-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்
Showing posts with label நவக்கிரக வழிபாடு. Show all posts
Showing posts with label நவக்கிரக வழிபாடு. Show all posts

Saturday, February 28, 2015

agathiyar-arudam-tamil-1-3-2

அகத்தியர் பாய்ச்சிகை ஆருடம்.


பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்கட்டை ஆகும். நான்கு முகங்களிலும் 1, 2, 3, 6 என்று குறிப்பிட்டு மூன்று முறை உருட்ட வேண்டும். கிடைக்கும் எண்களின் அடிப்படையில் பலன்களை அகத்திய முனிவர் அருளியுள்ளார். இதில் முதல் முறை ஒன்றும் இரண்டாம் முறை மூன்றும்  மூன்றாம் முறை இரண்டும்வந்தால் நிகழக்கூடிய நிகழ்வுகளின் தொகுப்பாக அகத்தியர் உரைப்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது

1-3-2

பாடல்

ஆமப்பா விழுந்த எண்தான் ஒன்று மூன்றிரண்டேயாகும்
காமத்தையளித்த மங்கை கைவிடுவாளேயுன்னை
ஷேமத்தை கெடுக்கவுந்தன் சொத்துக்களொழிந்து போகும்
போமப்பா உந்தன் கீர்த்தி பூஜிப்பாய் நவக்கிரகத்தை.

விளக்கம்

ஒன்றும், மூன்றும், இரண்டு விழுமானால் உனக்கு அபிமான தாரமாகிய ஓர் மங்கை உன் பொருள்கள் அனைத்தையும் அபகரித்து உன்னை கைவிடுவாள். அதனால் உன் நலம் கெடும். உனக்கு அபகீர்த்தி உண்டாகும். பலவிதமான கவலைகளும் உண்டாகும். ஆனால் இன்று முதல் ஒன்பது நாள் நவக்கிரக பூஜை செய் என்கிறார்.

Monday, January 12, 2015

நவக்கிரக வழிபாடு தேவையா?

நவக்கிரகங்களை வழிபடலாமா?

வேண்டாம்.
ஏன் என்பதற்கு முன்னால் உங்களுக்கு ஒரு கேள்வி.
வேலை செய்பவர்களுக்கு என்ன அழகு?  சொன்ன வேலையை திறம்பட குறித்த நேரத்தில் முடித்துத் தருவது.
நன்கு திறம்பட வேலையை முடித்துத் தர என்ன தெரிந்திருக்க வேண்டும்? நன்றாக வேலைபார்க்கத் தெரிந்திருக்க வேண்டும்.
அப்படி ஒழுக்கமாக நியாயமாக வேலைசெய்பவரை சுதந்திரமாக செயல்பட விடாமல் ஓயாமல் தொந்தரவு செய்து கொண்டிருப்பது சரியா?
தவறு என்றால் நவக்கிரகங்கள் சுதந்திரமாக செயல்பட தயவு செய்து வழிபாடு என்ற பெயரில் தொந்தரவு செய்யாதீர்கள்.

நன்றும் தீதும் பிறர் தர வாரா. இது இயற்கையின் தத்துவம் கிரகங்கள் உங்களின் முன்வினைப் பயனுக்கேற்ப இப்பிறவியில் நீங்கள் அடைய இருக்கும் சுக துக்கங்களுக்கான சூழ்நிலைகளை உருவாக்கக் கடமைப் பட்டவர்கள். அவர்களை சுதந்திரமாக வேலை செய்ய அனுமதியுங்கள்.

ஜோதிடம் இயற்கை. யாவருக்கும் பொதுவானது. உங்களின் சுக துக்கங்கள் உங்களை மட்டும் பாதிக்காது. உங்களோடும் உங்களின் செயல்களோடும் தொடர்புடைய அனைவரையும் பாதிக்கிறது. நீங்கள் ஒருவருக்கு உதவி செய்தால் அது உங்களின் புண்ணியம் மட்டுமல்ல. உதவி பெற்றவரோடைய அதிர்ஷ்டமும் அதில் அடங்கியுள்ளது. மழை பொழிய வேண்டுபவர்கள் மத்தியில் வேண்டாம் என்று நினைப்பவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். அப்படியென்றால் இயற்கை யாருக்கு சாதமாக அமையும். இயற்கை என்பது நவக்கிரகங்களின் தூண்டுதலால் செயல்படுகிறது. வெப்பத்திற்கு சூரியன் என்றால் குளிர்ச்சிக்கு சந்திரன். யோகத்திற்கு குரு என்றால் போகத்திற்கு செவ்வாய், சுக்கிரன். பேரின்பத்திற்கு கேது என்றால் சிற்றின்பத்திற்கு ராகு. எல்லோருக்கும் வளைந்து கொடுக்கும் தன்மை புதன் என்றால் யாருக்கும் வளையாமல் நடுநிலையோடு பலன் தரும் சனி.  இப்படி நவக்கிரக்கிரகங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையது தான். நன்மை தீமை இரண்டும் சேர்ந்து தான் வாழ்க்கை. வாழப் பழகிக் கொள்ளுங்கள். அனுபவங்கள் வேண்டாம் என்று முடிவு செய்தால் வாய்ப்புகளை இழக்க வேண்டி வரும்.

இயற்கையை மாற்ற முயலுவது முடியாத காரியம் மட்டுமல்ல கூடாத காரியமும் கூட. இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை அனுபவிக்க பழகிக் கொள்வோம். பிறகு ஏன் ஜோதிடம் தெரிந்து கொள்ள வேண்டும் ? ஜோதிடத்தால் என்ன பலன்?

தொடர்வோம்...