-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்
Showing posts with label தாமதத் திருமணம். Show all posts
Showing posts with label தாமதத் திருமணம். Show all posts

Tuesday, July 14, 2015

திருமணம் தாமதமாகும் கிரக சூழ்நிலைகள் - பரிகாரங்கள்

திருமணம் தாமதமாகும் கிரக சூழ்நிலைகள் - பரிகாரங்கள்

தி,மு. மற்றும் தி.பி. அதாவது திருமணத்திற்கு முன் மற்றும் திருமணத்திற்கு பின் என்ற இரு வாழ்க்கை முறைதான் மிகவும் சிறந்தது. திருமணத்திற்குப் பின் நிச்சயம் ஒரு மாற்றம் என்ற ஒன்று வரவேண்டும். திருமணத்திற்கு முன்பு எப்படி இருந்தேனோ அப்படியே மாறாமல் திருமணத்திற்குப் பின்னும் இருக்கிறேன் என்று கூறும்படி வாழ்வது சிறப்பானது அல்ல. காரணம், நம்முடைய தகுதிகள் உயரும் போது நம்முடைய எண்ணங்களில் செயல்களில் முன்னேற்றம் ஏற்பட்டு மாற்றங்களை உருவாக்க வேண்டும். திருமணம் ஒரு சடங்கு அல்ல. வாழ்வியல் முறை. உள்ளத்தையும் உடலையும் பக்குவப்படுத்தக்கூடிய வாழ்வியல் நடைமுறைதான் திருமணம். அப்படிப்பட்ட திருமண வைபவம் விரைவில் நடந்தால் மிக நல்லது. அது அனைவருக்கும் அமைவதில்லை. உண்ண உணவும் உடுக்க உடையும் எப்படி அவசியமோ அப்படித்தான் திருமணமும். நிச்சயம் காலம் கடப்பதற்குள் திருமணத்தை முடிக்க வேண்டும்.

திருமணம் தாமதவாவது ஒன்றும் பெரிய பாவச் செயல் அல்ல. நல்ல வரன் அமைவது தான் முக்கியம். குரு எனப்படும் வியாழன் கிரகம் மிகுந்த சுப கிரகம். குரு பார்க்க கோடி நன்மை ஆனால் களத்திர பாவம் எனப்படும் 7ம் பாவத்தை தனித்த குரு பார்த்தால் திருமணம் தாமதமாகிறது. பல சமயங்களில் 7ம் பாவாதிபதியைப் பார்த்தாலும் திருமணம் தாமதமாகத் நடக்கிறது. ஆனால் நிச்சயம் திருணம வாழ்க்கை உண்டு. அதில் மாற்றம் இல்லை. மிக விரைவாக திருமணம் நடைபெற என்ன பரிகாரம்.



திருமணம் விரைவில் நடைபெற என்ன செய்ய வேண்டும்


குரு - புத்திர காரகர். பெற்றோர் பிள்ளைக்கு நல்ல வரனைத் தேடிக் கொடுக்கக் கூடிய பொறுப்பில் உள்ளனர். அதனால் ஓரு பிள்ளை உள்ளவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள் உள்ள வீடுகளில் வரன் தேடலாம். பிள்ளைகள் அதிகம் உள்ளவர்கள் ஒரு பிள்ளைமட்டுமே உள்ள வீடுகளில் வரன்களைத் தேடுவதால் நல்ல பலன் விரைவில் கிட்டும்.

குரு ஓரை நடப்பில் உள்ள நேரங்களில் திருமணம் தொடர்பான செயல்களை மேற்கொண்டால் நல்ல பலன் விரைவில் கிட்டும்.

ஜாதகத்தில்  ஜென்ம குருவிற்கு 2, 5, 7, 9, 11 ஆகிய இடங்களுக்கு கோச்சார குரு வரும் காலங்களிலும், குரு அந்தரம் சூட்சும அந்தர காலங்களிலும் திருமணம் நடைபெற வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் அந்த காலங்களில் விரைந்து செயலாற்றினால் வெற்றி நிச்சயம்.

 தொடரும்.

Wednesday, June 10, 2015

திருமணம் விரைவில் நடைபெற என்ன செய்ய வேண்டும்

திருமணத்திறகு வரன் பார்க்கும் படலம் பெரிய தொடர்கதையாக இருப்பதாக பெரும்பாலோர் கூறுகின்றனர். இதற்கு காரணம் ஜோதிடம் அல்ல என்பதை பலமுறை வேதஜோதிடம் எடுத்துக்கூறியிருக்கிறது. திருமணம் விரைவில நடைபெற நாம் எடுக்கும் முயற்சிகளை சற்று முறைப்படுத்தினால் வெற்றி எளிதில் கிடைக்கும். ஆனால் திருமண வாழ்வின் பலன் அவரவர் செய்த வினைப்பயன் படிதான் நடக்கும்.
திருமணம் விரைவில் நடைபெறத் தடையாக இருப்பது எது
திருமணம் விரைவில் நடைபெற பலவிதப் பரிகாரங்கள் செய்தும் பலனில்லையே என்று நொந்து கொண்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதற்கு என்னதான் தீர்வு. திருமணம் உரித்த காலத்தில் நடைபெற நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை விட எந்தக் காலத்த்தில் அதைச் செய்ய வேண்டும் என்பது தான் விடை. வரன் பார்க்கச் செல்லும் காலம், பெண்ணும் ஆணும் முதலில் சந்திக்கும் காலம், ஜாதகத்தைப் பொருத்தம் பார்க்கும் நேரம் மேலும் ஜாதகரின் உடன் செல்பவர்கள் இப்படி ஒவ்வொரு நிலையிலும் ஜாதகருக்கு சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கி வந்தால் விரைவில் திருமணம் நடைபெறும். எப்பொழுதும் வரன் பார்க்கச் செல்லும் போது அஸ்வினி புணர்புசம், புசம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, அனுசம் திருவோணம், அவிட்டம் சதயம் ஆகிய நட்சத்திரங்கள் நடப்பில் உள்ள நாட்களில் வரன் பார்க்கச் செல்வது உத்தமம். மேலும் துவிதியை திருதியை பஞ்சமி சப்தமி, தசமி துவாதிசி திரியோதிசி ஆகிய திதிகளாக இருந்தால் உத்தமம். செவ்வாய் சனி தவிர்த்த நாட்களில் செல்வது உத்தமம். ஜாதகரின் தாராபலம் மிக்க நாட்கள் சிறப்பான பலன் தரும். சுக்கிர ஓரையும் புதன் ஓரையும் நல்லது. இப்படி இயற்கை சாதகமாக உள்ள நாட்களில் திருமணத்திற்கான செயல்களைச் செய்தால் விரைவில் திருமணம் நடைபெறும்.



நன்றி. 

Thursday, October 24, 2013

திருமணம் தாமதமாவதற்கு ஜாதகம் காரணமா?

திருமணம் தாமதமாவதற்கு ஜாதகம் காரணமா?

திருமணத்திற்கு வரன் பார்க்கும் படலம் வருடக்கணக்கில் நீடிப்பதற்கு என்ன காரணம்?. நாம் எதிர்பார்ப்பது கிடைக்கவில்லை என்பது தான். எதிர்பார்ப்பு என்பது ஒரு குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் மாறு படலாம். படித்த வரனாக வேண்டும் என்பது பையனுடைய கனவாக இருக்கலாம். ஆனால் நகை அதிகம் போட்டு வரவேண்டும் என்பது அன்னையின் ஆசையாக இருக்கலாம். பெண் வீட்டுக்காரர்கள் அடக்கமாக இருக்க வேண்டும் என்று அப்பா நினைக்கலாம். இப்படி ஒவ்வொருவரும் ஒரு எதிர்பார்ப்புடன் தான் திருமணத்திற்கு வரன் தேடுகிறார்கள். இதற்கு பொதுவான காரணமாக ஜாதகம் சரியில்லை என்ற சொல்லை முன் வைக்கின்றனர். நாங்கள் பார்த்த இடத்தில் ஜாதகப் பொருத்தம் சரியாக உள்ளது என்று பெண் வீட்டில் கூறினால், இல்லை இல்லை எங்கள் ஜோசியர் செய்யக்கூடாது என்று கூறிவிட்டார் என்று ஜோதிடர் மீது பழியைப் போட்டுவிடுகின்றனர். ஜாதகப் பொருத்தம் மட்டும் பார்த்தால் நிச்சயமாக யாருக்கும் திருமணம் தாமதமாகாது. அதையும் தாண்டிய எதிர்பார்ப்புகள் தான் தாமதத்திற்கு காரணம். அந்த எதிர்பார்ப்புகள் எப்படி அமைகின்றன? யாரால் இந்தத் தாமதம்?

இந்தக் கட்டுரையின் நோக்கம் யாரையும் குறைசொல்லவது அல்ல. நம்முடைய சூழ்நிலையைப் புரிந்து கொள்வது தான். நம்மையும் மீறி சில செயல்கள் நடைபெறுகின்றன. நம் நம்பிக்கைக்குரிய நபர்கள் நமக்கு எதிராக செயல்படுவதும், நமக்கு ஆகாது என்று நினைப்பவர்கள் உண்மையில் நல்வர்களாகவும் இருக்க வாய்ப்புண்டு. நம்மால் உறுதியாக முடிவெடுக்க முடியாத நிலையில் ஜோதிடம் கைகொடுக்கிறது. உண்மையைப் புரிய வைக்கிறது. இது அனுபவத்தில் கண்ட உண்மை.

நன்கு படித்த வேலையில் உள்ள ஒரு ஜாதகருக்கு ஐந்து வருடத்திற்கு மேலாக வரன் தேடிக் கொண்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஆயிரம் ஜாதகங்களுக்கு மேல் பொருத்தம் பார்த்தாகிவிட்டது. இன்னும் அமையவில்லை. காரணம் என்ன என்று கேட்டால் களத்திர தோச ஜாதகம் அதனால் அமையவில்லை என்று பதில் வருகிறதாம். இதற்கான காரணம் என்ன? இதனை எப்படி சரிசெய்வது என்று அந்த ஜாதகர் கேட்டிருந்தார். அந்த ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்ததில் தாமதத்திருமண நிலைதான் இருந்தது. ஆனால் அதற்கான காரணம் என்ன என்பது தான் ஜாதகரின் கேள்வி.

ஜாதகத்தில் உள்ள நிலைகள்.

கேமத்துருவ யோகம். – சந்திரன் இருக்கும் இராசிக்கு முன்னும் பின்னும் கிரகங்கள் இல்லாத நிலை. இந்த நிலையில் உள்ளவர்கள் எளிதில் எதிலும் ஏமாறும் தன்மை உடையவர்கள்.

ஏழாம் இடத்தை பாதிக்கும் கிரகங்கள். – செவ்வாய், புதன், சந்திரன்.

செவ்வாய் – சகோதர சகோதரிகள்.
புதன் – கல்வி, மாமன்மார்க்ள.
சந்திரன் – சுய புத்தி – தாய்.

மேலே உள்ள நிலைகளை ஒன்று சேர்த்து பார்த்த போது ஒரு விடை கிடைத்தது. தாய் மற்றும் தாய் வழி மாமன்கள், சகோதர சகோதரிகள் மற்றும் அவரது கணவன் மற்றும் குடும்பம்., ஜாதகரின் சுய முடிவு. இந்த மூன்று பேரும் தான் திருமணம் தாமதமாவதற்கு காரணம். எப்படி இந்தக் காரணம் காரியமாக மாறுகிறது என்பதைப் பார்ப்போம்.

இந்த ஜாதகருக்கு வரும் வரன்களில் சரி பாதி பொருத்தம் உள்ள ஜாதகங்கள் தான் வருகிறது. இதில் தன் படிப்புக்கேற்ற வரன் இதுஇல்லை என்று ஜாதகர் சிலவற்றை மறுத்துள்ளார். பெண் அழகாக இல்லை என்று சில வரன்களை தாய் மறுத்துள்ளார். தனது மகளை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி மூத்த சகோதரி வற்புறுத்துகிறார். இப்படி இந்த சூழ்நிலைகள் தான் ஜாதகரின் திருமணத்தை தாமதப்படுத்திக் கொண்டு வருகின்றன.

ஜாதகருக்கு வாழ்க்கையில் நடந்து கொண்டிருப்பதைத் தான் ஜோதிடம் விளக்கியுள்ளது என்று விளக்கிய பின்பு தான் ஜாதகருக்கு தெளிவு பிறந்தது. இந்தப் பிரச்சனையை தீர்ப்பதற்கு என்ன வழி என்று கேட்டார்.

ஜாதகருடைய திருமண வாழ்க்கையில் மாமனார் குடும்பத்துடன் இணக்கமான சூழ்நிலையில் இருக்க முடியாது. இதனால் திருமணவாழ்வில் சங்கடங்கள் குழப்பங்கள் ஏற்படும். இதனை மாற்ற முடியாது. அனுபவித்துத்தான் ஆகவேண்டும். இது அவருடைய விதி.

ஜாதகப் பொருத்தம் சரியாக இருந்தால் சகோதிரியின் மகளை திருமணம் செய்துகொள்வது சரியான தீர்வாக இருக்கும். குடும்பத்தில் வரும் பிரச்சனைகளை முடிந்தளவு குறைப்பதற்கு இது சரியான முடிவாக இருக்கலாம் என்று கூறப்பட்டது.

ஜோதிட ரீதியாக தாமதத் திருமணத்திற்கான விளக்கமும் விடையும் கொடுத்துவிட்டோம். இதற்கான வேறு பல தீர்வுகளும் இருக்கலாம். அல்லது வேத ஜோதிடத்தின் தீர்வுகளில் திருத்தங்கள் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் உங்களின் கருத்தக்களை எதிர்பார்க்கிறோம்.

நன்றி.

Tuesday, October 1, 2013

தாமதத் திருமணம் - விளக்கமும் - விடையும்

தாமதத் திருமணம் - விளக்கமும் - விடையும் 

இன்றைய இளைஞனின் தேவைகள் இரண்டு. ஒன்று வேலை மற்றொன்று  திருமணம். இந்த இரண்டும் நிறையப் பேருக்கு சரியான காலத்தில் அமைவதில்லை. எதற்காக இந்த இரண்டிற்கு மட்டும் அதிக முக்கியத்துவம். உடல் மற்றும் மனத் தேவைகளுக்காக திருமணமும்கௌரவம் மற்றும் பொருளுளகத் தேவைகளுக்காக வேலையும் கட்டாயம் தேவைப் படுகிறது. காலம் தவறிய திருமணம், தேவையை நிவர்த்தி செய்யாத வேலையும் திருப்தியைத் தருவதில்லை. இந்த இரண்டில் எதற்கு மிக முக்கயத்துவம் என்றால் அது திருமணத்திற்குத் தான்.

காரணம்.  தான் அன்பு செலுத்த கிடைக்கும் வாய்ப்பு திருமணத்தின் மூலம் தான் பெரும்பாலோருக்கு கிடைக்கிறது.  நான் என்றவரைத் நாம் என்று ஆக்குவது தான் திருமணம். அப்படிப்பட்ட திருமண வாழ்க்கை விரைவில் வந்து விட்டால் நிம்மதியாக மற்ற தேவைகளுக்காக தேட ஆரம்பிக்கலாம். சரி. எப்பொழுது திருமணம் கைகூடும்.

ஜாதகப் பலன்கள் நடக்கக்கூடிய கால நேரங்களை அறிந்து கொள்ள உதவுவது திசா புத்தி அந்தரங்கள் தான்.  கோச்சார நிலை அக்காலத்தை உறுதிப்படுத்துமேயன்றி உருவாக்காது. பொதுவாக இரண்டாம் அதிபதி புத்தி அல்லது அந்தர காலங்களில் திருமணம் நடப்பது அதிகமாக உள்ளது. ஒவ்வொரு திசா நடப்பின் போதும் இரண்டாம் அதிபதி புத்தி காலங்கள் நடக்கும். அதே போல ஒவ்வொரு புத்தி காலங்களிலும் இரண்டாம் அதிபதியின் அந்தர காலங்கள் நடக்கும். இது போன்ற சாதகமான திசா புத்தி அந்தர காலங்களில் கோச்சாரக் கிரகங்களும் சாதகமாக இருந்தால் அந்த காலங்களில் திருமண வாய்ப்புகள் கூடி வரும்.


ஒரு சிலருக்கு இளம் வயதில் (18 – 21) திருமணம் நடைபெறும். ஒரு சிலருக்கு நடுத்தர நிலையில் திருமணம் நடைபெறும் (27-30). ஒரு சிலருக்கு காலம் தாமதமாக திருமணம் நடைபெறும் (30வயதுக்கு மேல்). தாமதத்திருமணம் என்பது வயதின் அடிப்படையில் கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாதது. ஜோதிடம் கூறவருவது என்ன என்றால், திருமணம் செய்துகொள்ள எடுக்கப்படும் முயற்சி எப்பொழுது வெற்றி பெறும் என்பது தான். இந்த வயதில் தான் வெற்றி பெரும் என்பதைவிட இவ்வளவு காலங்கள் நீங்கள் முயற்சி செய்ய வேண்டும் என்பதைத் தான் ஜோதிடம் எடுத்துக்கூறுகிறது. எந்த ஒரு நிகழ்வும் முயற்சியின்றி நடைபெறுவதில்லை. ஆனால் முயற்சி வெற்றிபெறுவது விதியின் வசம்.

18 வயதில் மாப்பிள்ளை தேடி ஆரம்பிக்கும் பெண்ணிற்கு 25 வயதில் தான் திருமணம் நடைபெறுகிறது என்றால் அது தாமதத்திருமணம் தான். அதே சமயம் 25ம் வயதில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்த உடனே திருமணம் நடக்கும என்றால் அது இளமைத் திருமணம் தான். திருமணத்திற்கு வரன் தேடுவதில் நாம் எடுத்துக்கொள்ளும் முயற்சி வெற்றி பெறப்போகும் காலத்தைத் தான் ஜோதிடம் கூறுகிறது. திருமணத்திற்கான நிலைகள் என்பது இராசிச் சக்கரத்தில் லக்னம், இராசி, இலக்கிணாதிபதி, இராசியாதிபதி, 2, 7, 11ம் பாவங்கள் மற்றும் சுக்கிரன் செவ்வாயின் நிலை. முக்கியமாக கவனிக்க வேண்டியது. லக்னம் மற்றும் 7ம் இடம்

வேதஜோதிடத்திற்கு வந்த ஜாதகத்தின் மூலம் திருமண காலத்திற்கான நிலைகளைப் பார்க்கலாம்.  வாசகர் ஒருவரின் ஜாதகக் குறிப்புகள். ரிசப இலக்கிணம். மீன ராசி. லக்கினத்திற்கு ஏழில் சூரியன், புதன். இராசிக்கு ஏழில் சுக்கிரன் இராகு. அக்டோபர் 77ல் பிறந்தவருக்கு திருமணம் தாமதமாகிக் கொண்டிருக்கிறது.

கிரகநிலைக் காரணங்கள்.
இலக்கிணாதிபதி செவ்வாய் நீசம்.
இலக்கணத்திற்கு இரண்டு மற்றும் ஏழாம் இட அதிபதி சுக்கிரன் நீசம்.
இராசிக்கு இரண்டாம் அதிபதி செவ்வாய் நீசம்
இராசிக்கு ஏழில் நீசம் பெற்ற சுக்கிரன் இராகுஉடன்.
இலக்கிணத்திற்கு ஏழில் நீசம் பெற்ற சூரியன்.   
இலக்கிணத்திற்கு 11ம் இடம் மற்றும் இராசிக்கு 11ம் இடம் நீசம் பெற்ற செவ்வாயின் பார்வை.

இது போன்ற கிரக சூழ்நிலைகளால் அவருக்கு திருமணம் தாமதமாகிக் கொண்டிருக்கிறது. ஜாதகருக்கு தற்பொழுது சுக்கிர திசை சுக்கிர புத்தி இராகு அந்தரம் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. இது திருமணம் நடைபெறக்கூடிய காலம் தான் இருப்பினும் சுக்கிரன் அந்தர காலமான 2013 டிசம்பர் முதல் 2014  ஜனவரி வரை வரக்கூடிய வாய்ப்புகளை பயன்படுத்தி விரைவில் திருமணம் நடைபெற வாழ்த்துக்கள்.

பரிகாரம் என்பது நமக்கு விதிக்கப்பட்டதை விருப்பப்படி அனுபவிப்பது தான். ஜோதிடத்தின் முன் அனைவரும் சமம் தான். அனைவருக்கும் சமமான வாய்ப்பைத் தான் இயற்கை வழங்கியுள்ளது. அதைப் பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி பெற பழகிக் கொள்ளவேண்டும்.

வருமுன் காப்போம். -  ஜோதிடத்தை அறிந்து கொள்வதன் முக்கியத்துவமே நம்மை நாம் உணர்ந்துகொள்வது தான். நமக்கு விதிக்கப்பட்டதை நாம் உணர்ந்து அதன்படி நாம் நடந்து கொள்வது தான். தாமத்திருமண கிரக சூழ்நிலைகள் இருந்தால் வெகுவிரைவில் வரன் தேடுதலைத் தொடங்கிவிடுங்கள்.

நன்றி.