அகத்தியர் பாய்ச்சிகை ஆருடம்.
1-1-3
தானாகும் ஒன்றும் வீழ்ந்து தனித்தொன்றும் மூன்றும் வீழ்ந்தால்
ஆணாக பிறக்கும் பிள்ளை அதனாலேயே யோமுண்டாம்
வீணான கவலையெல்லாம் விலகிடும் கொண்டமும் நோயம்
தோணாது கஷ்டம் நீங்கும் துணையது முருகனுண்டாம்.
விளக்கம்
முதலில் ஒன்று விழுந்து, மறுபடியம் ஒன்றும் மூன்றும் விழுமானால் மனையில் ஆண் குழந்தை பிறக்கும். ஆதனால் அதிர்ஷ்டம் பெருகும். ஆபத்துக்கள் விலகும். கெண்டமும், நோயும் நீங்கும், முருகனின் கருணையால் கஷ்டம் நீங்கும் என்கிறார்