உறவு முறைகளை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்
பிள்ளைகளை முடிவு செய்யும் உரிமையும், பெற்றோர்களை தேர்ந்தெடுக்கும் உரிமையும் யாருக்கும் வழஙக்ப்படவில்லை. கடந்த பிறவிகளில் நம்முடைய வினைப்பயன் தான் நம்மை இந்தப் பிறவியில் இந்தச் சூழ்நிலையில் கொண்டு வந்துவிட்டது. தொடர்பிலலாமல் யாரும் யாருக்கும் தொடர்பாகிவிடமுடியாது. நீங்கள் முயற்சி செய்தால் பக்கத்து வீட்டுக் காரரை மாற்றி விட்லாம். ஆனால் என்னதான் முயற்சித்தாலும் உங்களின் சகோதர்களை மாற்ற முடியாது. உங்களின் பெற்றோர்களை மாற்ற முடியாது. அது போலத்தான் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளிலிருந்தும் தப்பிவிட முடியாது. உங்களின் விதியை நீங்கள் அனுபவிக்க வேண்டுமென்றால் உங்களின் உறவு முறைகளை முதலில் ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்களை மதியுங்கள்.
நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயல்களுக்கும் ஒவ்வொரு எதிர்வினை உண்டு. நீங்கள் செய்யும் நற்செயல்கள் உங்களுக்குப் புண்ணியத்தைத் தேடித் தருகின்றன. அந்த புண்ணியத்தையும் அறுத்தால் தான் உங்களால் மோட்சத்தை அடைய முடியும். ஆனால் நீங்கள் கடமைகளைச் செய்யும் போது அது புண்ணியமாகாது. இதைத்தான் “கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே” என்று பக்குவப்பட்டவர்கள் கூறுகிறார்கள்.
உங்கள் உறவு முறைகளுக்குச் செய்யும் உதவி மற்றவர்களுக்குச் செய்யும் நற்செயல் போன்றதல்ல. அது கடமை. அதனால் உறவுகளுக்குச் செய்யும் உதவி புண்ணியத்தைத் தராது. ஆனால் முன்பு செய்த பாவத்தை அறுக்கும். விதியை அனுபவித்து அதனை மீண்டும் உருவாகமல் தடுப்பது ஒன்றே விதியை வெல்லக் கூடிய சூத்திரம் ஆகும். அதனால் உறவுகளுக்கு உதவுவது நமக்கு விதிக்கப்பட்ட விதியை அனுபவிக்கவும் அதேசமயம் மற்றொரு விதி உருவாகமல் தடுக்கவும் நமக்கு கிடைத்த வாய்ப்பாகும்.
இதனைத் தான் ஜோதிடமும் உணர்த்துகிறது. ஐந்தாம் பாவம் தான் அதனை உணர்த்தும் பாவம். புர்வ புண்ணிய பாவம் என்பதும் குழந்தைகள் பாவம் என்பதும் இந்த ஐந்தாம் பாவம் தான். மோட்ச பாவமான 12ம் பாவம் 5ம் பாவத்தின் ஆயுள் அதாவது 5லிருந்து 8வது பாவம். பாக்கியஸ்தானமான 9ம் பாவம் 5ம் பாவத்தின் பாவத்பாவம் அதாவது 5லிருந்து 5. 5ம் பாவம் சுபத்தன்மையுடன் இருந்து 12ம் பாவம் பாதிப்பிற்குள்ளாகத நிலையில் உங்களின் உறவுகளுக்குச் செய்யும் உதவி நீங்கள் மோட்சத்தை அடைய வழிகாட்டும்.
விதியை அனுபவித்து அதனை மீண்டும் உருவாகமல் தடுப்பது ஒன்றே விதியை வெல்லக் கூடிய சூத்திரம் ஆகும்.
தொடரும்....
பிள்ளைகளை முடிவு செய்யும் உரிமையும், பெற்றோர்களை தேர்ந்தெடுக்கும் உரிமையும் யாருக்கும் வழஙக்ப்படவில்லை. கடந்த பிறவிகளில் நம்முடைய வினைப்பயன் தான் நம்மை இந்தப் பிறவியில் இந்தச் சூழ்நிலையில் கொண்டு வந்துவிட்டது. தொடர்பிலலாமல் யாரும் யாருக்கும் தொடர்பாகிவிடமுடியாது. நீங்கள் முயற்சி செய்தால் பக்கத்து வீட்டுக் காரரை மாற்றி விட்லாம். ஆனால் என்னதான் முயற்சித்தாலும் உங்களின் சகோதர்களை மாற்ற முடியாது. உங்களின் பெற்றோர்களை மாற்ற முடியாது. அது போலத்தான் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளிலிருந்தும் தப்பிவிட முடியாது. உங்களின் விதியை நீங்கள் அனுபவிக்க வேண்டுமென்றால் உங்களின் உறவு முறைகளை முதலில் ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்களை மதியுங்கள்.
நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயல்களுக்கும் ஒவ்வொரு எதிர்வினை உண்டு. நீங்கள் செய்யும் நற்செயல்கள் உங்களுக்குப் புண்ணியத்தைத் தேடித் தருகின்றன. அந்த புண்ணியத்தையும் அறுத்தால் தான் உங்களால் மோட்சத்தை அடைய முடியும். ஆனால் நீங்கள் கடமைகளைச் செய்யும் போது அது புண்ணியமாகாது. இதைத்தான் “கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே” என்று பக்குவப்பட்டவர்கள் கூறுகிறார்கள்.
உங்கள் உறவு முறைகளுக்குச் செய்யும் உதவி மற்றவர்களுக்குச் செய்யும் நற்செயல் போன்றதல்ல. அது கடமை. அதனால் உறவுகளுக்குச் செய்யும் உதவி புண்ணியத்தைத் தராது. ஆனால் முன்பு செய்த பாவத்தை அறுக்கும். விதியை அனுபவித்து அதனை மீண்டும் உருவாகமல் தடுப்பது ஒன்றே விதியை வெல்லக் கூடிய சூத்திரம் ஆகும். அதனால் உறவுகளுக்கு உதவுவது நமக்கு விதிக்கப்பட்ட விதியை அனுபவிக்கவும் அதேசமயம் மற்றொரு விதி உருவாகமல் தடுக்கவும் நமக்கு கிடைத்த வாய்ப்பாகும்.
இதனைத் தான் ஜோதிடமும் உணர்த்துகிறது. ஐந்தாம் பாவம் தான் அதனை உணர்த்தும் பாவம். புர்வ புண்ணிய பாவம் என்பதும் குழந்தைகள் பாவம் என்பதும் இந்த ஐந்தாம் பாவம் தான். மோட்ச பாவமான 12ம் பாவம் 5ம் பாவத்தின் ஆயுள் அதாவது 5லிருந்து 8வது பாவம். பாக்கியஸ்தானமான 9ம் பாவம் 5ம் பாவத்தின் பாவத்பாவம் அதாவது 5லிருந்து 5. 5ம் பாவம் சுபத்தன்மையுடன் இருந்து 12ம் பாவம் பாதிப்பிற்குள்ளாகத நிலையில் உங்களின் உறவுகளுக்குச் செய்யும் உதவி நீங்கள் மோட்சத்தை அடைய வழிகாட்டும்.
விதியை அனுபவித்து அதனை மீண்டும் உருவாகமல் தடுப்பது ஒன்றே விதியை வெல்லக் கூடிய சூத்திரம் ஆகும்.
தொடரும்....
No comments:
Post a Comment
தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி