-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்
Showing posts with label திருமண காலம். Show all posts
Showing posts with label திருமண காலம். Show all posts

Tuesday, July 14, 2015

திருமணம் தாமதமாகும் கிரக சூழ்நிலைகள் - பரிகாரங்கள்

திருமணம் தாமதமாகும் கிரக சூழ்நிலைகள் - பரிகாரங்கள்

தி,மு. மற்றும் தி.பி. அதாவது திருமணத்திற்கு முன் மற்றும் திருமணத்திற்கு பின் என்ற இரு வாழ்க்கை முறைதான் மிகவும் சிறந்தது. திருமணத்திற்குப் பின் நிச்சயம் ஒரு மாற்றம் என்ற ஒன்று வரவேண்டும். திருமணத்திற்கு முன்பு எப்படி இருந்தேனோ அப்படியே மாறாமல் திருமணத்திற்குப் பின்னும் இருக்கிறேன் என்று கூறும்படி வாழ்வது சிறப்பானது அல்ல. காரணம், நம்முடைய தகுதிகள் உயரும் போது நம்முடைய எண்ணங்களில் செயல்களில் முன்னேற்றம் ஏற்பட்டு மாற்றங்களை உருவாக்க வேண்டும். திருமணம் ஒரு சடங்கு அல்ல. வாழ்வியல் முறை. உள்ளத்தையும் உடலையும் பக்குவப்படுத்தக்கூடிய வாழ்வியல் நடைமுறைதான் திருமணம். அப்படிப்பட்ட திருமண வைபவம் விரைவில் நடந்தால் மிக நல்லது. அது அனைவருக்கும் அமைவதில்லை. உண்ண உணவும் உடுக்க உடையும் எப்படி அவசியமோ அப்படித்தான் திருமணமும். நிச்சயம் காலம் கடப்பதற்குள் திருமணத்தை முடிக்க வேண்டும்.

திருமணம் தாமதவாவது ஒன்றும் பெரிய பாவச் செயல் அல்ல. நல்ல வரன் அமைவது தான் முக்கியம். குரு எனப்படும் வியாழன் கிரகம் மிகுந்த சுப கிரகம். குரு பார்க்க கோடி நன்மை ஆனால் களத்திர பாவம் எனப்படும் 7ம் பாவத்தை தனித்த குரு பார்த்தால் திருமணம் தாமதமாகிறது. பல சமயங்களில் 7ம் பாவாதிபதியைப் பார்த்தாலும் திருமணம் தாமதமாகத் நடக்கிறது. ஆனால் நிச்சயம் திருணம வாழ்க்கை உண்டு. அதில் மாற்றம் இல்லை. மிக விரைவாக திருமணம் நடைபெற என்ன பரிகாரம்.



திருமணம் விரைவில் நடைபெற என்ன செய்ய வேண்டும்


குரு - புத்திர காரகர். பெற்றோர் பிள்ளைக்கு நல்ல வரனைத் தேடிக் கொடுக்கக் கூடிய பொறுப்பில் உள்ளனர். அதனால் ஓரு பிள்ளை உள்ளவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள் உள்ள வீடுகளில் வரன் தேடலாம். பிள்ளைகள் அதிகம் உள்ளவர்கள் ஒரு பிள்ளைமட்டுமே உள்ள வீடுகளில் வரன்களைத் தேடுவதால் நல்ல பலன் விரைவில் கிட்டும்.

குரு ஓரை நடப்பில் உள்ள நேரங்களில் திருமணம் தொடர்பான செயல்களை மேற்கொண்டால் நல்ல பலன் விரைவில் கிட்டும்.

ஜாதகத்தில்  ஜென்ம குருவிற்கு 2, 5, 7, 9, 11 ஆகிய இடங்களுக்கு கோச்சார குரு வரும் காலங்களிலும், குரு அந்தரம் சூட்சும அந்தர காலங்களிலும் திருமணம் நடைபெற வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் அந்த காலங்களில் விரைந்து செயலாற்றினால் வெற்றி நிச்சயம்.

 தொடரும்.

Friday, December 20, 2013

காதல் திருமணம் - தேவைகளும் தீர்வுகளும் ஜோதிட விளக்கம்

தேவைகளைப் புரிந்திருந்தால் மட்டுமே தேடுதல்கள் மூலம் விடை கிடைக்கும். ஜோதிடத்தில் தனிமனித வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து கேள்விகளுக்கும் விடை உண்டு. கேள்விகள் என்ன என்பதைவிட தேவைகள் என்ன என்பதை ஜாதகர்களும் ஜோதிடர்களும் புரிந்திருக்க வேண்டும். அப்பொழுது தான் சரியான தீர்க்கமான முடிவுகளைத் தர முடியும். 

சில நாட்களுக்கு முன்பு சகோதரி ஒருவர் வேத ஜோதிடத்திடம் கேட்ட கேள்வி – ” என்னுடைய காதலை என் பெற்றோர்கள் ஏற்பார்களா? ” என்று. இது சாதரணமான கேள்வி தானே அனைத்து காதலர்களுக்கும் இயல்பாக வரக்கூடிய சந்தேகம் தானே எனத் தோன்றும். ஆனால் இதற்கு ஆம் அல்லது இல்லை என்ற ஒற்றை வார்த்தையில் பலன் கொடுக்க முடியாது. காரணம் இது ஜாதகரின் மனநிலையும்  அவரின் பெற்றோரின் மனநிலையும் அடங்கியுள்ளது. இருவருடைய ஜாதகமும் இருந்தால் தான் யாருடைய ஆதிக்கம் அங்கு செல்லுபடியாகும் என்று புரியும்.

மேலும் இந்த கேள்வியே தேவையற்றது. திருமண வாழ்க்கையின் நிலை என்பது தான் கேள்வியின் மையக் கருத்து. பெற்றோர்கள் சம்மதத்துடன் நடைபெறும் காதல் திருமணங்களும் உண்டு. பெற்றோரை எதிர்த்து செயல்படும் காதல் திருமணங்களும் உண்டு. பெற்றோருக்காக காதலைத் தியாகம் செய்து நடைபெறும் திருமணங்களும் உண்டு. காதலுக்காக வாழ்க்கையைத் துறக்கும் நிலைகளும் உண்டு. அடிப்படையான விஷயம், திருமண வாழ்க்கையின் விதி என்ன என்பது தான். இந்த விதி செயல்படுவதற்கான காரணிகள் தான் பெற்றோர்கள். எதிர்ப்பும் ஏற்பும் விதியின் விளையாட்டுகள் தான்.

காதலர்கள் இருவருடைய ஜாதகத்திலும் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும் என்ற நிலையில் பெற்றோரின் சம்மதம் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் மிக அதிகம். அப்படியில்லையென்றாலும் விதி அவர்களை சேர்த்து வாழ வைத்துவிடும். திருமணவாழ்க்கை திருப்தி தராத நிலையில் காதலர்கள் எடுக்கும் முடிவு நிச்சயம் ஏமாற்றத்தைத் தான் தரும். எல்லா காலங்களிலும் இந்த நிலை இருக்காது. சாதகமான திசா புத்தி அந்தர காலங்களில் நிலைமை மாறும். அது வரை பொறுத்திருந்தால் நிச்சயம் பொறுமைக்கு வெற்றி கிடைக்கும்.


நன்றி.

Tuesday, October 1, 2013

தாமதத் திருமணம் - விளக்கமும் - விடையும்

தாமதத் திருமணம் - விளக்கமும் - விடையும் 

இன்றைய இளைஞனின் தேவைகள் இரண்டு. ஒன்று வேலை மற்றொன்று  திருமணம். இந்த இரண்டும் நிறையப் பேருக்கு சரியான காலத்தில் அமைவதில்லை. எதற்காக இந்த இரண்டிற்கு மட்டும் அதிக முக்கியத்துவம். உடல் மற்றும் மனத் தேவைகளுக்காக திருமணமும்கௌரவம் மற்றும் பொருளுளகத் தேவைகளுக்காக வேலையும் கட்டாயம் தேவைப் படுகிறது. காலம் தவறிய திருமணம், தேவையை நிவர்த்தி செய்யாத வேலையும் திருப்தியைத் தருவதில்லை. இந்த இரண்டில் எதற்கு மிக முக்கயத்துவம் என்றால் அது திருமணத்திற்குத் தான்.

காரணம்.  தான் அன்பு செலுத்த கிடைக்கும் வாய்ப்பு திருமணத்தின் மூலம் தான் பெரும்பாலோருக்கு கிடைக்கிறது.  நான் என்றவரைத் நாம் என்று ஆக்குவது தான் திருமணம். அப்படிப்பட்ட திருமண வாழ்க்கை விரைவில் வந்து விட்டால் நிம்மதியாக மற்ற தேவைகளுக்காக தேட ஆரம்பிக்கலாம். சரி. எப்பொழுது திருமணம் கைகூடும்.

ஜாதகப் பலன்கள் நடக்கக்கூடிய கால நேரங்களை அறிந்து கொள்ள உதவுவது திசா புத்தி அந்தரங்கள் தான்.  கோச்சார நிலை அக்காலத்தை உறுதிப்படுத்துமேயன்றி உருவாக்காது. பொதுவாக இரண்டாம் அதிபதி புத்தி அல்லது அந்தர காலங்களில் திருமணம் நடப்பது அதிகமாக உள்ளது. ஒவ்வொரு திசா நடப்பின் போதும் இரண்டாம் அதிபதி புத்தி காலங்கள் நடக்கும். அதே போல ஒவ்வொரு புத்தி காலங்களிலும் இரண்டாம் அதிபதியின் அந்தர காலங்கள் நடக்கும். இது போன்ற சாதகமான திசா புத்தி அந்தர காலங்களில் கோச்சாரக் கிரகங்களும் சாதகமாக இருந்தால் அந்த காலங்களில் திருமண வாய்ப்புகள் கூடி வரும்.


ஒரு சிலருக்கு இளம் வயதில் (18 – 21) திருமணம் நடைபெறும். ஒரு சிலருக்கு நடுத்தர நிலையில் திருமணம் நடைபெறும் (27-30). ஒரு சிலருக்கு காலம் தாமதமாக திருமணம் நடைபெறும் (30வயதுக்கு மேல்). தாமதத்திருமணம் என்பது வயதின் அடிப்படையில் கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாதது. ஜோதிடம் கூறவருவது என்ன என்றால், திருமணம் செய்துகொள்ள எடுக்கப்படும் முயற்சி எப்பொழுது வெற்றி பெறும் என்பது தான். இந்த வயதில் தான் வெற்றி பெரும் என்பதைவிட இவ்வளவு காலங்கள் நீங்கள் முயற்சி செய்ய வேண்டும் என்பதைத் தான் ஜோதிடம் எடுத்துக்கூறுகிறது. எந்த ஒரு நிகழ்வும் முயற்சியின்றி நடைபெறுவதில்லை. ஆனால் முயற்சி வெற்றிபெறுவது விதியின் வசம்.

18 வயதில் மாப்பிள்ளை தேடி ஆரம்பிக்கும் பெண்ணிற்கு 25 வயதில் தான் திருமணம் நடைபெறுகிறது என்றால் அது தாமதத்திருமணம் தான். அதே சமயம் 25ம் வயதில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்த உடனே திருமணம் நடக்கும என்றால் அது இளமைத் திருமணம் தான். திருமணத்திற்கு வரன் தேடுவதில் நாம் எடுத்துக்கொள்ளும் முயற்சி வெற்றி பெறப்போகும் காலத்தைத் தான் ஜோதிடம் கூறுகிறது. திருமணத்திற்கான நிலைகள் என்பது இராசிச் சக்கரத்தில் லக்னம், இராசி, இலக்கிணாதிபதி, இராசியாதிபதி, 2, 7, 11ம் பாவங்கள் மற்றும் சுக்கிரன் செவ்வாயின் நிலை. முக்கியமாக கவனிக்க வேண்டியது. லக்னம் மற்றும் 7ம் இடம்

வேதஜோதிடத்திற்கு வந்த ஜாதகத்தின் மூலம் திருமண காலத்திற்கான நிலைகளைப் பார்க்கலாம்.  வாசகர் ஒருவரின் ஜாதகக் குறிப்புகள். ரிசப இலக்கிணம். மீன ராசி. லக்கினத்திற்கு ஏழில் சூரியன், புதன். இராசிக்கு ஏழில் சுக்கிரன் இராகு. அக்டோபர் 77ல் பிறந்தவருக்கு திருமணம் தாமதமாகிக் கொண்டிருக்கிறது.

கிரகநிலைக் காரணங்கள்.
இலக்கிணாதிபதி செவ்வாய் நீசம்.
இலக்கணத்திற்கு இரண்டு மற்றும் ஏழாம் இட அதிபதி சுக்கிரன் நீசம்.
இராசிக்கு இரண்டாம் அதிபதி செவ்வாய் நீசம்
இராசிக்கு ஏழில் நீசம் பெற்ற சுக்கிரன் இராகுஉடன்.
இலக்கிணத்திற்கு ஏழில் நீசம் பெற்ற சூரியன்.   
இலக்கிணத்திற்கு 11ம் இடம் மற்றும் இராசிக்கு 11ம் இடம் நீசம் பெற்ற செவ்வாயின் பார்வை.

இது போன்ற கிரக சூழ்நிலைகளால் அவருக்கு திருமணம் தாமதமாகிக் கொண்டிருக்கிறது. ஜாதகருக்கு தற்பொழுது சுக்கிர திசை சுக்கிர புத்தி இராகு அந்தரம் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. இது திருமணம் நடைபெறக்கூடிய காலம் தான் இருப்பினும் சுக்கிரன் அந்தர காலமான 2013 டிசம்பர் முதல் 2014  ஜனவரி வரை வரக்கூடிய வாய்ப்புகளை பயன்படுத்தி விரைவில் திருமணம் நடைபெற வாழ்த்துக்கள்.

பரிகாரம் என்பது நமக்கு விதிக்கப்பட்டதை விருப்பப்படி அனுபவிப்பது தான். ஜோதிடத்தின் முன் அனைவரும் சமம் தான். அனைவருக்கும் சமமான வாய்ப்பைத் தான் இயற்கை வழங்கியுள்ளது. அதைப் பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி பெற பழகிக் கொள்ளவேண்டும்.

வருமுன் காப்போம். -  ஜோதிடத்தை அறிந்து கொள்வதன் முக்கியத்துவமே நம்மை நாம் உணர்ந்துகொள்வது தான். நமக்கு விதிக்கப்பட்டதை நாம் உணர்ந்து அதன்படி நாம் நடந்து கொள்வது தான். தாமத்திருமண கிரக சூழ்நிலைகள் இருந்தால் வெகுவிரைவில் வரன் தேடுதலைத் தொடங்கிவிடுங்கள்.

நன்றி.