-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Tuesday, February 12, 2013

மூலம் ஆயில்யம். நட்சத்திரங்களால் பெண்களின் புகுந்த வீட்டிற்கு தீங்கு வருமா?

மூலம் ஆயில்யம். நட்சத்திரங்களால் பெண்களின் புகுந்த வீட்டிற்கு தீங்கு வருமா?

வராது. ஒருவருடைய வாழ்க்கையின் முழுப்பங்கும் அவருடைய ஜாதகத்தை வைத்தே கணிக்கப் படுகிறது. மேலும் சாதாரண நிலையில் அடுத்தவர்களின் இராசியோ நட்சத்திரமோ மற்றவர்களிடம் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்துவது இல்லை. எப்பொழுது இருவருக்கும் இடையில் ஒரு பிடிப்பு, ஒரு பந்தம், ஒரு உறவு ஏற்படுகின்றதோ அப்பொழுது தான் ஒருவரின் ஜாதகம் மற்றவர்க்கு பயன்படுகிறது.

ஒருவருக்கொருவர் இணைந்து செயல்படும் போது ஒருவருடைய எண்ண அலைகள் மற்றவருடன் ஒத்துப் போகவேண்டிய நிலையில் இருப்பதால்தான் பிரச்சனைகள் எழுகின்றன.

ஒரு குடும்பம் என்றால் குடும்ப உறுப்பினர் அனைவரும் ஒருவருக்கொருவர் புரிதல் வேண்டும். விட்டுக்கொடுத்தல் வேண்டும். அப்படி செய்ய மறுக்கும் போது தான் பிரிவினைகள் சங்கடங்கள் ஏற்படுகின்றன. இது குடும்பத்திற்கு மட்டும் அல்ல. அனைத்து இடத்திற்கும் பொருந்தும். நமக்கும் நம்அருகில் இருப்பவருக்கும் ஒரு புரிதல் உணர்வு இருந்துவிட்டால் யாரும் யாருக்கும் பிரச்சனையாக இருக்க மாட்டார்கள்.

இது அனைத்து நட்சத்திரங்களுக்கும் பொருந்தும். ஆனால் மூலம் ஆயில்யம் விசாகம் கேட்டை இது போன்ற நட்சத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது இடைச் செறுகல்கள்தானே தவிர, பழங்கால ஏடுகளில் இருப்பதாகாத் தெரியவில்லை.

இன்றைய காலகட்டத்தில்  மூலம் ஆயில்யம் நட்சத்திரங்களின் மீதான பார்வை ஜோதிடர்கள் மத்தியிலும் ஜாதகர்கள் மத்தியிலும் மாறியிருக்கிறது. இருப்பினும் அடுத்தவர்களுக்கு ஆலோசனை கூறுகிறார்களே தவிர தனக்கு என்று வரும் போது மூலம் ஆயில்யம் நட்சத்திரங்களை முழுமனதுடன் ஒத்துக்கொள்ள மறுக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும்.  அதற்கு முதலில் நாம் ஜோதிடத்தை உணர வேண்டும். ஜோதிடத்தை முறைப்படி தெரிந்துகொள்ள முன்வர வேண்டும்.

1 comment:

  1. தமிழ் இணையதளம், ஆன்மிகம், சித்தர்கள் கதை, மருத்துவ குறிப்புகள், குறுங்கதைகள், சமையல் குறிப்புகள் - பற்றிய மனிதனுக்கு தேவையான
    அனைத்தும் ஒரே இணையத்தில்....
    www.tamilkadal.com

    ReplyDelete

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி