-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Thursday, April 9, 2015

agathiyar-arudam-tamil-1-6-2

அகத்தியர் பாய்ச்சிகை ஆருடம்.


பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்கட்டை ஆகும். நான்கு முகங்களிலும் 1, 2, 3, 6 என்று குறிப்பிட்டு மூன்று முறை உருட்ட வேண்டும். கிடைக்கும் எண்களின் அடிப்படையில் பலன்களை அகத்திய முனிவர் அருளியுள்ளார். இதில் முதல் முறை ஒன்றும் இரண்டாம் முறை ஆறும் மூன்றாம் முறை இரண்டும் வந்தால் நிகழக்கூடிய நிகழ்வுகளின் தொகுப்பாக அகத்தியர் உரைப்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது

1-6-2

பாடல்

அப்பனே ஒன்றும் ஆறும் உறுதியாய் இரண்டு வீழ்ந்தால்
தப்பாது முடியுமப்பா தானெதை நினைத்தபோதும்
ஒப்பிலா வாழ்வுண்டாக்கும் உள்ளுரிலடைவாய்லாபம்
கப்பியபகை நோய் நீங்கும் கங்கணப்ராப்தமாமே.

விளக்கம்
ஒன்றும், ஆறும், இரண்டும் விழந்தால் நீ நினைத்த எண்ணமெல்லாம் தடங்கலில்லாமல் முடியும். செல்வாக்கான வாழ்க்கையுண்டாகும் உள்ளுரிலேயே நல்ல லாபங்களெல்லாம் கிடைக்கும். பகையும் நோயும் நீங்கும், மனையில் சுப காரியம் நடக்கும் என்கிறார்.

No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி