agathiyar arudam tamil 1-1-2
அகத்தியர் பாய்ச்சிகை ஆருடம்.
பாரப்பா ஒன்று மொன்றும் பதறியே இரண்டும் வீழ்ந்தால்
சீரது வழிந்து போகும் சிக்குகள் பலவுண்டாகும்
பேரது கெடுக்கவுந்தன் பெண்டீரும் துணையே யாவாள்
கூறவே நினைத்த யெண்ணம் கூடாது நாள் தானாகவே.
விளக்கம்
ஒன்றும் ஒன்றும் இரண்டும் விழுமானால் உன் குடும்பத்தில் சீரழிவும், சிக்கல்களும் உண்டாகும். உனது புகழைக் கெடுக்க உன் மனைவியே துணையாயிருப்பாள். நீ நினைத்த எண்ணமும் முடிவதற்கு வெகுநாள் ஆகும் என்கிறார்.