agathiyar arudam tamil 2-1-6
அகத்தியர் பாய்ச்சிகை ஆருடம்.
மிகவும் அதிர்ஷ்டமான நேரம். உங்களின் எண்ணங்கள் முன்னேற்றமாக இருந்தால் இந்த நேரம் அதைத் தொடர முயற்சி எடுங்கள். நிச்சயம் வெற்றி உண்டாகும் என்பது அகத்தியர் வாக்கு.
பாடல்
விளையாது வெகுவாய் துன்பமிரண்டு ஒன்றாறுமானால்
பழையநாள் வழக்கும் வெல்லும் பாவையும் கெர்பமாவாள்
தழைத்துமே குடும்பமோங்கும் தட்டாது உந்தன்வாக்கு
துலைந்திடும் கெண்டம் நோயும் துணையது உண்டு தெய்வம்.
பாடல் விளக்கம்.
இரண்டும், ஒன்றும், ஆறும் அடுத்தடுத்து விழுமானால் அதிர்ஷ்டவசமான லாபமெல்லாம் கிடைக்கும். முன்னோர்களின் குடும்பவழக்குகளின் சிக்கலொழியும். மனையாளுக்கு கெர்ப்பம் தரிக்கும். தழைத்த குடும்பம் செழித்து ஓங்கும். உன் வார்த்தைக் கெதிர்வார்த்தை யிராது, கெண்டமும் நோயும் நீங்கும், தெய்வம் துணையுண்டு என்கிறார் அகத்தியர்.
No comments:
Post a Comment
தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி