-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Friday, March 29, 2013

நீச பங்கம் என்பது என்ன?

இராசி என்பது ஒருவருக்கு கிடைக்க இருக்கும் இலாப நட்டங்களைப் பற்றி எடுத்துக்கூறுவது ஆகும்.  உச்சம் பெற்ற கிரகம் தன்னுடைய பாவ பலத்தை முழுமையாக நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ளது.

எந்த ஒரு கிரகமும். தான் இருக்கும் இடத்தில் தான் இருக்கும் நிலைக்குரிய செயல்களைச் செய்யும். அதில் எந்த மாற்றமும் இல்லை. மற்ற கிரகங்களின் தாக்கங்களினால் விளைவுகளில் மாற்றம் இல்லை ஆனால் மற்ற கிரக பலன்களும் இணையும் போது மாற்றம் நிகழ்வது போலத் தோன்றும்.

உச்சம் என்பதும் நீசம் என்பது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் தான். இரு நிலைகளிலும் நன்மையும் உண்டு. நன்மை அல்லாததும் உண்டு. நீச பங்கம் மற்ற கிரகங்களின் நற்பார்வையாலும் சேர்க்கையாலும் நடைபெறுவது என்று பொதுவாக குறிப்பிடப்படுகிறது  . ஆனால் நீசபங்கம் என்று ஒன்று இல்லை. 

நீசம் பெற்ற கிரகம் தன்னுடைய கடமையைக் கண்டிப்பாக செய்தே தீரும். நீச பங்கம் பெறுவது என்பது மற்ற நல்ல கிரகங்கள் தொடர்பினால் கிடைக்கும் நன்மை தான். ஆனால் அது நீசம் பெற்ற கிரகத்தால் நடப்பதில்லை. அதனுடன் தொடர்புடைய மற்ற கிரகங்களின் வலிமையால் நடப்பது ஆகும்.

No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி