-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Monday, August 31, 2015

குழந்தை பாக்கியம் உண்டா இல்லையா?

குழந்தை பாக்கியம் உண்டா இல்லையா?

இயற்கை என்றைக்கும் எதையும் யாருக்கும் மறுத்ததில்லை. மிக முக்கியமாக குழந்தைப் பேறு எனப்படும் சந்ததி விருத்தியை இயற்கை எந்த உயிரினத்திற்கும் மறுத்துப் படைத்ததில்லை. காரணம் உயிர்களின் பெறுக்கமே இயற்கையை வாழ வைக்கும். உயிர்கள் எதுவுமே இல்லையென்றால் யாருக்காக இயற்கை எதனை உருவாக்கப் போகிறது. இயற்கை தான் வாழ தன்னைச் சார்ந்துள்ள அனைத்தையும் வாழ வைத்துக் கொண்டே தான் இருக்கும். அதனால் சந்ததி விருத்தி என்பது இயற்கையானது. யாருக்கும் மறுக்கப்பட்டது அல்ல. பிறகு ஏன் குழந்தையின்மை என்ற நிலை ஏற்படுகிறது.

குழந்தைப் பாக்கியம் அனைவருக்கும் உண்டு. எந்த வயதில் என்பதில் வேண்டுமானால் சிறு வித்தியாசம் இருக்கலாம். மனப் பக்குவமும் உடற்பக்குவமும் இயற்கையோடு இணைந்திருந்தால் எந்த வயதில் வேண்டுமானாலும் குழந்தைப் பேற்றைப் பெற முடியும். ஆனால் இன்றைய காலத்தில் இயற்கையான நிலையை விட்டு செயற்கையான மன மற்றும் உடல் நிலைகளை பழக்கப்படுத்திக் கொள்கிறோம்.  உணவு மற்றும் உறக்கம் இந்த இரண்டும் சரியாக இருந்தால் பெரும்பாலான நோய்கள் தாக்காது என்று மருத்துவம் கூறுகிறது.

ஒரு சிலருக்கு பருவம் அடைந்து குறைந்த காலங்களிலே உயிரணுக்களின் வளர்ச்சி குறைந்து விடும். ஒரு சிலருக்கு பருவம் அடைந்து சிறிது காலம் கழித்தே உயிரணுக்களின் வளர்ச்சி முழுமை பெறும். உயிரணுக்களே எப்பொழுதும் இல்லை என்ற நிலை இருப்பதாகத் தெரியவில்லை. விதிவிலக்குகளை நாம் கணக்கிக் எடுத்துக் கொள்ள வேண்டாம்.  இதனால் தான் இரண்டு தலைமுறைக்கு முன்பு வரை பருவத்திற்கு வந்து இரண்டு வருடங்களுக்குள் திருமணத்தை முடித்து வைத்துள்ளனர். இது தான் சரியானது.

ஒவ்வொரு உடலும் தனக்கு தேவையானதை எப்பொழுதும் உணர்த்திக் கொண்டு தான் இருக்கும். பசி, தாகம், வலி, உடல் வளர்ச்சி இது போன்று உடல் ஒவ்வொரு நிலையிலும் தனக்குத் தேவையானவற்றை உடல் உணர்த்திக் கொண்டுதான் வரும். நாம் தான் அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.  பசித்த பின்பு புசி என்பது தான் இயற்கை. பிறந்த குழந்தையாக இருக்கும் போது கூட நாம் பசியை உணர்ந்து தான் அழுகிறோம். இதைப் போலத் தான் திருமணமும். ஆனால் இன்று நிலையை மாற்றி வைத்துள்ளோம். உடலைப் புரிந்து கொள்ளாமல் வெறும் வயது என்ற வருடங்களை வைத்தே நாம் திருமணங்களை நியாயப் படுத்துகிறோம்.

உடலும் மனமும் பலமா பலவீனமா என்பதை கிரகங்கள் உணர்த்தி விடுகின்றன. நாம் தான் உணர வேண்டும். குருவும் சுக்கிரனும் இரண்டு சுப கிரகங்கள்.  குழந்தைப் பாக்கியத்தை குறிக்கும் சுப கிரகம். சராசரியாக வருடத்திற்கு ஒரு ராசியில் அமர்ந்து பலன்களை உரைக்கின்றது.  ஆனால் மற்றொரு சுப கிரகமான சுககிரன் சராசரியாக மாதத்தற்கு ஒரு முறை ராசி விட்டு ராசி மாறிக் கொண்டே வருகிறது. சுக்கிரன் காதலுக்கும் காமத்திற்கும் அதிபதி.  4ம் பாவம் கட்டில் மோகத்திற்கான பாவம். 4ம் பாவத்திற்கு பலனாக 4க்கு 2ம் பாவமான 5ம் பாவம் குழந்தை பாக்கியம்.  உயிரணுக்களுக்கு சுக்கிரனும் செவ்வாயும் காரகமாகிறார்கள். சுக்கிரன் சூரியனுடன் சேர்ந்து அஸ்தங்கமோ கிரகயுத்தமோ ஆகும் போது உயிரணுக்களில் உற்பத்தியில் குறைபாடுகள் வரலாம்.  சுக்கிரன் சந்திரனுடன் சேர்ந்து ஒரே பாகையில் இருக்கும் போது உயிரணுக்களில் வீரியத்தில் குறைபாடுகள் வரலாம்.   ஆனாலும் முறையான சிகிச்சையினால் முழுப் பலனைப் பெறமுடியும். இது இயற்கையின் வழி.

அனைத்தும் சரியாக இருந்தும் குழநதை பிறக்க வில்லையென்றால் மனத்திற்குத் தான் சிகிச்சை அளிக்க வேண்டும். உடலுக்கு அல்ல. மனதின் எண்ணங்கள் வெளிப்படுத்துவதைத் தான் உடல்கள் பிரதி பலிக்கின்றன. உடல்கள் உணர்த்துவதைத் தான் செயல்கள் பிரதிபலிக்கின்றன. சுக்கிரனும் செவ்வாயும் பலமாக இருந்தால் நிச்சயம் சந்ததி உண்டு. சுமாரான பலத்துடன் இருந்தாலும் குழந்தை பாக்கியம் தாமதமாகவாது கிடைத்துவிடும். இரண்டு கிரகங்களும் 6, 8, 12 ஆக அமைந்து அல்லது நீசம் பெற்று பகை பெற்று இருந்தாலும் குரு, இலக்கிணம், 5ம் பாவாதிபதி இவர்களில் யாராவது ஒருவர் பலமாகிஇருந்தால் கூட மருத்துவத்திற்கு பிறகு பாக்கியம் உண்டு. இதையும் தாண்டி, 99.9999 சதவீதம் வாய்ப்பில்லாத நிலையில் சூரியன், ஒன்பதாம் பாவம் 5ம் பாவம், 3ம் பாவம் சரியாக அமைந்த குழந்தையை தத்து எடுத்து உடன் வளர்த்து வர வாய்ப்புகள் பிரகாசமாகும். சூரியன் சுக்கிரன் தாக்கத்திற்கு உடலிற்கும், சந்திரன் சுக்கிரன் தாக்கத்திற்கு மனதிற்கும் இயற்கை வைத்தியமளித்தால் மிக விரைவில் தகுதியுள்ள அனைவரும் பெற்றோராகிவிடலாம்.

நன்றி.

No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி