-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்
Showing posts with label பிருகு சரல் பத்ததி. Show all posts
Showing posts with label பிருகு சரல் பத்ததி. Show all posts

Thursday, June 20, 2013

ஜோதிடக் குறிப்புகள்

ஜோதிடத்தை முழுமையாக தெரிந்து கொண்டவர்கள் தற்காலத்தில் யாரும் இருப்பதாகாத் தெரியவில்லை. ஆனால் விடாமுயற்சியாலும் தீராத தேடுதலாலும் நல்ல எண்ணங்களாலும் ஜோதிடத்தை அதிகமாக உணர்ந்தவர்கள் இருக்கிறார்கள். தேடுதல்களுக்கான விடைகள் யார் மூலமாவது எப்படியாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அனைவரும் தேடுகின்றோம். அப்படி தேடுபவர்களுக்கு உதவியாக தெரிந்ததை உணர்ந்ததை யாம் எழுதி வருகிறோம். அவற்றின் சிறு தொகுப்பாக இந்தப் பதிவு. 

விதியை வெல்ல முடியாது. அதற்கு பரிகாரங்களும் கிடையாது. ஜோதிடத்தில் கூறப்பட்டவை கண்டிப்பாக நடந்தே தீரும். மாற்று கிடையாது.ஆனால் அதை எவ்வாறு நாம் அனுபவிக்கப் போகிறோம் என்பது தான் ஜோதிடம் கூறும் சூட்சுமம். மேலும்...


மூலம் ஆயில்யம். நட்சத்திரங்களால் பெண்களின் புகுந்த வீட்டிற்கு தீங்கு வருமா?

 

வராது. ஒருவருடைய வாழ்க்கையின் முழுப்பங்கும் அவருடைய ஜாதகத்தை வைத்தே கணிக்கப் படுகிறது. மேலும் சாதாரண நிலையில் அடுத்தவர்களின் இராசியோ நட்சத்திரமோ மற்றவர்களிடம் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்துவது இல்லை. எப்பொழுது இருவருக்கும் இடையில் ஒரு பிடிப்பு, ஒரு பந்தம், ஒரு உறவு ஏற்படுகின்றதோ அப்பொழுது தான் ஒருவரின் ஜாதகம் மற்றவர்க்கு பயன்படுகிறது. தொடர்ந்து…

 

தொழில் அல்லது வேலையில் வெற்றி பெற ஜோதிடம் கூறும் இரகசியங்கள்

 

ஒருவருடைய வெற்றி என்பது அவருடைய தொழிலிருந்து தான் கிடைக்கப் பெறும். வெற்றி என்பது என்ன? நாம் செய்யும் செயல்கள் நாம் எதிர்பார்த்த விளைவுகளைத் தருமானால் அது வெற்றி. அது தான் மனிதனின் சந்தோசம், மகிழ்ச்சி. மனிதன் மகிழ்ச்சியுடன் வாழத் தேவைப்படும் அனைத்தையும் தொழிலின் மூலமே பெறுகிறோம். பிறந்த குழந்ததையின் தொழில் என்ன? உண்ணுவதும் உறங்குவதும் தான். பள்ளிக்குச் செல்லும் குழந்தைக்கு அது தான் தொழில். தேர்ச்சி பெறுவது தான் வெற்றி. மேலும்…



ஜனனத்திற்கு முந்தைய நிலையிலிருந்து மரணத்திற்கு பிந்தைய நிலைவரை ஜோதிடத்தில் கூறமுடியும். அப்படிக் கூறுவதற்கு உண்மையான பக்தி இருக்க வேண்டும். பக்தி என்பது இறைவனிடம் மட்டும் தான் என்பதில்லை. தன்னைத் தான் உணர்தலே இறைவனை அடைவதற்குச் சமம். சாமானிய மக்கள் தான் இறைவனைத் தேடி ஓடுகின்றனர். தன்னை உணர்ந்தவனிடம் இறைவன் தானே வந்து சேர்கிறான். தொடர்ந்து….

 

Wednesday, January 16, 2013

ஜோதிட ஆராய்ச்சி - பிருகு சரல் பத்ததின் விளக்கங்கள்.

ஜோதிட ஆராய்ச்சி - பிருகு சரல் பத்ததின் விளக்கங்கள்.

மனித வாழ்க்கையின் அனைத்துப் பகுதிகளையும் அனைத்துச் செயல்களையும் 12 பாவங்களாகப் பிரித்துவிடமுடியும். அந்த 12 பாவங்களின் நாயகர்களாக 9 கோள்களை நியமித்துவிட முடியும் இது தான் ஜோதிடத்தின் கரு.

ஜனனத்திற்கு முந்தைய நிலையிலிருந்து மரணத்திற்கு பிந்தைய நிலைவரை ஜோதிடத்தில் கூறமுடியும். அப்படிக் கூறுவதற்கு உண்மையான பக்தி இருக்க வேண்டும். பக்தி என்பது இறைவனிடம் மட்டும் தான் என்பதில்லை. தன்னைத் தான் உணர்தலே இறைவனை அடைவதற்குச் சமம். சாமானிய மக்கள் தான் இறைவனைத் தேடி ஓடுகின்றனர். தன்னை உணர்ந்தவனிடம் இறைவன் தானே வந்து சேர்கிறான்.

அப்படி இறையருளையும் தன்னகத்தே கொண்ட ஞானிகளால் உணரப்பட்டதே ஜோதிடம். அப்படிப்பட்ட ஞானிகளில் ஒருவர் தான் பிருகு முனிவர். அவர் தனது திவ்ய திருஷ்டியால் உருவாக்கி அருளியதே இந்த ஜோதிட முறை. அவற்றை எளிமைப் படுத்தி ஜோதிட ஆர்வலர்கள் பலரும் எழுதி வைத்துள்ளனர்.

சப்தரிஷி ஜோதிட ஆராய்ச்சி மையம் ஆங்கிலத்தில் எழுதிய கருத்துக்களை எடுத்து தமிழில் கொடுத்துள்ளேன். விதிகள் மட்டுமே மற்றவர்களிடமிருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். காரணம் அது பொதுவானது. ஆனால் அதன் மீதான ஆராய்ச்சியை தனித்தனியாகத்தான் மேற்கொள்ள வேண்டும் அப்பொழுதுதான் விடைகள் மீதான தெளிவு பிறக்கும்.
கருத்துக்களை மேலும் ஆராய்ச்சி செய்ய வேண்டியது அவசியம். காரணம் எடுத்துக்காட்டு ஜாதகங்கள் அதன் விளைவுகள் எல்லாம் மிகச் சிறிய அளவிலானது தான். அனைவரும் பங்கெடுத்து ஆராய்ந்தால் மிகத் துல்லிய பலன்களைக் கூற முடியும்.
பிருகு சரல் பத்ததியின் மூலம் எந்தெந்த வயதில் எந்தெந்த கிரகங்களின் தாக்கங்களினால் என்ன நடக்கக் கூடும் என்பதை தெரிந்து கொள்ள முடியும். அவற்றில் சில.


விதி – 6
ஜெனன ஜாதகத்தில் செவ்வாய் எங்கிருக்கிறாரோ அவரிடமிருந்து எண்ண வரும் 10ம் பாவ பலன்களில் ஒன்று ஜாதரின் 27ம் வயதில் நடைபெறும்.

விதி 8– இராகு பகவான் தான் இருக்கும் இடத்திலிருந்து 6ம் பாவ பலன்களின் ஒன்றை ஜாதகரது 38ம் வயதில் நடத்தி வைப்பார்.

விதி 9– கேது பகவான் தான் இருக்கும் இடத்திலிருந்து 12ம் பாவ பலன்களின் ஒன்றை ஜாதகரது 24ம் வயதில் நடத்தி வைப்பார்.

விதி 10-குரு பகவான் தான் இருக்கும் இடத்தின் பாவ பலன்களில் ஒன்றையோ அல்லது தனது 9ம் பார்வையின் பாவ பலன்களில் ஒன்றையோ ஜாதகரின் 40ம் வயதில் நடத்தி வைப்பார்.

விதி 11-குரு பகவான் தனது 5ம் பார்வையின் பாவ பலன்களில் ஒன்றையோ அல்லது 5ம் பாவத்திற்கு 3ம் பாவமான 7ம் பாவத்தின் பலன்களில் ஒன்றையோ ஜாதகரின் 32ம் வயதில் நடத்தி வைப்பார்.

விதி 12–சனி பகவான் தான் இருக்கும் இடத்திலிருந்து 3ம் பாவ பலன்களின் ஒன்றை ஜாதகரது 20ம் வயதில் நடத்தி வைப்பார்.

விதி 17– இராகு பகவான் தான் இருக்கும் இடத்திலிருந்தோ அல்லது தான் இருக்கும் இடத்திலிருந்து 9ம் பாவ பலன்களின் ஒன்றையோ ஜாதகரது 37ம் வயதில் நடத்தி வைப்பார்.

விதி 18– குரு பகவான் தான் இருக்கும் இடத்தின் பலன்களின் ஒன்றை ஜாதகரது 69ம் வயதில் நடத்தி வைப்பார்.

விதி 19-குரு பகவான் தனது 9ம் பார்வையின் பாவ பலன்களில் ஒன்றை ஜாதகரின் 22ம் வயதில் நடத்தி வைப்பார்.

விதி 21-இராகு பகவான் தான் இருக்கும் இடத்திலிருந்து 5ம் பாவ பலன்களில் ஒன்றை ஜாதகரின் 22ம் வயதில் நடத்தி வைப்பார்.

இந்த விதிகளின் மீதான ஆராய்ச்சியை இனி தொடரலாம்.

Friday, January 4, 2013

27ம் வயதில் என்ன நடக்கும்?

27ம் வயதில் நடைபெறும் நிகழ்வுகள்
பிருகு சரல் பத்ததின் விளக்கங்கள்.


ஜோதிடத்தில் பலன்கள் கூற நிறைய விதிமுறைகள் உள்ளன அவற்றில் உள்ள கருத்துக்களை மக்களிடம் எளிமைப்படுத்தி கூறுவதற்காக இருக்கும் முறைகளில் ஒன்று தான் பிருகு சரல் பத்ததி. இம்முறையில் ஜோதிடத்தின் பலன்களை முழுமையாகவும் எளிமையாகவும் தெரிந்து கொள்ளமுடியும்.

ஒருவருடைய வாழ்வில் நடைபெறும் அல்லது நடைபெற இருக்கும் அனைத்தும் கோள்களின் தாக்கங்கள் மூலம் தான் நடைபெறும் என்பது ஜோதிடக் கருத்து. ஜோதிடத்தில் கூறப்படும் பலன்கள் அனைவருக்கும் பொதுவானது தான். ஆனால் கோள்களின் பலம் மற்றும் தாக்கங்கள் பாவங்களுக்குத் தக்கவாறு விளைவுகளைக் கொடுக்கின்றன. உதாரணமாக ஏழாம் பாவம் களத்திரம் மற்றும் திருமணம் தொடர்பானது. திருமணத்திற்கான கால நேரத்தைக் கணக்கிடும் போது 7ம் பாவம் மட்டுமல்லாமல் இரண்டாம் பாவம் (குடும்பம்) ஐந்தாம் பாவம் (குழந்தைகள்) இவையும் முதல்பாவம் (வாழ்வின் அடுத்த நிலை) , பதினொன்றாம் பாவம் ( இலாபம் ) இப்படி பலதரப்பட்ட காரணிகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஜோதிடப்பலன்கள் பார்க்கும் பொழுது வயது மிக முக்கிய காரணியாக அமைகிறது. காரணம். பாவங்கள் 12தான் அது வாழ்க்கையின் முழுமைக்கும் பொதுவானது. எடுத்துக்காட்டாக 7ம் பாவம் களத்திரம் திருமணம் அது 7வயது குழந்தைக்குப் பொருந்துமா என்றால் இல்லை நண்பர்கள் என்ற எல்லையில் நின்றுவிடும் அதே போலத்தான் 27ம் வயது என்பது காதல், திருமணம், வேலை, உயர்கல்வி, குழந்தைகள் இது போன்ற காரகங்கள் நடைபெறக்கூடிய காலகட்டம்.

ஒரு பாவம் ஒன்றுக்கும் மேற்பட்ட செயல்களுக்குப் பொறுப்பேற்கிறது. அதைத்தான் காரகத்துவம் என்கிறோம். உதாரணமாக 4ம் பாவம் தாய் கல்வி வாகனம் காமம் வீடு இது போன்று ஒன்றுக்கும் மேற்பட்ட காரகத்துவங்கள் ஒவ்வொரு பாவத்திற்கும் உண்டு.

ஒரு செயல் நடக்கும் கால நேரங்களை கணிக்க ஜோதிடத்தில் உள்ள முறைகளில் பிருகு சரல் பத்ததி முறையும் ஒன்று. அதிலிருந்து ஒரு பகுதி.


பகுதி – 6

ஜெனன ஜாதகத்தில் செவ்வாய் எங்கிருக்கிறாரோ அவரிடமிருந்து எண்ண வரும் 10ம் பாவ பலன்களில் ஒன்று ஜாதரின் 27ம் வயதில் நடைபெறும்.



விளக்கம்.

கால புருசத்தத்துவப்படி மேசம் முதல் பாவம். மகரம் 10ம் பாவம். மகரத்தில் செவ்வாய் உச்சம் கடகத்தில் செவ்வாய் நீசம். மேசம், விருச்சிகம் செவ்வாய் ஆட்சி வீடுகள். மேசம் செவ்வாயின் மூலத்திரிகோண வீடு.

உதாரணமாக மீன இலக்கிண ஜாதகருக்கு செவ்வாய் 10ல் அதாவது தனுசில் இருப்பதாக வைத்துக்கொண்டால் செவ்வாய் இருக்கும் தனுசில் இருந்து 10ம் இடமாக வருவது கன்னி. கன்னி இலக்கிணத்திலிருந்து 7ம் இடம். அதாவது செவ்வாய் (தனுசு) முதல் எண்ண 10ம் இடமாக வரும் (கன்னி) இலக்கிணத்திற்கு 7ம் பாவமாக விளங்குவதால் 7ம் பாவ  காரகத்துவங்களில் ஒன்று இந்த ஜாதகரின் 27ம் வயதில் நடைபெறும்.  ( இந்த ஜாதகருக்கு திருமணம் இந்த காலகட்டங்களில் தான் நடந்தது.  )

அனைவருக்கும் இதே காலகட்டங்களில் கண்டிப்பாக திருமணம் நடைபெற்றுவிடுமா? என்றால். இல்லை. காரணம் 7ம் பாவம் என்பது திருமணம் மட்டும்அல்ல. நண்பர்கள், கூட்டுவியாபாரம், மாரகம், 4க்கு நான்காகவிளங்குவதால் வாகனத்தின் மூலமும் தாயின் மூலமும் கிடைக்கக்கூடிய மகிழ்ச்சி. இது போன்ற எது வேண்டுமானாலும் ஜாதகரின் 27ம் வயதில் கிடைக்கப் பெறலாம்.

மேலும் செவ்வாய் இருக்கும் இடத்திற்கு 10ம் இடத்தில் உள்ள கிரகங்களின் காரகத்துவங்களும் இதில் அடங்கும். பிருகு சரல் பத்ததின் மீதான விளக்கங்களும் தேடல்களும் ஆராய்ச்சிகளும் இவை சரியாக இருக்கிறது என்று உணர்தியிருக்கின்றன.

நீங்களும் உங்கள் வாழ்வில் 27ம் வயதை ஆராய்ந்து பார்த்தால் உண்மையை உணர முடியும்.

ஆராய்தல் தொடரும்.

Monday, November 12, 2012

சனி பகவானின் நான்காம் பார்வை

சனிபகவான் – நீதிமான்
பிருகு சரல் பத்ததின் விளக்கங்கள்.

ஜோதிடத்தில் பலன்கள் கூற நிறைய விதிமுறைகள் உள்ளன அவற்றில் உள்ள கருத்துக்களை மக்களிடம் எளிமைப்படுத்தி கூறுவதற்காக இருக்கும் முறைகளில் ஒன்று தான் பிருகு சரல் பத்ததி. இம்முறையில் ஜோதிடத்தின் பலன்களை முழுமையாகவும் எளிமையாகவும் தெரிந்து கொள்ளமுடியும்.

விதி 1.

சனிபகவான் ஜெனன ஜாதகத்தில் தான் இருக்கும் இடத்திலிருந்து நான்காம் பாவபலனை ஏற்ற இறக்கத்துடன் தான் வைத்திருப்பார்.

விளக்கம்.
சனி பகவான் மிகச் சிறந்த நீதிமான். ஒருவர் செய்யும் வினைகளுக்குத் தகுந்த பயன்களை எந்தவித பாகுபாடுமின்றி வழங்கக்கூடியவர். ஜெனன ஜாதகத்தில் அவர் இருக்கும் இடத்திலிருந்து நான்காம் இடம் அதாவது நான்காம் பாவம், இலக்கிண பாவத்திலிருந்து எந்த பாவமாக அமைகிறதோ அதற்குரிய பாவ பலன்களில் ஒன்றையேனும் ஏற்ற இறக்கத்துடன் அதாவது திருப்தியான நிலையில்லாமல் தான் வைத்திருப்பார் என்கிறது பிருகு சரல் பத்ததி.
பாவ பலன்கள். 12 பாவங்களுக்கும் தனித்தனியே நிறைய காரத்துவங்கள் உள்ளன. அவற்றை சுருக்கி இங்கே பார்ப்போம்.

1 இலக்கிண பாவம், ஆயுள், திருப்தி
2 தனம் வாக்கு குடும்பம்
3 தைரியம் வீரியம் சகோதரம்
4 தாய் கல்வி குழந்தைப் பருவம், சுகம்
5 புத்திரம் அதிர்ஷ்டம்
6 நோய் வழக்கு கடன்
7 களத்திரம், நண்பர்கள்
8 ஆயுள், சட்டம்
9 தந்தை பாக்கியம்
10 தொழில் கர்மா
11 இலாபம்
12 விரயம், மோட்சம்


உதாரண ஜாதகங்கள் மூலம் இதனை விளக்கமாகப் பார்க்கலாம்.

உதாரணம் 1 இராமர் ஜாதகம் –
அவதாரப் புருஷர் விஷ்ணுவின் ஒரு அவதாரம் தான் இராமவதாரம். அவருடைய இலக்கிணம் – கடகம் . சனிபகவான் இருப்பது – துலாம் ராசியில்.
துலாமிலிருந்து நான்காம் பாவம் மகரம் அதாவது இலக்கிணத்திலிருந்து 7ம் பாவம்.

ஏழாம் பாவ காரகங்கள். – களத்திரம் (கணவன் அல்லது மனைவி)

இராமர் இல்லறவாழ்க்கை ஏற்படுத்திய வெற்றியும் தோல்வியும் நாம் அறிந்ததே.


உதாரணம் 2. – இந்திராகாந்தி. முன்னாள் பாரதப் பிரதமர்.

இலக்கிணம் – கடகம்.
சனிபகவான் இருப்பது – கடகம் அதாவது இலக்கினத்திலேயே சனிபகவான்.

கடகத்திலிருந்து  நான்காம் பாவம் துலாம் அதாவது இலக்கிணத்திலிருந்து 4ம் பாவம்.

காரகம் – தாய். அடிப்படைகல்வி, குழந்தைப் பருவம்.


இந்திராகாந்தி அவர்கள் தனது இளமைப் பருவத்தில் ஒருபோதும் ஒரு நிலையான குடும்ப வாழ்க்கையை அனுபவிக்கவில்லை என்றும் தனது 18ம் வயதில் தாயை இழந்தார் என்றும் கூறப்படுவதை சனிபகவானின் நான்காம் பாவம் உணர்த்துகிறது.

உதாரணம் 3. –காந்தியடிகள். தேசப்பிதா. அகிம்சாவாதி. அவருடைய இலக்கிணம் – துலாம்.
சனிபகவான் இருப்பது – விருச்சிகம்
விருச்சிகத்திலிருந்து  நான்காம் பாவம் கும்பம் அதாவது இலக்கிணத்திலிருந்து 5ம் பாவம்.

காரகம் – குழந்தைகள்,

மகாத்மாகாந்தி அவர்கள் தனது குழந்தைகள் மூலமாக நிம்மதியாக இருந்தார் என்று சொல்லமுடியாது. அவரது 19ம் வயதில் பிறந்த மூத்த மகன் ஹரிலால், பல்வேறு கெட்ட பழக்கங்களுக்கு ஆளாகி இறுதியில் மதம் மாறி நோய்நொடியுடன் தான் இறந்து போகிறார்.


உதாரணம் 4- மாநில முதல்வர் – செல்வி ஜெயலலிதா
இலக்கிணம் – மிதுனம்
சனி பகவான் இருப்பது – கடகம்.
சனிபகவானிடமிருந்து நான்காம் பாவமாக வருவது இலக்கிணபாவம் ஐந்து. காரகம் குழந்தைகள்.

உதாரணம் 5. இசைஞானி இளையராஜா.
இலக்கிணம் ரிசபம்.
சனி பகவான் இருப்பது ரிசபத்தில்.
இலக்கிணம் மற்றும் சனிபகவானிடமிருந்து நான்காம் பாவம் தாய். அடிப்படைகல்வி, குழந்தைப் பருவம். அவருடைய குழந்தைப் பருவம் வறுமையாக இருந்தது என்று கூறப்படுகிறது.

இவ்வாறு ஒவ்வொருவருடைய ஜாதகத்திலும் கோள்களின் தாக்கங்கள் ஒரே மாதிரி விளைவைத் தான் தருகின்றன. இங்கே கொடுக்கப்பட்ட ஜாதகங்கள் மிகவும் பிரபலம் அடைந்தவர்களைப் பற்றியது. அதனால் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை விரிவாக ஆராய முடியாது. இருப்பினும் ஒரு ஜோதிட ஆராய்சி நோக்கில் கையாளப்பட்டுள்ளது. தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்.

ராசிச் சக்கரம் ஒன்றை மட்டுமே வைத்து எளிய பலன்கள் கூறும் முறையில் இது அமைந்துள்ளது. சனிபகவானின் 4ம் பார்வையாக வரும் பாவம் தரும் பொதுவான விளைவுகள் தான் இவை. இருப்பினும் விளைவுகள் மாறாது. அந்த பாவத்தின் முழுப்பலனும் மற்ற கிரகங்கள் வைத்தும் மற்ற வர்க்கச்சக்கரங்கள் மூலமாகவும் இன்னும் விரிவாக தெரிந்துகொள்ள முடியும்.

தொடரும்.