-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Wednesday, May 13, 2015

agathiyar-arudam-tamil-2-1-3

பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்கட்டை ஆகும். நான்கு முகங்களிலும் 1, 2, 3, 6 என்று குறிப்பிட்டு மூன்று முறை உருட்ட வேண்டும். கிடைக்கும் எண்களின் அடிப்படையில் பலன்களை அகத்திய முனிவர் அருளியுள்ளார். இதில் முதல் முறை இரண்டும் இரண்டாம் முறை ஒன்றும் மூன்றாம் முறை மூன்றும் வந்தால் நிகழக்கூடிய நிகழ்வுகளின் தொகுப்பாக அகத்தியர் உரைப்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது

பாடல் 2-1-3

வாழநீ எத்தளித்தாய் வக்கரித்தானே கேது
தாழரெண்டொன்றும் மூன்றும் தடைப்பட வழுந்தபோது
சூழுமுன் குடும்பமின்று சுகங்கெட்டு சிதறிப்போகும்
கோழையாம் சில பேரால் குலக்கேடு வினையலாகுமே.


விளக்கம்
இரண்டும், ஒன்றும், மூன்றும் விழுந்தால் உனக்கு கேது வக்கரித்திருக்கிறான் என்று பொருளாகிறது. அதனால் சுகமான வாழ்க்கை இருக்காது. குடும்பம் சிதறி ஆளுக்கொரு இடமாக மாற்றி இருக்க வைக்கும். சில பேர்களால் உனது வம்சத்திற்கு அவமதிப்பைத் வந்து சேரும் என்கிறார்.

No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி