-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Sunday, October 22, 2017

agathiyar arudam tamil 2-2-3

பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்கட்டை ஆகும். நான்கு முகங்களிலும் 1, 2, 3, 6 என்று குறிப்பிட்டு மூன்று முறை உருட்ட வேண்டும். கிடைக்கும் எண்களின் அடிப்படையில் பலன்களை அகத்திய முனிவர் அருளியுள்ளார். 



பாடல் 2 - 2 - 3

ஆமெனவிரண்டும்ரெண்டும் அடுத்ததுமூன்றும் வீழ்ந்தால்
தாமதமாகாதெண்ணம் தழைத்திட செல்வமோங்கும்
போமென வெளியூர் போக பலதொழில் விர்த்தியாகும்
காமனையெரித்தோன்மைந்தன் கந்தனும் துணையிருப்பான்



விளக்கம்

இருமுறை இரண்டும் இறுதியில் மூன்றும் விழுந்தால் ஆகாதகாரியமாயினும் தாமதமின்றி முடியும்.  செல்வமோங்கும், தொழிலில், வெளியூர் பயணத்தில் லாபமுண்டாகும்.  கந்தநாதனின் கருணையால் கவலைகளெல்லாம் நீங்குமாம்.
 

No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி