-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Thursday, October 11, 2018

என் எதிரியை நான் எப்படி வெல்வது

நம்மையும் நம்மைச் சுற்றியிருக்கும் சூழ்நிலைகளையும் புரிந்து கொண்டால் எதிரிகளை எளிதில் இனம் காண முடியும்.

எதிரிகள் மனிதர்களாகத்தான் இருக்க வேண்டுமென்பதல்ல. கொடிய எண்ணங்களும்  எதிரிகள் தான்.  சோம்பேறித்தனமும் மூடப் பழக்கவழக்கங்களும் கூட எதிரிகள் தான்.   அதிகப்படியான தன்னம்பிக்கையும் கூட ஒரு வகை எதிரிதான்.  வெற்றி என்பது அடுத்தவரை வெல்வது அல்ல. தன்னை வெல்வதே வெற்றி.  நம் குறைகளை நாமே உணர்ந்து திருத்திக் கொண்டால் அதுவே நாம் பெறும் மிகப் பெரிய வெற்றி.
நம்முடைய மகிழ்ச்சி நம் கையில் தான் உள்ளது. நம்முடைய எழுத்து நம்மை வழி நடத்தும். நம்முடைய எழுத்து நம்மை வெற்றி பெறச் செய்யும்.

 தத்துவமெல்லாம் கேட்பதற்கு சரியாகத் தான் இருக்கும். நடைமுறை வாழக்கையில் பயன் படுத்த முடியுமா?, 

ஏன் முடியாது. 

எழுத்துக்கள் தான் இன்று உலகை ஆண்டுகொண்டிருக்கின்றன.  எழுத்துக்களால் தான் மொழி வலிமை பெறுகிறது.  முன்னொரு காலத்தில் நாம் எப்படி வாழ்ந்தோம் என்பதை எழுத்துக்கள் தான் உணர்ததுகின்றன.

முயற்சி செய்.
எழுது.
நிச்சயம் வெற்றி பெறுவாய்.
உன் எழுத்து உனக்கு துணை நிற்கும். 
சத்தியத்தின் படி எழுது.
உண்மையை மட்டும் எழுது.
மனதில் எழுவதை அப்படியே எழுது.

மிக முக்கியமான ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இங்கே குறிப்பிடப்படும் எழுதுதல் என்னும் செயல் திரும்பி வராத பலனைக் கொடுக்கக்கூடிய செயலாக அமைய வேண்டும்.  அதனால் உங்களின் எழுத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டு அதிக பின்னுாட்டங்களைப் பெற்று விடலாம் என்று எண்ணி விடாதீர்கள். அதுவல்ல நம் நோக்கம்.  நம்மை நாம் உணர்ந்து நமது எதிரிகளை அழித்து நாம் நினைத்த வெற்றியைப் பெற நாம் செய்யும் வேள்வி தான் இந்த எழுத்து.

எனக்கு உண்ணுவதற்கும் உறங்குவதற்கும் கூட நேரம் போதவில்லை.. இந்நிலையில் நா்ன் எப்படி எழுதுவது...


No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி