-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Wednesday, February 18, 2015

agathiyar arudam tamil 1-2-1

அகத்தியர் பாய்ச்சிகை ஆருடம்.


பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்கட்டை ஆகும்.  நான்கு முகங்களிலும் 1, 2, 3, 6 என்று குறிப்பிட்டு மூன்று முறை உருட்ட வேண்டும். கிடைக்கும் எண்களின் அடிப்படையில் பலன்களை அகத்திய முனிவர் அருளியுள்ளார். இதில் முதல் முறை ஒன்றும் இரண்டாம் முறை ஒன்றும் மூன்றாம் முறையும் ஒன்று வந்தால் நிகழக்கூடிய நிகழ்வுகளின் தொகுப்பாக அகத்தியர் உரைப்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது

1-2-1

விஷபாம்பை போலே பார்ப்பார் ஒன்றுரெண்டொன்று வீழ்ந்தால்
பசப்பு வார்த்தைகள் பேசிபறிப்பாருள் பொருளை எல்லாம்
நிஜமாக உரைத்திட்டாலும் நியாயமுணக்கிராது
கசங்கிட கடனில் தொல்லை காட்டிடும் கவலையாமே.


விளக்கம்

ஒன்று இரண்டு ஒன்று என விழுமானால் உன் சொந்தங்களும், நட்பும் உன்னை விஷப் பாம்பினை பார்ப்பது போல பார்ப்பார்கள்.நீ உண்மையை உரைத்தால் அது உறுதியாக இருக்காது. கடன்காரர்களின் தொல்லையும் காட்டும். கவலையும் உண்டாகும் என்கிறார் அகத்தியர்.

No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி