-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Wednesday, August 14, 2019

கலையும் கலைஞனும்

கலையை எப்படி வளர்ப்பது, கலைஞனை எப்படி வாழ வைப்பது.?

கலையைப் பற்றி அறிந்து தெரிந்து தெளிந்து கொள்வது தான் கலையை வளர்ப்பதற்கு நாம். ஆற்றும் கடமை. குறைந்த பட்சம் கலைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுதல் கடமையின் முதற்படி. பண்பாடும் கலாச்சாரமும் மாறிக் கொண்டே வந்து கொண்டிருக்கும். அன்று செய்த நற்செயல் இன்று மூடநம்பிக்கையாக பார்க்கப்படலாம். இன்று சரியெனப்பட்டது நாளை தவறெனப்படலாம். ஆனால் அந்தந்த காலகட்டத்தில் படைக்கப்பட்ட கலைகள் என்றென்றும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும். நம் முன்னோர்கள் அனைத்தையும் தெரிந்து தெளிந்து அனுபவித்து பின் பகுத்து வைத்துவிட்டுத்தான் சென்றுள்ளனர்.  நாம் தான் அதனை புரிந்து கொள்ள வேண்டும்.

முதலில் கலை என்றால் என்ன? சரியான கேள்வி. இதன் பதில் இது தான்.

கலை எனப்படுவது "நுட்பமானத் தன்மை மற்றும் திறமையை உள்ளடக்கியது". மனித நடத்தையினாலும் தம் கற்பனை வளத்தினாலும், கலைநுட்பத் திறமையுடன் கூடிய பொருட்கள் (அ) நிகழ்வுகளைப் புணைந்து காட்சிப்படுத்தல் (அ) அரங்கேற்றல் (அ) கைவினை கலைநயம் படைத்தல் ஆகும். இதன் மூலம் பண்பாடு, வரலாறு, அழகியல், போன்றவை பாரட்டுதலுக்காகவும், ரசிக்கும் படியாகவும் காட்சிப்படுத்தப்பட்டு உளவெழுச்சியில் விளைவுகளை ஏற்படுத்தும் நோக்கமுடையதாகும்.[2][3] பிற உயிரினங்களிலிருந்து மனிதனைத் தனித்துக்காட்டுவது கலை நுட்பமாகும். உடல் மற்றும் உள்ளத்தின் திறன்களை ஒருங்கிணைத்து கற்பனை வளத்தை ஊக்குவிப்பது கலை ஆகும்.

கலை என்ற சொல் உணர்ச்சிக்கும் கற்பனைக்கும் முக்கியத்துவம் தரும் கவின் (அ) அழகியல் கலைகள் (asthetic arts) என்றும், நுட்பத்துக்கு முக்கியத்துவம் தரும் தொழில்நுட்பக் கலைகள் (fine arts)என்றும் இரு பெரும் வகையாகப் பிரிக்கலாம்.


கலைகளைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி