பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்கட்டை ஆகும். நான்கு முகங்களிலும் 1, 2, 3, 6 என்று குறிப்பிட்டு மூன்று முறை உருட்ட வேண்டும். கிடைக்கும் எண்களின் அடிப்படையில் பலன்களை அகத்திய முனிவர் அருளியுள்ளார். இதில் முதல் முறை ஒன்றும் இரண்டாம் முறை ஆறும் மூன்றாம் முறை ஆறும் வந்தால் நிகழக்கூடிய நிகழ்வுகளின் தொகுப்பாக அகத்தியர் உரைப்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது
பாடல் 1-6-6
அடைகுவாய் லாபமப்பா ஆக ஒன்றாது மாறும்
தடையின்றி விழுந்தாலே தழைத்திட மகப்பேறாகும்
புடைசூழ குடம்பந்தன்னில் புகழான வாழ்வுண்டாகும்
இடையிலே துயர் வந்தாலும் ஏதொன்றுமுனை செய்யாதே.
விளக்கம்.
இப்பொழுது ஒன்றும், ஆறும், ஆறும் வந்தால் குடும்பத்தில் புத்திர பாக்கியமுண்டாகும். பந்துக்களுடனே சுகஷேமத்துடன் வாழ்வாய். இதன் நடுவிலே கொஞ்சம் கஷ்டத்தையடைந்த போதும் அக்கஷ்டம் உன்னை பாதிக்காது. உன் ஆயுள்காலம் வரையில் ஷேமமாக வாழ்வாய் என்கிறார்.
அடைகுவாய் லாபமப்பா ஆக ஒன்றாது மாறும்
தடையின்றி விழுந்தாலே தழைத்திட மகப்பேறாகும்
புடைசூழ குடம்பந்தன்னில் புகழான வாழ்வுண்டாகும்
இடையிலே துயர் வந்தாலும் ஏதொன்றுமுனை செய்யாதே.
விளக்கம்.
இப்பொழுது ஒன்றும், ஆறும், ஆறும் வந்தால் குடும்பத்தில் புத்திர பாக்கியமுண்டாகும். பந்துக்களுடனே சுகஷேமத்துடன் வாழ்வாய். இதன் நடுவிலே கொஞ்சம் கஷ்டத்தையடைந்த போதும் அக்கஷ்டம் உன்னை பாதிக்காது. உன் ஆயுள்காலம் வரையில் ஷேமமாக வாழ்வாய் என்கிறார்.
No comments:
Post a Comment
தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி