-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Wednesday, October 3, 2012

தொழிலில் இலாபம் பெற ஜோதிடம் கூறும் இரகசியம்

தொழிலில் இலாபம் பெற ஜோதிடம் கூறும் இரகசியம்


வேலைக்கும் தொழிலுக்கும் என்ன தொடர்பு? வேலை என்பது உழைப்பு சம்பந்தப்பட்டது. தொழில் என்பது பொருள் சம்பந்தப்பட்டது. சம்பளம் உங்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம். இலாபம் உங்கள் முதலீட்டின் மீதான ஊதியம்.

பணம் உங்களுக்கு கிடைக்கக்கூடிய விதி இருந்தால் எப்படிவேண்டுமானாலும் வரும். உங்கள் கையில் கிடைக்கக்கூடிய பணம் அது இலாபமாகவும் இருக்கலாம் சம்பளமாகவும் இருக்கலாம். அது போலத்தான் செலவுகளும். சேமிப்பாகவும் இருக்கலாம் நட்டமாகவும் இருக்கலாம். செலவுகளை முதலீடாக மாற்றக்கூடிய திறமைஇருந்தால் நீங்களும் பணக்காரராகலாம். ஆனால் ஏன் முடியவில்லை. நீங்கள் எதை அனுபவிக்கப் போகிறீர்கள் என்பதை நீங்கள் உணராதது தான். தொழில் செய்து வெற்றி பெற்றவர்களைவிட தோற்றவர்கள் தான் அதிகம் ஏன்.

தொழில் மற்றும் வேலைக்கு பத்தாம் பாவம் தான் முதன்மை பாவம். பத்தாம் பாவம் தொழில். பதினொன்றாம் பாவம் இலாபம். அஷ்டவர்க்கம் மூலம் ஒவ்வொரு பாவத்திற்கும் நாம் பெற்ற மதிப்பெண்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஜோதிடம் நீங்கள் இப்பிறவியில் பெறக்கூடியவற்றை தெளிவாகக் காட்டும் கண்ணாடி. தொழிலில் நீங்கள் பெறக்கூடியது என்ன இலாபமா? நட்டமா?

சொந்தத் தொழில் செய்ய யோகம் இருப்பவர் மட்டுமே சொந்தத் தொழில் செய்ய வேண்டும் அதாவது முதலாளியாக வேண்டும் இல்லையென்றால் தொழிலாளியாகிவிட வேண்டியது தான். தொழில் தான் என்று முடிவாகிவிட்டபின்பு இலாபம் குறைவாக கிடைக்குமா? அதிகமாக கிடைக்குமா?

தொழில் பாவம் குறைவான மதிப்பெண் பெற்று இலாப பாவம் அதிக மதிப்பெண் பெற்றால் நீங்கள் செய்யும் தொழிலில் உழைப்பிற்கு மேல் வருமானம் வரும். அதே சமயம் பத்தாம் பாவம் பலம் அதிகமாகி பதினொன்றாம் பாவம் பலம் குறைந்தால் நீங்கள் உழைப்பதில் கெட்டிக்காரர் ஆனால் வருமானம் தான் குறைவு. அப்பொழுது என்ன செய்ய வேண்டும்? உங்கள் தொழிலிருந்து சம்பளமாக அதிக தொகையை எடுத்துக்கொள்ளுங்கள் (அது உங்கள் பெயரில் இல்லாமல், மனைவி மக்கள் பெற்றோரின் பெயரில் இருந்தால் நல்லது).  மீதமுள்ளதை இலாபமாக மாற்றி தொழிலிலே மீண்டும் முதலாக மாற்றிவிடுங்கள். உங்கள் தொழிலைப் பொருத்தவரையில் இலாபம் குறையும். அது சொந்த வாழ்க்கையைப் பாதிக்காது.

இத்துடன் முடிந்ததா என்றால் இல்லை. காரணம் உங்களுக்கு யார் மூலம் இலாபம் அதிகம் என்பதையும் கணிக்க வேண்டும். மனைவியினால் இலாபம் இல்லை என்றால் அவர்கள் பெயரில் சம்பளம் கொடுத்தால் அதுவும் உங்கள் கைசேராது. இப்படி பன்னிரெண்டு பாவங்களிலும் நீங்கள் அனுபவிக்கக்கூடியவற்றை ஆராய்ந்து தொழில் செய்தால் வெற்றி நிச்சயம்.

முடிவில் உங்களுடைய வினைப்பயனை நீங்கள் அனுபவிக்கிறீர்கள் உங்கள் விருப்பப்படி. இப்படித் தான் எல்லா பாவ பலன்களையும் நம் விருப்பப்படி அனுபவித்தால் நாம் தான் உண்மையில் மகிழ்ச்சியானவர்.

No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி