-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Monday, January 21, 2013

வாழ்வியல் தடைகளும் – ஜோதிடத்தீர்வுகளும்

வாழ்வியல் தடைகளும் – ஜோதிடத்தீர்வுகளும்

ஒருவர் திருப்தியாக வாழ்வதற்கு தடையாக இருக்கும் அனைவற்றிற்கும் காரணம் அவரே தான் முற்பிறவியில் செய்த வினைப்பயனை அனுபவிக்கவே இப்பிறவி எடுக்கிறோம். கடந்த பிறவியிலேயே முழுவதும் அனுபவித்திருந்தால் இப்பிறவி ஏற்பட்டிருக்காது. சரி. இப்பொழுது பிறந்துவிட்டோம். பிரச்சனைகளும் வந்து விட்டது எப்படி தீர்வு காண்பது?

ஒருவருக்கு நிகழக்கூடிய விளைவுகளை மட்டும் ஜோதிடம் கூறவில்லை. அதற்குரிய விடைகளையும் கொடுத்துள்ளது. நாம் தான் உணர்ந்து கொள்ள வேண்டும்.

உதாரண ஜாதகம்
ரிசப இலக்கினம் – துலாம் இராசி 


இவரின் முதல் கேள்வி – எனது மனம் உறுதியான நிலையில் இல்லை. இது தான் இவரின் பிரச்சனை. ஆனால் இது தான் இவரின் பலம். தன்னுடைய பலவீனம் என்ன என்பதைத் தெரிந்தவன் தான் தன்னுடைய பலத்தையும் உணரமுடியும்.

இந்த நிலை ஏன் என்பதற்கு ஜோதிடம் கூறும் காரணம். இலக்கினத்திற்கு 6ல் சந்திரன். சந்திரன் மனதைக் குறிக்கும் கிரகம். ஆறாம் இடம் மறைவு, நோய், வழக்கு இது போன்றவற்றைக் குறிக்கும் இடம். ஆறாம் இடத்தில் சந்திரன். மனநிலையில் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. அனைவருக்கும் தடுமாற்றம் வரத்தான் செய்யும். ஆனால் இவருக்குத்தான் அது முன்னேற்றத்தின் தடைக்கல்லாக அமைந்துவிட்டது.

சந்திரன் மட்டும் தான் காரணமா?
எப்பொழுது தைரியம் குறைகிறதோ அப்பொழுது மனம் தடுமாற்றம் அடையும். பயம் உண்டாகும். எதையும் உறுதியுடன் செய்ய தயங்குவோம். தேவையில்லாமல் சந்தேகம் கோபம் வரும். தைரியம் தரும் பாவம் 3ம் பாவம் அங்கு இருக்கும் செவ்வாய் நீசம். நீசம் பெற்ற செவ்வாய் 4ம் பார்வையாக மனோகாரன் சந்திரனைப் பார்க்கிறது. தேவையான தைரியம் இல்லாதால் மனம் குழப்பத்தில் உள்ளது. 

மனத்தடுமாற்றம் உள்ள அனைவருக்கும் என்ன தான் தீர்வு. வாழ்க்கை முழுவதும் இதே நிலைதானா? இதற்குத் தீர்வு இல்லையா? 

இருக்கிறது. அதுவும் ஜோதிடத்திலிருந்துதான் கிடைக்கப்  பெறப்போகிறோம். முடிவு எடுக்கும் திறனை வளர்த்துக்கொண்டால் இந்த பிரச்சனையை சமாளித்துவிடலாம். எப்படி வளர்த்துக் கொள்வது.? நம்மால் ஒரு செயல் செய்ய முடியாத பொழுது, அச்செயலை செய்ய தகுதியுடைய ஒருவரின் மூலமாக நாம் செய்து கொள்கிறோம். அதே போலத்தான் நம்முடைய முடிவை மற்றொருவரின் மூலமாக செய்து கொள்ளலாம். அப்படி யார் மூலம் நமக்கு ஆதாயம் வரும்?

ஜாதகத்தில் சூரியன் ஆட்சி. புதன் ஆட்சி. சனி உச்சம். இப்படி வலுவான கிரகங்கள் உள்ளன. இதில் சனியும் சூரியனும் பலம் பெற்றவையாக உள்ளன. சூரியன் தந்தைக்குரிய கிரகம். பொதுவாக தலைமைப் பண்பு கொண்ட கிரகம் நல்ல நிலையில் இருப்பதால் உங்களின் முடிவுகளை அவரிடம் கேட்டு நடப்பது சிறந்தது. சுக்கிரன் – மனைவிக்கு காரகர். அவர் சூரியனுக்கு அடுத்த நல்ல நிலையில் உள்ளார். மனைவியின் ஆலோசனை நம்பிக்கையைத் தரும். நண்பர்களின் ஆலோசனை நல்ல அனுபவத்தைத் தரும்.

எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் நன்றாக சிந்திக்கக்கூடியவர் தான். ஆனால் நிதானம் மட்டும் கொஞ்சம் குறைவாக இருக்கும். காரணம் புத்தி காரகன் புதன்- ஆட்சி ஆனால் வக்கிர நிலை. இதை நிவர்த்தி செய்ய உங்களை நீங்கள் புரிந்து கொள்ள தினசரி நடப்பவற்றை டைரியில் எழுதுங்கள் அப்பொழுது உங்களின் சிந்தனை என்ன தவறு எங்கே நடக்கிறது என்பது புரிய வரும். உங்கள் முடிவுகளை ஞாயிற்றுக்கிழமைகளில் (சூரியனுக்கு உகந்த நாள்) அமைதியாக இருக்கும் சூழ்நிலையில் எடுத்தால் வெற்றி நிச்சயம். சந்திராஷ்ட தினங்களில் கவனமாக இருங்கள். தினமும் உங்கள் வாழ்க்கையில் உங்களால் நடந்த நிகழ்ச்சிகளை நினைத்து பெருமைப்படுங்கள். அது நடந்த சூழ்நிலை அதை தாங்கள் நடத்திய விதம் இவற்றை நினைத்துப் பார்த்தால் தங்களின் கேள்விகளுக்கு விடை தானாக கிடைத்துவிடும்.

1 comment:

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி