கழுகு ஒன்று மரத்தின் மேல் அமர்ந்தபடி தன்னுடைய பெருமைகளை மனதிற்குள் அசைபோட்டு கொண்டிருந்தது.....
' அடடா ....எத்தனை கூரிய நகங்கள் எனக்கு?...எந்தக் கடினமான தோலையும் கிழித்து விடுவேனே! ....
அது மட்டுமா ?...எத்தனை கூர்மையான பார்வை எனக்கு.!..எவ்வளவு உயரத்தில் பறந்து கொண்டு இருந்தாலும் , தரையில் ஊர்ந்து செல்லும் ஒரு சிறிய எறும்பைக் கூட என்னால் காண முடியுமே!...மட்டுமின்றி , எத்தனை வலிமையானவை என் சிறகுகள்.! அவற்றைக் கொண்டு வானத்தைத் தொட்டபடி உலகின் எந்த மூலைக்கும் விரைந்து பறப்பேனே! '
இப்படி அதன் மனம் முழுவதும் ..ஆணவமும் , பெருமையும் கலந்த மகிழ்ச்சியான எண்ண அலைகள் அடுக்கடுக்காய் தோன்றி தோன்றி மறைந்து கொண்டிருக்க ........
...தரையில் நடந்து கொண்டிருந்த ஒவ்வொரு ஜீவனையும் அலட்சியமாகப் பார்த்து, கேலியாக சிரித்து ெகாண்டிருந்தது அது ...! .
அப்போது ......
அதன் கண்களில் பட்டது ஒரு யானை ...!
உடனே அது அந்த யானையின் அருகே பறந்து வந்ததோடு மட்டுமின்றி , கேலியாக அதனை பார்த்து சிரிக்கவும் துவங்கியது ....!
யானைக்கு அதன் செய்கை புரியவில்லை. ....
குழப்பமான, கண்களால் கழுகை ஏறிட்டது அது ..! .அதன் பார்வையை புரிந்து கொண்டது போல கழுகு ,
"......என்ன அப்படி பார்க்கிறே ?....எனக்கு உன்னை பார்த்தால் சிரிப்பு தான் வருது ......தரைவாழ் உயிர்களிலேயே நீ தான் பெரிய மிருகம்னும் , பலசாலின்னும் சொல்றாங்க. ...ஆனாலும் என்னை மாதிரி உன்னால் பறக்க முடியாதே!.... ஆமா ...நான் தெரியாம தான் கேக்கறேன் ........! , .....தரையிலேயே பிறந்து, தரையிலேயே வளர்ந்து , தரையிலேயே சாகப்போற. உனக்கு எதுக்கு இந்த பலசாலிங்குற பட்டம் ?.......உயரத்தில் பறந்து திரியும் நான்தான் உண்மையிலேயே உயர்வான ஜீவன் .! "
கர்வமும் , அகந்தையுமாய் பேசிய அதை பார்த்து யானை அமைதியாய் , ...
" ...எல்லாம் சரி தான் ...நீ ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் .. .நான் தரையில் திரிந்த போதும் , என் கண்கள் வானத்தை (பரலோகத்தை) நோக்கியபடிதான் நான் பிளிறுவேன்.....ஆனால் நீயோ உயர்ந்த வானத்தில் சஞ்சரித்தாலும் , உன் கண்கள் (பூமியில்) குப்பையில் கிடக்கும் அழுகிப்போன பிணத்தைத்தானே தேடுகின்றன?....ஆக , நாம் எவ்வளவு உயரத்தில் இருக்கிறோம் என்பதை விட , எதன் மேல் "நோக்கமாய்" இருக்கிறோம் என்பதில்தான் "உயர்வு" இருக்கிறது ...புரிகிறதா ..? ''
என்றது அமர்த்தலான சிரிப்புடன் ;
இந்த பதிலை கேட்டு கழுகு வெட்கி பறந்து போனது .....!!
உண்மை .....
"அகந்தை" வந்தால் இலச்சையும் வரும் .....!
நல்ல "சிந்தை"யுள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு .....!
No comments:
Post a Comment
தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி