விதியின் விளையாட்டு எங்கு ஆரம்பிக்கிறது எங்கே முடிகிறது?
எந்த ஒரு செயலும் மற்றொரு செயலாலேயே தான் தூண்டப்படுகிறது என்ற தத்துவமே விதியின் விளையாட்டு.
இதை யார் எங்கே ஆரம்பித்திருப்பார்கள்?
விதியின் விளையாட்டிற்குள் வருவன எல்லாம் உயிர்களே. உயிர்கள் என்றால் என்ன? எந்த ஒரு பொருள் தனியாகவோ அல்லது தன்னை ஒத்த மற்றொரு பொருளுடன் சேரந்து தன்னை ஒத்த ஒரு புது உயிரை உறுவாக்குமானால் அது தான் உயிர் எனப்படும். அப்படிப்பட்ட எல்லா உயிர்க்கும் பொதுவானது தான் விதி. உயிர் இல்லாத அனைத்தும் இயற்கை.
இயற்கை எப்படி முதல் உயிரை உருவாக்கியிருக்கும் என்பது தெரியவில்லை. தன்னைத் தானே உற்பத்தி பன்னக்கூடிய மற்றொரு உயிரை உறுவாக்கக்கூடிய திறனுடன் கூடிய அந்த முதல் உயிர் தான் இன்று நாம் மற்றும் நம் கண்ணால் காணக்கூடிய மற்றும் காணமுடியாத உயிரினங்கள். இவையனைத்திற்கும் பிறப்பும் உண்டு இறப்பும் உண்டு.
ஒவ்வொரு உயிருக்கும் இயற்கையாகவே படைக்கும் சக்தி அளிக்கப்பட்டு இறுக்கிறது. அந்த படைக்கும் செயலைச் செய்ய தேவைப்படும் சக்தியை பெறுவதற்காக அனைத்து உயிர்களும் ஒரு சில செயல்களைச் செய்கின்றன. அந்த செயல்கள் தான் முயற்சிகள். அந்த முயற்சிகளின் விளைவு தான் விதி.
உயிர்கள் மற்றும் இயற்கை என்ற இரண்டு பிரிவுகள் தான் உள்ளன. உயிர்கள் தான் வளர்ச்சி அடைய எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் இயற்கையை சார்ந்து இருக்கும் வரை எந்த பாதிப்பும் இல்லை. இயற்கையும் உயிர்களைச் சார்ந்திருக்கும் வரை எந்த பாதிப்பும் இல்லை. அதே சமயம் உயிர்களுக்கும் உயிர்களுக்கும் இடையே நிகழும் செயல்கள், இயற்கைக்கும் இயற்கைக்கும் இடையே நிகழும் செயல்கள் மற்றும் இயற்கைக்கும் உயிர்களுக்கும் இடையே நடக்கும் செயல்கள் தரும் பாதிப்பு பெருமளவில் இருப்பதால் அதைத் தான் விதி என்கிறோம்.
விதியும் இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. இயற்கையும் இயற்கை சார்ந்த விதியும், உயிரும் உயிர் சார்ந்த விதியும். இயற்கையில் எண்ணற்ற பொருள்கள் உள்ளன. இயற்கையின் விதியால் இயற்கை உருவாகிறது. உயிர்களின் விதியால் உயிர்கள் உருவாகுகின்றன. பல்வேறு யுகங்கள் பல கோடிக்கணக்கான வருடங்களில் இயற்கையிலும் உயிர்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே தான் இருக்கின்றன. இயற்கைதான் மூலம் என்பதால் இயற்கையின் விதிதான் முதலில் செயல்படும். உயிர்களின் விதி இயற்கைக்கு கட்டுப்பட்டதே.
ஜோதிடமும் தனிமனிதனுக்கு என்றும் இயற்கைக்கு என்றும் இரண்டு வகைப்படும். தனிமனிதனுக்கு கூறப்படும் பலன்கள் இயற்கைக்கு உட்பட்டது தான். இயற்கையின் பலன்கள் தான் முதலில் செயல்படும். சுனாமியினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சுய ஜாதகப் பலன்கள் வெவ்வேறாக இருந்திருக்கலாம். ஆனால் இயற்கையின் விளைவாக அங்கு சென்ற அனைவருக்கும் இயற்கையின் விதி விளையாடியிருக்கிறது.
விதி இயற்கையில் தான் உருவாகியிருக்கிறது. இயற்கையில் தான் முடிவாகும். இதுவரை விதி என்பது செயலின் (வினையின்) விளைவு என்ற பொருளில் கண்டோம். விதியின் படிதான் அனைத்தும் நடக்கும் என்றால் என்ன? விளைவுகள் எப்படி உயிர்களை ஆட்டுவிக்கிறது? இறப்பிற்குப் பின்னும் பிறப்பிற்கு முன்னும் என்ன நடக்கிறது?
தொடரும் …
எந்த ஒரு செயலும் மற்றொரு செயலாலேயே தான் தூண்டப்படுகிறது என்ற தத்துவமே விதியின் விளையாட்டு.
இதை யார் எங்கே ஆரம்பித்திருப்பார்கள்?
விதியின் விளையாட்டிற்குள் வருவன எல்லாம் உயிர்களே. உயிர்கள் என்றால் என்ன? எந்த ஒரு பொருள் தனியாகவோ அல்லது தன்னை ஒத்த மற்றொரு பொருளுடன் சேரந்து தன்னை ஒத்த ஒரு புது உயிரை உறுவாக்குமானால் அது தான் உயிர் எனப்படும். அப்படிப்பட்ட எல்லா உயிர்க்கும் பொதுவானது தான் விதி. உயிர் இல்லாத அனைத்தும் இயற்கை.
இயற்கை எப்படி முதல் உயிரை உருவாக்கியிருக்கும் என்பது தெரியவில்லை. தன்னைத் தானே உற்பத்தி பன்னக்கூடிய மற்றொரு உயிரை உறுவாக்கக்கூடிய திறனுடன் கூடிய அந்த முதல் உயிர் தான் இன்று நாம் மற்றும் நம் கண்ணால் காணக்கூடிய மற்றும் காணமுடியாத உயிரினங்கள். இவையனைத்திற்கும் பிறப்பும் உண்டு இறப்பும் உண்டு.
ஒவ்வொரு உயிருக்கும் இயற்கையாகவே படைக்கும் சக்தி அளிக்கப்பட்டு இறுக்கிறது. அந்த படைக்கும் செயலைச் செய்ய தேவைப்படும் சக்தியை பெறுவதற்காக அனைத்து உயிர்களும் ஒரு சில செயல்களைச் செய்கின்றன. அந்த செயல்கள் தான் முயற்சிகள். அந்த முயற்சிகளின் விளைவு தான் விதி.
உயிர்கள் மற்றும் இயற்கை என்ற இரண்டு பிரிவுகள் தான் உள்ளன. உயிர்கள் தான் வளர்ச்சி அடைய எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் இயற்கையை சார்ந்து இருக்கும் வரை எந்த பாதிப்பும் இல்லை. இயற்கையும் உயிர்களைச் சார்ந்திருக்கும் வரை எந்த பாதிப்பும் இல்லை. அதே சமயம் உயிர்களுக்கும் உயிர்களுக்கும் இடையே நிகழும் செயல்கள், இயற்கைக்கும் இயற்கைக்கும் இடையே நிகழும் செயல்கள் மற்றும் இயற்கைக்கும் உயிர்களுக்கும் இடையே நடக்கும் செயல்கள் தரும் பாதிப்பு பெருமளவில் இருப்பதால் அதைத் தான் விதி என்கிறோம்.
விதியும் இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. இயற்கையும் இயற்கை சார்ந்த விதியும், உயிரும் உயிர் சார்ந்த விதியும். இயற்கையில் எண்ணற்ற பொருள்கள் உள்ளன. இயற்கையின் விதியால் இயற்கை உருவாகிறது. உயிர்களின் விதியால் உயிர்கள் உருவாகுகின்றன. பல்வேறு யுகங்கள் பல கோடிக்கணக்கான வருடங்களில் இயற்கையிலும் உயிர்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே தான் இருக்கின்றன. இயற்கைதான் மூலம் என்பதால் இயற்கையின் விதிதான் முதலில் செயல்படும். உயிர்களின் விதி இயற்கைக்கு கட்டுப்பட்டதே.
ஜோதிடமும் தனிமனிதனுக்கு என்றும் இயற்கைக்கு என்றும் இரண்டு வகைப்படும். தனிமனிதனுக்கு கூறப்படும் பலன்கள் இயற்கைக்கு உட்பட்டது தான். இயற்கையின் பலன்கள் தான் முதலில் செயல்படும். சுனாமியினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சுய ஜாதகப் பலன்கள் வெவ்வேறாக இருந்திருக்கலாம். ஆனால் இயற்கையின் விளைவாக அங்கு சென்ற அனைவருக்கும் இயற்கையின் விதி விளையாடியிருக்கிறது.
விதி இயற்கையில் தான் உருவாகியிருக்கிறது. இயற்கையில் தான் முடிவாகும். இதுவரை விதி என்பது செயலின் (வினையின்) விளைவு என்ற பொருளில் கண்டோம். விதியின் படிதான் அனைத்தும் நடக்கும் என்றால் என்ன? விளைவுகள் எப்படி உயிர்களை ஆட்டுவிக்கிறது? இறப்பிற்குப் பின்னும் பிறப்பிற்கு முன்னும் என்ன நடக்கிறது?
தொடரும் …
seiyalkalin vilaivukalthan vidhi entral echeyalum seyathavanukku vidhi enbathu illaya illa athuvum avanoda vidhithana
ReplyDelete