-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Monday, February 16, 2015

agathiyar arudam tamil 1-1-6

அகத்தியர் பாய்ச்சிகை ஆருடம்.


பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்கட்டை ஆகும்.  நான்கு முகங்களிலும் 1, 2, 3, 6 என்று குறிப்பிட்டு மூன்று முறை உருட்ட வேண்டும். கிடைக்கும் எண்களின் அடிப்படையில் பலன்களை அகத்திய முனிவர் அருளியுள்ளார். இதில் முதல் முறை ஒன்றும் இரண்டாம் முறை ஒன்றும் மூன்றாம் முறையும் ஒன்று வந்தால் நிகழக்கூடிய நிகழ்வுகளின் தொகுப்பாக அகத்தியர் உரைப்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது

1-1-6

பாடல்


உண்டப்பா கெடுதியுண்டு ஒன்றுடனொன்று மாறும்
நின்றிட விழுமானால் நிலைக்காது நினைத்த எண்ணம்
அன்றியும் அரசராலே அவகேடு வந்து நேரும்
சென்றிடும் செல்வமுற்றும் சொல்வது விஷம்போலவே.

விளக்கம்

ஒன்றின் பின் ஒன்றும், ஆறும் விழுமானால் உனது எண்ணம் பலிதமாகாது. அரசாங்க விரோதமும் அதனால் பலவிதத்தில் பொன் பொருள் விரையமாகும். உன் வாக்கு விஷம் போலிருக்கும் என்கிறார்.

No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி