-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்
Showing posts with label தினம் ஒரு திருமந்திரம். Show all posts
Showing posts with label தினம் ஒரு திருமந்திரம். Show all posts

Thursday, March 26, 2026

பஞ்ச புராணம் - ஓர் அறிமுகம்.

ஓம் நமசிவாய... திருச்சிற்றம்பலம்...

தென்னாடுடைய சிவனே போற்றி. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி.

தேவாரம், திருவாசகம், திருசைப்பா, திருப்பல்லாண்டு, திருப்புராணம் ஆகிய ஐந்து நூல்களும் பஞ்ச புராணம் என்று அழைக்கப்பெறுகிறது.  

பன்னிரு திருமுறைகளில் முதல் 7 திருமுறைகளை  திருஞானசம்பந்தர் 1 முதல் 3 வரை ,திருநாவுக்கரசர் 4,5,6 திருமுறைகளையும் , 7வது திருமுறையை சுந்தரரும்  பாடியுள்ளனர். இந்த 7 திருமுறைப்பாடல்களை இணைத்து அவற்றை நாம்  தேவாரப்பாடல்கள் என்கிறோம்.  பஞ்சபுராணப் பாடல்களில் முதல் பாடலாக அத்தேவாரப்பாடல்களில் ஒரு பாடல் இடம்பெற்றுள்ளது. 

எட்டாம் திருறை - திருவாசகம். இது மாணிக்க வாசகப் பெருமானால் இயற்றப்பட்டது. திருவாசகத்திற்கு உருகார் ஒருவாசகத்திற்கும் உருகார். அதுபோல தேனுக்கும் மேல் ஒப்பான திருவாசகம் பஞ்சபுராணப் பாடல்களின் இரண்டாவது பாடலாக இடம்பெற்றுள்ளது. 

ஒன்பதாம் திருமுறைகளான திருவிசைப்பாவும் திருப்பல்லாண்டும் பல்வேலு நாயன்மார்களால் பாடப்பட்டவை. பல நாயன்மார்கள் பாடியுள்ளனர். முக்கியமாக: திருமாளிகைத்தேவர், கருவூர்தேவர் , நம்பியாண்டார் நம்பி இன்னும் பலர். பல்வேறு அனுபவங்களைக் கொண்டது ஒன்பதாம் திருமுறை. அத் திருமுறையிலிருந்து 3 மற்றும் நான்காவது பாடல் பஞ்சபுராணப் பாடல்களாக ஓதப்படுகிறது. 

பன்னிரெண்டாம் திருமுறையான திருப்புராணம் எனப்படும் பெரியபுராணம் 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றை சேக்கிழார் பெருமகானாரால் தொகுக்கப்ட்டது. அந்த 12ம் திருமுறைப் பாடல்கள் பஞ்சபுராணப் பாடல்களினல் 5வது பாடாலாக ஓதப்படுகிறது.

பன்னிருதிருமுறைகளில் உள்ள பாடல்களை தினமும் ஓதினால் உள்ளம் மேன்மையாகும். பிறவிப் பெரும்பயன் அடையலாம் என்கின்றனர் ஆன்றோர்கள். நாமும் தினமும் இந்த பஞ்சப் புராணப் பாடல்களை மனதார ஓதி சிவமயமாவோம்.


தொடரும்.