-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Wednesday, July 3, 2013

ஆருடம் பலன்கள் – ஒன்று-ஒன்று-இரண்டு

ஆருடம் பலன்கள் – ஒன்று-ஒன்று-இரண்டு

அகத்தியரின் பாய்ச்சிகையை மூன்று முறை உருட்டும் போதும் ஒன்றும் ஒன்றும் இரண்டும் விழுந்தால்

பாரப்பா ஒன்று மொன்றும் பதறியே இரண்டும் வீழ்ந்தால்
சீரது வழிந்து போகும் சிக்குகள் பலவுண்டாகும்
பேரது கெடுக்கவுந்தன் பெண்டீரும் துணையே யாவாள்
கூறவே நினைத்த யெண்ணம் கூடாது நாள் தானாகவே.

கடந்த காலத்தில் நாம் செய்த வினைகளுக்குத் தக்கவாறு நிகழ்காலத்தில் விளைவுகள் நடக்கின்றன. அதை குறிப்பாக உணர்த்துவது தான் ஆருடம்.

பொறுமை வேண்டும். நிகழ்காலம் சாதகமான சூழ்நிலையில் இல்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும். கடந்த காலத்தில் செய்த வினைப்பயனில் தொல்லைகளை மட்டும் அனுபவிக்கக் கூடிய காலமாக இது அமையலாம். குடும்பத்தில் அமைதியான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது நல்லது. உணவுக்கட்டுப்பாடு, உடல்கட்டுப்பாடு கடைப்பிடிக்க வேண்டும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கக் கூடிய நிலை உண்டு. நினைத்த செயலில் வெற்றி பெற செயல்முறைகளை நன்கு ஆராய வேண்டும். ஒருவருக்கு இருவரிடம் நன்கு ஆலோசனை செய்து சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து, நிதானத்துடன் செயல்பட வேண்டும்.. வாங்கிய கடனை அடைக்க உகந்த காலமாக அமையும். கல்வியில் தேக்க நிலை ஏற்படலாம்.

நற்பெயருக்கு களங்கம் வரும் என்பதால் எதிர்பாலினரிடம் (ஆணுக்கு பெண்ணும், பெண்ணிற்கு ஆணும்) கவனமாக நடக்க வேண்டும். அமைதியுடன் சிந்தித்தால்  வரும் தீவிரத் துன்பங்களைத் தவிர்க்கலாம். அல்லது குறைக்கலாம். சாதாரண நோய்களுக்சுட சிரத்தையெடுத்து வைத்தியம் பார்ப்பது நல்ல பலனைத் தரும்.

பொதுப்பலன்  - நிதானம்

No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி