-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்
Showing posts with label திருமணப் பொருத்தம். Show all posts
Showing posts with label திருமணப் பொருத்தம். Show all posts

Wednesday, June 10, 2015

திருமணம் விரைவில் நடைபெற என்ன செய்ய வேண்டும்

திருமணத்திறகு வரன் பார்க்கும் படலம் பெரிய தொடர்கதையாக இருப்பதாக பெரும்பாலோர் கூறுகின்றனர். இதற்கு காரணம் ஜோதிடம் அல்ல என்பதை பலமுறை வேதஜோதிடம் எடுத்துக்கூறியிருக்கிறது. திருமணம் விரைவில நடைபெற நாம் எடுக்கும் முயற்சிகளை சற்று முறைப்படுத்தினால் வெற்றி எளிதில் கிடைக்கும். ஆனால் திருமண வாழ்வின் பலன் அவரவர் செய்த வினைப்பயன் படிதான் நடக்கும்.
திருமணம் விரைவில் நடைபெறத் தடையாக இருப்பது எது
திருமணம் விரைவில் நடைபெற பலவிதப் பரிகாரங்கள் செய்தும் பலனில்லையே என்று நொந்து கொண்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதற்கு என்னதான் தீர்வு. திருமணம் உரித்த காலத்தில் நடைபெற நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை விட எந்தக் காலத்த்தில் அதைச் செய்ய வேண்டும் என்பது தான் விடை. வரன் பார்க்கச் செல்லும் காலம், பெண்ணும் ஆணும் முதலில் சந்திக்கும் காலம், ஜாதகத்தைப் பொருத்தம் பார்க்கும் நேரம் மேலும் ஜாதகரின் உடன் செல்பவர்கள் இப்படி ஒவ்வொரு நிலையிலும் ஜாதகருக்கு சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கி வந்தால் விரைவில் திருமணம் நடைபெறும். எப்பொழுதும் வரன் பார்க்கச் செல்லும் போது அஸ்வினி புணர்புசம், புசம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, அனுசம் திருவோணம், அவிட்டம் சதயம் ஆகிய நட்சத்திரங்கள் நடப்பில் உள்ள நாட்களில் வரன் பார்க்கச் செல்வது உத்தமம். மேலும் துவிதியை திருதியை பஞ்சமி சப்தமி, தசமி துவாதிசி திரியோதிசி ஆகிய திதிகளாக இருந்தால் உத்தமம். செவ்வாய் சனி தவிர்த்த நாட்களில் செல்வது உத்தமம். ஜாதகரின் தாராபலம் மிக்க நாட்கள் சிறப்பான பலன் தரும். சுக்கிர ஓரையும் புதன் ஓரையும் நல்லது. இப்படி இயற்கை சாதகமாக உள்ள நாட்களில் திருமணத்திற்கான செயல்களைச் செய்தால் விரைவில் திருமணம் நடைபெறும்.



நன்றி. 

Friday, December 20, 2013

காதல் திருமணம் - தேவைகளும் தீர்வுகளும் ஜோதிட விளக்கம்

தேவைகளைப் புரிந்திருந்தால் மட்டுமே தேடுதல்கள் மூலம் விடை கிடைக்கும். ஜோதிடத்தில் தனிமனித வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து கேள்விகளுக்கும் விடை உண்டு. கேள்விகள் என்ன என்பதைவிட தேவைகள் என்ன என்பதை ஜாதகர்களும் ஜோதிடர்களும் புரிந்திருக்க வேண்டும். அப்பொழுது தான் சரியான தீர்க்கமான முடிவுகளைத் தர முடியும். 

சில நாட்களுக்கு முன்பு சகோதரி ஒருவர் வேத ஜோதிடத்திடம் கேட்ட கேள்வி – ” என்னுடைய காதலை என் பெற்றோர்கள் ஏற்பார்களா? ” என்று. இது சாதரணமான கேள்வி தானே அனைத்து காதலர்களுக்கும் இயல்பாக வரக்கூடிய சந்தேகம் தானே எனத் தோன்றும். ஆனால் இதற்கு ஆம் அல்லது இல்லை என்ற ஒற்றை வார்த்தையில் பலன் கொடுக்க முடியாது. காரணம் இது ஜாதகரின் மனநிலையும்  அவரின் பெற்றோரின் மனநிலையும் அடங்கியுள்ளது. இருவருடைய ஜாதகமும் இருந்தால் தான் யாருடைய ஆதிக்கம் அங்கு செல்லுபடியாகும் என்று புரியும்.

மேலும் இந்த கேள்வியே தேவையற்றது. திருமண வாழ்க்கையின் நிலை என்பது தான் கேள்வியின் மையக் கருத்து. பெற்றோர்கள் சம்மதத்துடன் நடைபெறும் காதல் திருமணங்களும் உண்டு. பெற்றோரை எதிர்த்து செயல்படும் காதல் திருமணங்களும் உண்டு. பெற்றோருக்காக காதலைத் தியாகம் செய்து நடைபெறும் திருமணங்களும் உண்டு. காதலுக்காக வாழ்க்கையைத் துறக்கும் நிலைகளும் உண்டு. அடிப்படையான விஷயம், திருமண வாழ்க்கையின் விதி என்ன என்பது தான். இந்த விதி செயல்படுவதற்கான காரணிகள் தான் பெற்றோர்கள். எதிர்ப்பும் ஏற்பும் விதியின் விளையாட்டுகள் தான்.

காதலர்கள் இருவருடைய ஜாதகத்திலும் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும் என்ற நிலையில் பெற்றோரின் சம்மதம் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் மிக அதிகம். அப்படியில்லையென்றாலும் விதி அவர்களை சேர்த்து வாழ வைத்துவிடும். திருமணவாழ்க்கை திருப்தி தராத நிலையில் காதலர்கள் எடுக்கும் முடிவு நிச்சயம் ஏமாற்றத்தைத் தான் தரும். எல்லா காலங்களிலும் இந்த நிலை இருக்காது. சாதகமான திசா புத்தி அந்தர காலங்களில் நிலைமை மாறும். அது வரை பொறுத்திருந்தால் நிச்சயம் பொறுமைக்கு வெற்றி கிடைக்கும்.


நன்றி.

Monday, December 16, 2013

காதல் திருமணம் வெற்றிபெறக்கூடிய விதியும் விளக்கமும்.


காதல் திருமணம் வெற்றிபெறக்கூடிய விதியும் விளக்கமும்.

தனக்கு வரவிருக்கும் குடும்பத் துணையை தானே தேர்ந்தெடுத்தல் காதல் திருமணமாகும். அதே துணையை பெற்றோரோ அல்லது மற்றவர்களோ தேர்ந்தெடுத்துக் கொடுப்பது நிச்சயிக்கப்பட்ட திருமணம். காதல் என்ற ஒரு உணர்வு ஏற்படுவதற்கு மனமும் சூழ்நிலைகளும் காரணமாக அமைகின்றன. பயமும் தைரியமும் மனத்தின் வெளிப்பாடாகவும், நண்பர்களும் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளும் சூழ்நிலையின் வெளிப்பாடாக அமைகின்றன.

வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் ஜோதிடம் முன்கூட்டியே தெரிவித்துக்கொண்டு தான் இருக்கிறது. காதல் வசப்படுவதற்குரிய மனமும் சூழலும் எவ்வாறு அமையும் என்பதை ஜாதகம் எடுத்துக்காட்டிவிடும். மனம் மற்றும் சூழ்நிலை இந்த இரண்டிற்கும் ஜோதிட காரணிகள் என்ன என்பதைக் காணலாம்.

காதலுக்கு முக்கிய காரணியாக அமைவது மனம். அந்த மனத்திற்கு காரகர் சந்திரன். எதிர்ப்பு வரக்கூடிய செயல் என்று தெரிந்தும் அச்செயலைச் செய்வதற்கு ஒரு தைரியம் வேண்டும். அது தான் 3ம் இடம் தைரிய ஸ்தானம்.
காதலுக்கு மற்றொரு முக்கிய காரணி சூழ்நிலை, சூழ்நிலை என்பது நமக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் மற்றும் அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளக்கூடிய புத்திசாலித்தனம். ஜோதிடத்தில் புத்திசாலித்தனம் என்பது 5ம் இடமாகவும் காதலுக்குரிய வாய்ப்புகள் என்பது வாழ்க்கைத்துணைக்கான 7ம் இடமாகவும் கருதப்படுகிறது. கிரகங்களில் செவ்வாயும் சுக்கிரனும் புதனும் முக்கியமாகக் கருதப்படுகிறது. பெண்களுக்கு களத்திரம் செவ்வாயாகவும் ஆண்களுக்கு சுக்கிரனாகவும் இருவருக்கும் உள்ள உறவு முறைகள் புதனாகவும் அமைகிறது.

மேற்கூறிய கிரகங்களும் பாவங்களும் ஒன்றுக்கொன்று தொடர்பில் இருக்கும் பொழுது காதல் வயப்படுதல் நிச்சயம். அது திருமணத்தில் முடியுமா அல்லது ஒரு தலைக் காதலாகவே முடிந்துவிடுமா அல்லது காதல் வேறு திருமணம் வேறு என்ற நிலையைத் தருமா என்பதையெல்லாம் அவரவர் திசாபுத்திஅந்தர காலங்களை வைத்து கூறிவிடமுடியும்.

பொதுவாக மூன்றாம் இடத்தில் தேய்பிறைச் சந்திரனும், 5 மற்றும் 7ம் இடங்களில் செவ்வாய் சுக்கிரன் புதன் (ஏதேனும் ஒரு கிரகம் வக்கிரத்தில்) இருக்கக்கூடிய சூழ்நிலைகள் காதலிலும் திருமணத்திலும் வெற்றியைத் தருவதில்லை. திருமணத்தில் வெற்றி பெறும் ஜாதகங்கள் மட்டுமே காதலிலும் வெற்றி பெறும். அப்படி இல்லையென்றால் திருமண வாழ்க்கையோ அல்லது காதல் வாழ்க்கையோ விரைவில் முடிவுக்கு வந்து விடும். அதனால் ஆண் பெண் இருவருடைய ஜாதகத்திலும் (குறைந்தபட்சம் ஒருவருடைய ஜாதகத்திலாவது) திருப்தியான மண வாழ்க்கைக்குரிய கிரக அமைப்புகள் இருந்தால் நிச்சயம் எதிர்ப்புகளையும் மீறி திருமணம் செய்து கொள்ளலாம். அப்படி இல்லையென்றால் பெற்றோரிடம் பொறுப்பை ஒப்படைப்பது சிறந்த முடிவாகும். எதிர்ப்பால் சாதிக்க முடியாததை அன்பாலும் ஆசிர்வாதத்தாலும் சாதிக்க முடியும்.

நன்றி.

Thursday, October 24, 2013

திருமணம் தாமதமாவதற்கு ஜாதகம் காரணமா?

திருமணம் தாமதமாவதற்கு ஜாதகம் காரணமா?

திருமணத்திற்கு வரன் பார்க்கும் படலம் வருடக்கணக்கில் நீடிப்பதற்கு என்ன காரணம்?. நாம் எதிர்பார்ப்பது கிடைக்கவில்லை என்பது தான். எதிர்பார்ப்பு என்பது ஒரு குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் மாறு படலாம். படித்த வரனாக வேண்டும் என்பது பையனுடைய கனவாக இருக்கலாம். ஆனால் நகை அதிகம் போட்டு வரவேண்டும் என்பது அன்னையின் ஆசையாக இருக்கலாம். பெண் வீட்டுக்காரர்கள் அடக்கமாக இருக்க வேண்டும் என்று அப்பா நினைக்கலாம். இப்படி ஒவ்வொருவரும் ஒரு எதிர்பார்ப்புடன் தான் திருமணத்திற்கு வரன் தேடுகிறார்கள். இதற்கு பொதுவான காரணமாக ஜாதகம் சரியில்லை என்ற சொல்லை முன் வைக்கின்றனர். நாங்கள் பார்த்த இடத்தில் ஜாதகப் பொருத்தம் சரியாக உள்ளது என்று பெண் வீட்டில் கூறினால், இல்லை இல்லை எங்கள் ஜோசியர் செய்யக்கூடாது என்று கூறிவிட்டார் என்று ஜோதிடர் மீது பழியைப் போட்டுவிடுகின்றனர். ஜாதகப் பொருத்தம் மட்டும் பார்த்தால் நிச்சயமாக யாருக்கும் திருமணம் தாமதமாகாது. அதையும் தாண்டிய எதிர்பார்ப்புகள் தான் தாமதத்திற்கு காரணம். அந்த எதிர்பார்ப்புகள் எப்படி அமைகின்றன? யாரால் இந்தத் தாமதம்?

இந்தக் கட்டுரையின் நோக்கம் யாரையும் குறைசொல்லவது அல்ல. நம்முடைய சூழ்நிலையைப் புரிந்து கொள்வது தான். நம்மையும் மீறி சில செயல்கள் நடைபெறுகின்றன. நம் நம்பிக்கைக்குரிய நபர்கள் நமக்கு எதிராக செயல்படுவதும், நமக்கு ஆகாது என்று நினைப்பவர்கள் உண்மையில் நல்வர்களாகவும் இருக்க வாய்ப்புண்டு. நம்மால் உறுதியாக முடிவெடுக்க முடியாத நிலையில் ஜோதிடம் கைகொடுக்கிறது. உண்மையைப் புரிய வைக்கிறது. இது அனுபவத்தில் கண்ட உண்மை.

நன்கு படித்த வேலையில் உள்ள ஒரு ஜாதகருக்கு ஐந்து வருடத்திற்கு மேலாக வரன் தேடிக் கொண்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஆயிரம் ஜாதகங்களுக்கு மேல் பொருத்தம் பார்த்தாகிவிட்டது. இன்னும் அமையவில்லை. காரணம் என்ன என்று கேட்டால் களத்திர தோச ஜாதகம் அதனால் அமையவில்லை என்று பதில் வருகிறதாம். இதற்கான காரணம் என்ன? இதனை எப்படி சரிசெய்வது என்று அந்த ஜாதகர் கேட்டிருந்தார். அந்த ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்ததில் தாமதத்திருமண நிலைதான் இருந்தது. ஆனால் அதற்கான காரணம் என்ன என்பது தான் ஜாதகரின் கேள்வி.

ஜாதகத்தில் உள்ள நிலைகள்.

கேமத்துருவ யோகம். – சந்திரன் இருக்கும் இராசிக்கு முன்னும் பின்னும் கிரகங்கள் இல்லாத நிலை. இந்த நிலையில் உள்ளவர்கள் எளிதில் எதிலும் ஏமாறும் தன்மை உடையவர்கள்.

ஏழாம் இடத்தை பாதிக்கும் கிரகங்கள். – செவ்வாய், புதன், சந்திரன்.

செவ்வாய் – சகோதர சகோதரிகள்.
புதன் – கல்வி, மாமன்மார்க்ள.
சந்திரன் – சுய புத்தி – தாய்.

மேலே உள்ள நிலைகளை ஒன்று சேர்த்து பார்த்த போது ஒரு விடை கிடைத்தது. தாய் மற்றும் தாய் வழி மாமன்கள், சகோதர சகோதரிகள் மற்றும் அவரது கணவன் மற்றும் குடும்பம்., ஜாதகரின் சுய முடிவு. இந்த மூன்று பேரும் தான் திருமணம் தாமதமாவதற்கு காரணம். எப்படி இந்தக் காரணம் காரியமாக மாறுகிறது என்பதைப் பார்ப்போம்.

இந்த ஜாதகருக்கு வரும் வரன்களில் சரி பாதி பொருத்தம் உள்ள ஜாதகங்கள் தான் வருகிறது. இதில் தன் படிப்புக்கேற்ற வரன் இதுஇல்லை என்று ஜாதகர் சிலவற்றை மறுத்துள்ளார். பெண் அழகாக இல்லை என்று சில வரன்களை தாய் மறுத்துள்ளார். தனது மகளை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி மூத்த சகோதரி வற்புறுத்துகிறார். இப்படி இந்த சூழ்நிலைகள் தான் ஜாதகரின் திருமணத்தை தாமதப்படுத்திக் கொண்டு வருகின்றன.

ஜாதகருக்கு வாழ்க்கையில் நடந்து கொண்டிருப்பதைத் தான் ஜோதிடம் விளக்கியுள்ளது என்று விளக்கிய பின்பு தான் ஜாதகருக்கு தெளிவு பிறந்தது. இந்தப் பிரச்சனையை தீர்ப்பதற்கு என்ன வழி என்று கேட்டார்.

ஜாதகருடைய திருமண வாழ்க்கையில் மாமனார் குடும்பத்துடன் இணக்கமான சூழ்நிலையில் இருக்க முடியாது. இதனால் திருமணவாழ்வில் சங்கடங்கள் குழப்பங்கள் ஏற்படும். இதனை மாற்ற முடியாது. அனுபவித்துத்தான் ஆகவேண்டும். இது அவருடைய விதி.

ஜாதகப் பொருத்தம் சரியாக இருந்தால் சகோதிரியின் மகளை திருமணம் செய்துகொள்வது சரியான தீர்வாக இருக்கும். குடும்பத்தில் வரும் பிரச்சனைகளை முடிந்தளவு குறைப்பதற்கு இது சரியான முடிவாக இருக்கலாம் என்று கூறப்பட்டது.

ஜோதிட ரீதியாக தாமதத் திருமணத்திற்கான விளக்கமும் விடையும் கொடுத்துவிட்டோம். இதற்கான வேறு பல தீர்வுகளும் இருக்கலாம். அல்லது வேத ஜோதிடத்தின் தீர்வுகளில் திருத்தங்கள் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் உங்களின் கருத்தக்களை எதிர்பார்க்கிறோம்.

நன்றி.

Wednesday, November 28, 2012

திருமணத்திற்கு பின் வரும் பிரச்சனைகளும் ஜோதிடத் தீர்வுகளும்.

திருமணத்திற்கு பின் வரும் பிரச்சனைகளும் ஜோதிடத் தீர்வுகளும்.

விதிக்கப்பட்டதை அனுபவிப்பதேயன்றி வேறுஒன்றும் செய்வதற்கில்லை. அப்படியானால் நம்முடைய முயற்சி, வேண்டுதல்கள், தியாகம் இவற்றிற்கெல்லாம் என்ன பயன்?
பரிகாரங்கள் என்ற ஒன்று இல்லவே இல்லையா? என்றால்,  இதற்கெல்லாம் பதில் விதியை அனுபவிப்பது தான். ஆனால் நம் விருப்பப்படி அனுபவிப்பது. அது எப்படி?

அனைவருடைய திருமண வாழ்க்கையிலும் சிறு சிறு பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். பிரச்சனைகள் இல்லாத் வாழ்க்கை இல்லவே இல்லை. காரணம் தனிமனிதனாக இருக்கும் போது நாம் ஒருவர் மட்டும்தான். நம்முடைய பிரச்சனைக்குரிய தீர்வு நாம் மட்டும் எடுப்பதே ஆகும். அதே சமயம், திருமணத்திற்குப்பின் தன்னுடைய மனைவி அல்லது கணவன் குழந்தைகள் இவர்களின் மனநிலையையும் அவர்களின் தேவைகளும் சேர்ந்து கொள்கிறது. நம்முடைய தீர்வு நம் குடும்பத்தாருடன் ஒத்துப் போவதில்லை அது தான் பிரச்சனை.

இதற்கு தீர்வு விட்டுக்கொடுத்தல், தியாகம், இவையெல்லாம் தான். இதற்கு உளவியல் தீர்வு போதுமே எதற்கு ஜோதிடம் என்று கேட்போரும் உண்டு. வெறும் உளவியல் முறையில் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது. ஜோதிடத்தில் திருமணப் பொருத்தம் பார்ப்பதும் அதற்காகத்தான். நட்சத்திரப் பொருத்தம் மட்டுமே திருமணப் பொருத்தம் ஆகாது. முழுஜாதகத்தையும் பொருத்தி பார்க்க வேண்டும்.

திருமணம் நடந்தபின்பு வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயல்வதற்கு முன். பிரச்சனைகள் என்ன என்பதை ஆராயலாம். பிரச்சனைகளை நாம் நான்காக வகைப்படுத்தலாம்.

  1. அறம் சாரந்த பிரச்சனைகள்
  2. பொருள் சார்ந்த பிரச்சனைகள்
  3. இன்பம் சார்ந்த பிரச்சனைகள்
  4. மோட்சம் சார்ந்த பிரச்சனைகள்

அறம் சார்நத பிரச்சனைகள்.
அறம் என்பது என்ன? மனம், கல்வி, புத்திசாலித்தனம், முடிவுஎடுக்கும் திறன். நியாயம் தரமம் இது போன்றவை. அதாவது நாம் எடுக்கும் முடிவு குடும்பத்திற்கு ஒத்துப் போகாமல் வரும் பிரச்சனைகள்.

பொருள் சார்ந்த பிரச்சனைகள்
பணம், வீடு, வாகனம், தொழில் இது போன்ற பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள்.

இன்பம் சார்நத பிரச்சனைகள்
காதல், காமம், ஆடம்பரம், இலாபம் இது போன்ற உடல் சார்ந்த மனமும், மனம் சாரந்த உடலினாலும் ஏற்படும் பிரச்சனைகள்.

மோட்சம் சார்ந்த பிரச்சனைகள்
இறப்பு, மறுபிறப்பு, தொடர்பான பிரச்சனைகள். சாதாரண மனித வாழ்க்கையில் இது இடம் பெற வாய்ப்பில்லை. காரணம் யாரும் இறந்தபின்பு சொர்க்கமா நரகமா, மோட்சமா? மறுபிறப்பா என்பதற்கு மட்டும் சண்டை போட்டுக்கொள்ள மாட்டார்கள்.

உண்மையில் பிரச்சனைகள் என்ன என்பதைப் புரிந்து கொண்டால் தான் அதற்கான தீர்வைக் காண முடியும். மேற்கூறிய பிரச்சனைகளுக்கும் ஜோதிடத்திற்கும் உள்ள தொடர்பு என்ன? மனித வாழ்க்கையின் செயல்பாடுகள், தேவைகள் இவற்றை ஜோதிடத்தில் 12 பாவங்களாகப் பிரித்து பலன் காண்கிறோம். மேற்கூறிய பிரிவுகளும் ஜோதிடப் பாவங்களும் அதாவது ஸ்தானங்களும் என்ன என்றால்?

அறம் சாரந்த ஸ்தானங்கள் – 1, 5, 9
பொருள் சார்ந்த ஸ்தானங்கள் – 2, 6, 10
இன்பம் சார்ந்த ஸ்தானங்கள் – 3, 7, 11
மோட்சம் சாரந்த ஸ்தானங்கள் – 4, 8, 12


பிரச்சனைகள் எப்பொழுது வரும் என்று தெரிந்தால் தான். அதற்கான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளைச் செய்ய ஏதுவாக இருக்கும். ஜோதிடம் என்பது எதிர்கால வாழ்க்கைக்கான வழிகாட்டி. எந்த காலகட்டங்களில் நாம் எவ்வாறு நடந்துகொள்ளப் போகிறோம் அல்லது எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று கூறுவது தான் ஜோதிடம். அந்த காலகட்டங்களை ஜோதிடத்தில் திசா புத்தி அந்தரம், என்ற ஜோதிடக் கணிதத்தில் தெரிந்து கொள்ள முடியும்.

கணவனுக்கும் மனைவிக்கும் தனித்தனியாக நடக்கும் திசாபுத்தி அந்தர அதிபதிகளின் சேர்க்கை சுபமானால் பிரச்சனைகளுக்குரிய தீர்வு கிடைத்துவிடும். இல்லையென்றால் சிறு விவாதம் கூட பெரிய பிரச்சனையாகி பிரிவு என்ற நிலைவரை வந்து விடும்.

சில சமயம் என்ன பிரச்சனை எதற்காக கோபப்படுகிறார்கள் என்பதே தெரியாத நிலையில் எந்த தசாபுத்தி அந்தரம் நடக்கிறதோ அதன் காரகத்துவங்களில் தான் கோபம் வரும் உதாரணமாக 3, 7, 11ம் சூட்சும அந்தர காலங்களில் காதல், காமம்,அந்நியோன்யம்,  திருப்பியின்மையினாலும் கோபம் வரும் அதைப் புரியாமல் நீங்கள் கோயில் கோயிலாக சுற்றினால் உங்கள் மேலும் கடவுள் மேலும் கோபம் தான் வரும் அப்பொழுது செய்ய வேண்டியது இருவரும் தனியாக சென்று இயற்கையை அனுபவியுங்கள்.

அறம் சார்நத காலகட்டங்களுக்கு தீர்த்த யாத்திரை போவதும், பொருள் சாரந்த காலகட்டங்களில் பொருளாதார சக்திக்கு தகுந்தவாறு சிறு பொருளாவது பரிசாகக் கொடுப்பதும் சிறந்தது.

இவ்வாறு செய்தால் குடும்பத்தில் பிரச்சனை வராதா என்றால் வரும் ஆனால் மறுநாள் அது தீரந்துவிடும். பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துவிடும். பிரச்சனை பிரிவு வரைசெல்லாது.

இது தான் ஜோதிடம் கூறும் தீர்வு. ஒவ்வொரு பிரச்சனைகளையும் இவ்வாறு புரிந்து காலகட்டங்களை உணர்ந்து செயல்பட்டால் எல்லா நாளும் திருப்தியாகவே அமையும்.