-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Monday, October 15, 2018

அகத்தியர் ஆருடம் - 2-3-1

  அகத்தியர் ஆருடம் - 2-3-1


பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்கட்டை ஆகும். நான்கு முகங்களிலும் 1, 2, 3, 6 என்று குறிப்பிட்டு மூன்று முறை உருட்ட வேண்டும். கிடைக்கும் எண்களின் அடிப்படையில் பலன்களை அகத்திய முனிவர் அருளியுள்ளார். 



பாடல் 2 - 3 - 1


தோஷமே நேருமப்பா இரண்டுடன் மூன்றொன்றொனால்
மோசமேயுன்னை செய்ய முழுதுமே யோசிப்பார்கள்
காசுடன் தொழிலும் போகும் கவலைகள் மிகவே தோணும்
பாசமா யுள்ளபேரும் பிரிந்திடுவாரே யுன்னை. 


விளக்கம்

உனக்கு இரண்டும் மூன்றும் ஒன்றும் விழுந்ததால் சொந்தங்களும், நட்புகளும் உனக்கு மோசமே செய்ய துணிவார்கள். கைப்பொருள் விரையமும், தொழில் நஷ்டமும் அதனால் கவலைகளும் உண்டாகும். உன்னிடம் அன்புள்ளவர்கள் கூட உன்னை விட்டு பிரிவார்கள் என்கிறார்.

No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி