-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Wednesday, May 9, 2018

புதியதோர் விதி செய்வோம்

விதிக்கேற்றால் போலத் தான் நம் வினைகள் நடக்கின்றன என்றால் புதிதாக ஒரு விதி உருவாக எது காரணமாக இருக்க முடியும்.  விதியின் பலனைத் தான் நாம் அனுபவிக்கிறோம் என்றால், நமக்கு நடக்கும் செயல்களுக்கும், நாம் நடத்தும் செயல்களுக்கும் விதி தான் காரணம் என்றால், முயற்சியும் முயற்சியின் பலனும் விதி என்றால், கடந்து சென்ற பிறவிகளில்  நாம் செய்த செயல்கள் அனைத்தும் விதிக்குட்பட்டது  என்று தானே பொருள். அப்படி என்றால்  இப்பிறவி உருவாக எது காரணமாக இருக்கும். பிறப்பது,  இருப்பது பின் அழிவது எல்லாம் விதிப்படியே நிகழும் பொழுது மீண்டும் மீண்டும் பிறப்பதற்கு எது காரணமாக அமைகிறது? இப்பிறவிலேயே அனைத்து விதியையும் அனுபவித்து மீண்டும் பிறவாமல் இருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?  


இப்படிப்பட்ட கேள்விகள் அனைவரின் மனதிலும் தோன்றும்.  சுருக்கமாக கேட்டால், ஒரு விதியை அனுபவிக்கும் பொழுது எப்படி புது விதி ஒன்று உருவாகிறது?  என்ற கேள்விக்கான விடையே மேற்கூறிய அனைத்து கேள்விகளுக்குமான விடை. அதை உணர்ந்து கொள்ள முயற்சிப்போம். 


ஒரு சிறு கதை

ஒரு நாள் வானில் ஓர் அதிசய நிகழ்வொன்று நடக்க இருந்தது.  சிறிது நேரம் மட்டுமே காணக்கூடிய அந்த நிகழ்வைப் பார்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.   100 பேர் மட்டுமே அந்த நிகழ்வை காண முடியும். அதற்கான கட்டணங்களும் விதிமுறைகளும் நிர்ணயிக்கப்பட்டு விட்டன. குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே ஆட்கள் வரத்துவங்கிவிட்டனர். அனைவரும் வரிசையில் காத்திருக்கிறார்கள்.  தகுதி உள்ள 100  பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டுவிட்டனர்.  இறுதியில் ஒருவர் வருகிறார்.  முதலில் அவருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.  பின் ஏதோ சில சரிக்கட்டுதல்களுக்குப் பிறகு அனுமதிக்கப்படுகிறார். முதல் 100 பேருக்குள் இருந்து ஒருவர் வெளியேற்றபட்டுகிறார்.  அதிசய நிகழ்வு நடந்து முடிந்து விட்டது. அனைவரும் கண்டு களித்து சென்று விட்டனர்.


முறைப்படி நடந்தும் முதலாமவர்க்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.  அந்தச் சூழ்நிலைக்கு தகுதியிழந்த ஒருவர் வாய்ப்பைப் பெறுகிறார்.   முதலாமவர் வாய்ப்பு கிடைத்தும் அனுபவிக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை இது தான் அவருடைய விதி.  அவர் அந்த விதியை அனுபவித்து விட்டார்.  இறுதியில் வந்தவருக்கு அந்த அதிசய அனுபவத்தை காண விதிக்கப்பட்டதால் அவர் விதிப்படி அனுபவித்தார்.  ஆனால் இறுதியில் வந்தவர்  தன் முயற்சியால் தனக்குரிய வாய்ப்பை உருவாக்கி இயற்கை விதியை மீறி விதியை அனுபவித்தார். இந்த வினை தான் ஒரு புதிய விதியை மீண்டும் உருவாக்கிவிடுகிறது.  


அப்படியென்றால், விதியை உருவாக்காத அதேசமயம், விதியை அனுபவிக்கும் வினையை எப்படி நிகழ்த்துவது?


தொடரும்.


No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி