-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Monday, August 10, 2015

அகத்தியர் பாய்ச்சிகை ஆருடம். 2-2-1

துன்பங்களை மாற்றி வெற்றிகளைப் பெறக்கூடிய தன்னம்பிக்கை பிறக்கும். இக் காலங்களில் பயம் நீங்கி செயல்கள் பிறக்கும். செய்ய நினைக்கும் செயல்களைச் செய்யும் காலம் இது. மேலும் செயல்களில் செய்யக்கூடிய மாற்றங்கள் நல்ல பலனைத் தரும்.


பாடல் - 2-2-1

தெய்வத்தின் சகாயமுண்டு தென்புவிவிருரெண்டான்றால்
வையகமீது துன்பம் வருந்திடா தனக்குயேதும்
செய்யவே தொலிலுமோங்கும் சந்தோசசெய்தி தோன்றும்
பொய் சொல்லா புனிதனாக புவிதனில் வாழ்வாயன்றோ

விளக்கம்

உனக்கு இரண்டு முறை இரண்டும் இறுதியில் ஒன்றும் விழுந்தால் எத்தகைய துன்பமாயினும் சூரியனைக்கண்ட பனிபோல் விலகும்.  தொழிலில் அளவற்ற லாபங்களையளிக்கும்.  பல ஊர்களிலிருந்து மகிழ்ச்சிகரமான செய்திகள் வரும்.  தவிர நீ பொய்யுரையாத புனிதனாகவும் வாழ்வாய் என்கிறார்.

No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி