-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Wednesday, January 16, 2013

ஜோதிட ஆராய்ச்சி - பிருகு சரல் பத்ததின் விளக்கங்கள்.

ஜோதிட ஆராய்ச்சி - பிருகு சரல் பத்ததின் விளக்கங்கள்.

மனித வாழ்க்கையின் அனைத்துப் பகுதிகளையும் அனைத்துச் செயல்களையும் 12 பாவங்களாகப் பிரித்துவிடமுடியும். அந்த 12 பாவங்களின் நாயகர்களாக 9 கோள்களை நியமித்துவிட முடியும் இது தான் ஜோதிடத்தின் கரு.

ஜனனத்திற்கு முந்தைய நிலையிலிருந்து மரணத்திற்கு பிந்தைய நிலைவரை ஜோதிடத்தில் கூறமுடியும். அப்படிக் கூறுவதற்கு உண்மையான பக்தி இருக்க வேண்டும். பக்தி என்பது இறைவனிடம் மட்டும் தான் என்பதில்லை. தன்னைத் தான் உணர்தலே இறைவனை அடைவதற்குச் சமம். சாமானிய மக்கள் தான் இறைவனைத் தேடி ஓடுகின்றனர். தன்னை உணர்ந்தவனிடம் இறைவன் தானே வந்து சேர்கிறான்.

அப்படி இறையருளையும் தன்னகத்தே கொண்ட ஞானிகளால் உணரப்பட்டதே ஜோதிடம். அப்படிப்பட்ட ஞானிகளில் ஒருவர் தான் பிருகு முனிவர். அவர் தனது திவ்ய திருஷ்டியால் உருவாக்கி அருளியதே இந்த ஜோதிட முறை. அவற்றை எளிமைப் படுத்தி ஜோதிட ஆர்வலர்கள் பலரும் எழுதி வைத்துள்ளனர்.

சப்தரிஷி ஜோதிட ஆராய்ச்சி மையம் ஆங்கிலத்தில் எழுதிய கருத்துக்களை எடுத்து தமிழில் கொடுத்துள்ளேன். விதிகள் மட்டுமே மற்றவர்களிடமிருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். காரணம் அது பொதுவானது. ஆனால் அதன் மீதான ஆராய்ச்சியை தனித்தனியாகத்தான் மேற்கொள்ள வேண்டும் அப்பொழுதுதான் விடைகள் மீதான தெளிவு பிறக்கும்.
கருத்துக்களை மேலும் ஆராய்ச்சி செய்ய வேண்டியது அவசியம். காரணம் எடுத்துக்காட்டு ஜாதகங்கள் அதன் விளைவுகள் எல்லாம் மிகச் சிறிய அளவிலானது தான். அனைவரும் பங்கெடுத்து ஆராய்ந்தால் மிகத் துல்லிய பலன்களைக் கூற முடியும்.
பிருகு சரல் பத்ததியின் மூலம் எந்தெந்த வயதில் எந்தெந்த கிரகங்களின் தாக்கங்களினால் என்ன நடக்கக் கூடும் என்பதை தெரிந்து கொள்ள முடியும். அவற்றில் சில.


விதி – 6
ஜெனன ஜாதகத்தில் செவ்வாய் எங்கிருக்கிறாரோ அவரிடமிருந்து எண்ண வரும் 10ம் பாவ பலன்களில் ஒன்று ஜாதரின் 27ம் வயதில் நடைபெறும்.

விதி 8– இராகு பகவான் தான் இருக்கும் இடத்திலிருந்து 6ம் பாவ பலன்களின் ஒன்றை ஜாதகரது 38ம் வயதில் நடத்தி வைப்பார்.

விதி 9– கேது பகவான் தான் இருக்கும் இடத்திலிருந்து 12ம் பாவ பலன்களின் ஒன்றை ஜாதகரது 24ம் வயதில் நடத்தி வைப்பார்.

விதி 10-குரு பகவான் தான் இருக்கும் இடத்தின் பாவ பலன்களில் ஒன்றையோ அல்லது தனது 9ம் பார்வையின் பாவ பலன்களில் ஒன்றையோ ஜாதகரின் 40ம் வயதில் நடத்தி வைப்பார்.

விதி 11-குரு பகவான் தனது 5ம் பார்வையின் பாவ பலன்களில் ஒன்றையோ அல்லது 5ம் பாவத்திற்கு 3ம் பாவமான 7ம் பாவத்தின் பலன்களில் ஒன்றையோ ஜாதகரின் 32ம் வயதில் நடத்தி வைப்பார்.

விதி 12–சனி பகவான் தான் இருக்கும் இடத்திலிருந்து 3ம் பாவ பலன்களின் ஒன்றை ஜாதகரது 20ம் வயதில் நடத்தி வைப்பார்.

விதி 17– இராகு பகவான் தான் இருக்கும் இடத்திலிருந்தோ அல்லது தான் இருக்கும் இடத்திலிருந்து 9ம் பாவ பலன்களின் ஒன்றையோ ஜாதகரது 37ம் வயதில் நடத்தி வைப்பார்.

விதி 18– குரு பகவான் தான் இருக்கும் இடத்தின் பலன்களின் ஒன்றை ஜாதகரது 69ம் வயதில் நடத்தி வைப்பார்.

விதி 19-குரு பகவான் தனது 9ம் பார்வையின் பாவ பலன்களில் ஒன்றை ஜாதகரின் 22ம் வயதில் நடத்தி வைப்பார்.

விதி 21-இராகு பகவான் தான் இருக்கும் இடத்திலிருந்து 5ம் பாவ பலன்களில் ஒன்றை ஜாதகரின் 22ம் வயதில் நடத்தி வைப்பார்.

இந்த விதிகளின் மீதான ஆராய்ச்சியை இனி தொடரலாம்.

2 comments:

  1. தமிழ் இணையதளம், ஆன்மிகம், சித்தர்கள் கதை, மருத்துவ குறிப்புகள், குறுங்கதைகள், சமையல் குறிப்புகள் - பற்றிய மனிதனுக்கு தேவையான
    அனைத்தும் ஒரே இணையத்தில்....
    www.tamilkadal.com

    ReplyDelete
  2. திருவைந்தெழுத்து – திருமூலர்.
    திருவம்பலம் விளங்கச் சக்கரம் அமைத்து. குறுக்கே ஆறு கோடுகள் நேடுக்கே ஆறு கோடுகள் அமையுமாறு கீரவேண்டும். இதிலைமையும் அறைகள் இருபத்தைந்திலும் சிவாயநம என்னும் திருவைந்தெழுத்தை அமைத்து, உள்ளத்தில் ஓதி வழிபடவேண்டும்.
    http://www.tamilkadal.com/?p=1250

    ReplyDelete

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி