான். நம்முடைய பிரச்சனைக்குரிய தீர்வு நாம் மட்டும் எடுப்பதே ஆகும். அதே சமயம், திருமணத்திற்குப்பின் தன்னுடைய மனைவி அல்லது கணவன் குழந்தைகள் இவர்களின் மனநிலையையும் அவர்களின் தேவைகளும் சேர்ந்து கொள்கிறது. நம்முடைய தீர்வு நம் குடும்பத்தாருடன் ஒத்துப் போவதில்லை அது தான் பிரச்சனை.

இதற்கு தீர்வு விட்டுக்கொடுத்தல், தியாகம், இவையெல்லாம் தான். இதற்கு உளவியல் தீர்வு போதுமே எதற்கு ஜோதிடம் என்று கேட்போரும் உண்டு. வெறும் உளவியல் முறையில் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது. ஜோதிடத்தில் திருமணப் பொருத்தம் பார்ப்பதும் அதற்காகத்தான். நட்சத்திரப் பொருத்தம் மட்டுமே திருமணப் பொருத்தம் ஆகாது. முழுஜாதகத்தையும் பொருத்தி பார்க்க வேண்டும்.

திருமணம் நடந்தபின்பு வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயல்வதற்கு முன். பிரச்சனைகள் என்ன என்பதை ஆராயலாம். பிரச்சனைகளை நாம் நான்காக வகைப்படுத்தலாம்.

  1. அறம் சாரந்த பிரச்சனைகள்
  2. பொருள் சார்ந்த பிரச்சனைகள்
  3. இன்பம் சார்ந்த பிரச்சனைகள்
  4. மோட்சம் சார்ந்த பிரச்சனைகள்

அறம் சார்நத பிரச்சனைகள்.
அறம் என்பது என்ன? மனம், கல்வி, புத்திசாலித்தனம், முடிவுஎடுக்கும் திறன். நியாயம் தரமம் இது போன்றவை. அதாவது நாம் எடுக்கும் முடிவு குடும்பத்திற்கு ஒத்துப் போகாமல் வரும் பிரச்சனைகள்.

பொருள் சார்ந்த பிரச்சனைகள்
பணம், வீடு, வாகனம், தொழில் இது போன்ற பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள்.

இன்பம் சார்நத பிரச்சனைகள்
காதல், காமம், ஆடம்பரம், இலாபம் இது போன்ற உடல் சார்ந்த மனமும், மனம் சாரந்த உடலினாலும் ஏற்படும் பிரச்சனைகள்.

மோட்சம் சார்ந்த பிரச்சனைகள்
இறப்பு, மறுபிறப்பு, தொடர்பான பிரச்சனைகள். சாதாரண மனித வாழ்க்கையில் இது இடம் பெற வாய்ப்பில்லை. காரணம் யாரும் இறந்தபின்பு சொர்க்கமா நரகமா, மோட்சமா? மறுபிறப்பா என்பதற்கு மட்டும் சண்டை போட்டுக்கொள்ள மாட்டார்கள்.

உண்மையில் பிரச்சனைகள் என்ன என்பதைப் புரிந்து கொண்டால் தான் அதற்கான தீர்வைக் காண முடியும். மேற்கூறிய பிரச்சனைகளுக்கும் ஜோதிடத்திற்கும் உள்ள தொடர்பு என்ன? மனித வாழ்க்கையின் செயல்பாடுகள், தேவைகள் இவற்றை ஜோதிடத்தில் 12 பாவங்களாகப் பிரித்து பலன் காண்கிறோம். மேற்கூறிய பிரிவுகளும் ஜோதிடப் பாவங்களும் அதாவது ஸ்தானங்களும் என்ன என்றால்?

அறம் சாரந்த ஸ்தானங்கள் – 1, 5, 9
பொருள் சார்ந்த ஸ்தானங்கள் – 2, 6, 10
இன்பம் சார்ந்த ஸ்தானங்கள் – 3, 7, 11
மோட்சம் சாரந்த ஸ்தானங்கள் – 4, 8, 12


பிரச்சனைகள் எப்பொழுது வரும் என்று தெரிந்தால் தான். அதற்கான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளைச் செய்ய ஏதுவாக இருக்கும். ஜோதிடம் என்பது எதிர்கால வாழ்க்கைக்கான வழிகாட்டி. எந்த காலகட்டங்களில் நாம் எவ்வாறு நடந்துகொள்ளப் போகிறோம் அல்லது எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று கூறுவது தான் ஜோதிடம். அந்த காலகட்டங்களை ஜோதிடத்தில் திசா புத்தி அந்தரம், என்ற ஜோதிடக் கணிதத்தில் தெரிந்து கொள்ள முடியும்.

கணவனுக்கும் மனைவிக்கும் தனித்தனியாக நடக்கும் திசாபுத்தி அந்தர அதிபதிகளின் சேர்க்கை சுபமானால் பிரச்சனைகளுக்குரிய தீர்வு கிடைத்துவிடும். இல்லையென்றால் சிறு விவாதம் கூட பெரிய பிரச்சனையாகி பிரிவு என்ற நிலைவரை வந்து விடும்.

சில சமயம் என்ன பிரச்சனை எதற்காக கோபப்படுகிறார்கள் என்பதே தெரியாத நிலையில் எந்த தசாபுத்தி அந்தரம் நடக்கிறதோ அதன் காரகத்துவங்களில் தான் கோபம் வரும் உதாரணமாக 3, 7, 11ம் சூட்சும அந்தர காலங்களில் காதல், காமம்,அந்நியோன்யம்,  திருப்பியின்மையினாலும் கோபம் வரும் அதைப் புரியாமல் நீங்கள் கோயில் கோயிலாக சுற்றினால் உங்கள் மேலும் கடவுள் மேலும் கோபம் தான் வரும் அப்பொழுது செய்ய வேண்டியது இருவரும் தனியாக சென்று இயற்கையை அனுபவியுங்கள்.

அறம் சார்நத காலகட்டங்களுக்கு தீர்த்த யாத்திரை போவதும், பொருள் சாரந்த காலகட்டங்களில் பொருளாதார சக்திக்கு தகுந்தவாறு சிறு பொருளாவது பரிசாகக் கொடுப்பதும் சிறந்தது.

இவ்வாறு செய்தால் குடும்பத்தில் பிரச்சனை வராதா என்றால் வரும் ஆனால் மறுநாள் அது தீரந்துவிடும். பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துவிடும். பிரச்சனை பிரிவு வரைசெல்லாது.

இது தான் ஜோதிடம் கூறும் தீர்வு. ஒவ்வொரு பிரச்சனைகளையும் இவ்வாறு புரிந்து காலகட்டங்களை உணர்ந்து செயல்பட்டால் எல்லா நாளும் திருப்தியாகவே அமையும்.



Wednesday, August 8, 2012

வினைப் பயன்

வழிபாடுகள் வினைப் பயனை மாற்றிவிடுமா?

ஜோதிடத்தில் ஆத்திகனுக்கும் நாத்திகனுக்கும் ஒரே பலனா?

ஜோதிடம் தனி மனிதனுக்குத் தான். அவன் கடவுளை ஏற்பவனா, இல்லை மறுப்பவனா என்றெல்லாம் கிடையாது. மனிதப் பிறவியாய் பிறப்பவன் தான் செய்த முற்ஜென்ம வினைகளுக்குத் தக்கவாறு பிறவி எடுக்கிறான். அந்த ஜென்ம வினைப் பயனை கண்டிப்பாக அனுபவித்தே தீர வேண்டும். நாம் பிறக்கும் போது கொண்டு வந்த அந்த வினைப்பயனை எவ்வாறு அனுபவிக்கப் போகிறோம் என்பது தான் ஜோதிடம். இதில் கடவுள் மறுப்போ அல்லது ஏற்போ இல்லை. யாவருக்கும் பொது தான். கடவுளே மனிதனாய் பிறந்தாலும் இதே நிலைதான்.

ஆன்மீகம் வேறு. ஜோதிடம் வேறு. எவ்வாறு வாழ வேண்டும் என்று காட்டுவது ஆன்மீகம். எவ்வாறு வாழப் போகிறோம் என்று கூறுவது ஜோதிடம். தவறு செய்தவன் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும்.

கடவுள் வழிபாடு நம் மனதை பக்குவப் படுத்தி, வாழ்க்கையின் இன்ப துன்பங்களை சமமாக பாவிக்க நாம் தோ்ந்தெடுக்கும் ஒரு பாதை தான். இதன் மூலமாக இனி வரும் காலங்களில் நாம் தவறு செய்யாமல் இருக்கமுடியுமேயன்றி கடந்த காலங்களில் செய்த தவறுகளுக்கான தண்டணையிலிருந்து தப்ப முடியாது. எனவே ஜோதிடம் கூறும் பலன்கள் அனைவருக்கும் பொதுவானது. எந்தச் சூழ்நிலையிலும் அதனை மாற்ற முடியாது.

தவறுக்காக வருந்துபவன் தண்டனையை தாமே முன்வந்து ஏற்றுக் கொள்கிறான். தன்னால் பாதிக்கப்பட்வருக்கோ அல்லது அதே மாதிரி பாதிக்கப்பட்டவர்களுக்கோ உதவி செய்கிறான். இது அவன் தவறை உணர்ந்ததன் அடையாளமாகுமே தவிர, தண்டனையிலிருந்து தப்ப முடியாது. நாம் செய்த தீவினைப் பயனுக்கு நாம் தண்டனையை அனுபவித்துத்தான் ஆகவேண்டும். அதேபோல செய்த நல்லவினைப் பயனுக்குரிய பலனையும் நாம் அனுபவிக்க கடமைப் பட்டுள்ளோம். இங்கே ஆத்திகனும் நாத்திகனும் ஒன்றுதான்.