-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Saturday, August 3, 2019

கலையும் கலைஞனும்

கலைஞனின் வளர்ச்சியே கலையை வாழ வைக்கும்.

இது அனைத்துக் கலைகளுக்கும் பொருந்தும். சிற்பியின் முயற்சிதான் வணக்கத்தக்க சிலையாக மாறுகிறது. ஓவியனின் கைவண்ணம் தான் அழியா ஓவியமாக நிலைத்து நிற்கிறது.. அப்படிப்பட்ட கலைஞர்களை உலகறியச் செய்வதும் வரலாற்றில் நீங்கா இடம் பிடிக்கச் செய்வதும் தான் அந்தக் கலைக்கு நாம் கொடுக்கும் மரியாதை ஆகும்.

எந்தவொரு கலையை எடுத்துக்கொண்டாலும் அதில் புகழ் பெற்றவர்கள் என்றால் மிகச் சிலரைத் தான் அடையாளம் காட்ட முடியும். வரலாறு அவர்களை வைத்தே அந்தக் கலையை இன்றளவும் கொண்டாடிக்  கொண்டிருக்கிறது. ஆனால் உண்மை நிலைமை அதுவன்று. கலையின் மீது உண்மையான ஈடுபாடும் ஆர்வமும் கொண்டவர்கள் மிக அதிகமான அளவில்
வாழ்ந்திருக்கிறார்கள்  இன்னமும் நம்மளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பெயர் அனைவராலும் அறியப்படுவதில்லை. காரணம். அவர்களுடைய உண்மையா கலை நுணுக்கத்தை வெளிப்படுத்த களம் அமையாதது தான்.  கலையால் புகழ் பெற்றவர்களைவிட தன்னால் கலையை புகழடையச் செய்தவர்கள் தான்
வரலாற்றில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இது அனைத்து கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் பொருந்தும்.

கலை வளர கலைஞனை வாழ வைப்போம். எப்படி.....

No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி