-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Sunday, May 8, 2016

அஷ்டவர்க்கப் பலன்கள்.

கோள்களின் வலிமை மற்றும்  பாவங்களின் பலம் அறிய அஷ்டவர்க்க கணிதம் பயன்படுகின்றது. ஒவ்வொரு கோளும் மற்ற கோள்களிடமிருந்து குறிப்பிட்ட அளவு பலன்களைப் பெறுகின்றன. அதே போல் அனைத்து கோள்களின் பங்களிப்பும் ஒவ்வொரு பாவத்திற்கும் உண்டு. இதை எடுத்துக்காண்பிப்பது தான் அஷ்டவர்க்கப் பரல்கள். ஒவ்வொரு கிரகத்திற்கும் தனித்தனி அஷ்டவர்க்கங்கள் உண்டு. அதே போல, அனைத்து கிரகங்களின் கூடுதலாக சர்வாஷ்டாங்க அஷ்டவர்க்கமும் உண்டு.  

இயற்கை அனைவருக்கும் சமமாகத்தான் வாய்ப்புகளை வழங்கி உள்ளது என்பது இந்த அஷ்டவர்க்த்தின் மூலம் தெளிவாகும். அனைவருக்கும் 337 மதிப்பெண்கள் தான். 12 பாவங்களின் அஷ்டவர்க்கப் பரல்களின் கூடுதல் 337. நாடாளும் மன்னன் முதல்  ஞானி வரை அனைவருக்கும் 337 மதிப்பெண்கள் தான். அதில் எந்தப் பாவம் எந்தக் கிரகம் அதிக பலம் வாய்ந்தது என்பது தான் விதி எனப்படுவது. 

ஒவ்வொரு பாவமும் குறிப்பிட்ட அளவு பலம் பெற்றிருக்கும்.  எந்தப் பாவம் பலம் வாய்ந்தது எந்தக் கிரகம் பலம் பெற்றது என்பதைக் கொண்டு எந்த காலகட்டத்தில் கோச்சாரத்தில் பலம் பெறும என்பதைக் கணித்து செயல்பட்டால் விதியை மதியால் வெல்லலாம். அதற்கான ஜோதிட சூட்சுமம் தான் அஷ்டவர்க்கம்.

தொடர்ந்து...வெற்றி பெறுவோம்.

நன்றி.

No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி