-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Monday, October 8, 2018

யார் எனக்கு எதிரி - எழுத்து எனும் வேள்வி

யார் எனக்கு எதிரி.

நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க என்ன  செய்ய வேண்டும்? கிடைப்பதை அனுபவிக்க வேண்டும். அல்லது அனுபவித்தது போன்று கற்பனையாவது செய்ய வேண்டும். அந்தக் கற்பனை சுவையாக இருக்க அதை எழுதிப் பார்க்க வேண்டும்.  உங்கள் மனதில் நீங்கள் எதிர்பார்த்த இந்த உலகம் கிடைத்து விட்டால் நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைவீர்கள் என்பதை முதலில் நீங்கள்  அனுபவிக்க வேண்டும். பிறகு தான் அதனை அடுத்தவர்களுக்கு அறியப்படுத்த முடியும். 

“இப்பிரபஞ்சம் முழுவதும் என் சொல்படி நடக்க வேண்டும். நான் தான் என்றென்றும் மகா சக்கரவர்த்தியாக இருக்க வேண்டும்.  அனைத்தும் என் விருப்பப்படியே நடக்க வேண்டும்.  எல்லாம் சரி தான்.  இவையெல்லாம் எப்படி சாத்தியமாகும்.? இந்த நிலைக்கு வர நான் என்ன செய்ய வேண்டும்?. “
ஒன்றும் செய்ய வேண்டாம். நீங்கள் வெற்றி பெற தடையாக இருக்கிற எதிரிகளை அழித்துவிடுங்கள். எப்படி முடியும்.? உங்கள் எண்ணங்களால் அது சாத்தியமாகும்.  உங்களின் எழுத்துக்களால் அது சாத்தியமாகும். 

மனதிற்குள் கற்பனை செய்யும் போது கனவு கானும் போது, உங்களின் எண்ணங்கள் எங்கெங்கோ பறந்து விரிந்து ஓடத்துவங்கிவிடும். ஆனால் எழுதும் போது அவை  பக்குவப்படுத்தப்படும். ஒரு எழுத்தை எழுதுவதற்கும் மற்றொரு எழுத்தை எழுதுவதற்கும் இடையே உள்ள சனப்பொழுதில் எழுத்து மெருகேறிவிடும். ஏற்கனவே எழுதப்பட்டது சரிபார்க்கப்படும். அடுத்து எழுத இருக்கும் எழுத்து பக்குவப்படுத்தப்படும். எண்ணங்கள் துாய்மை பெறும்.


முதலில் உங்களின்  இலக்கு என்ன என்பதை தெளிவாக உணருங்கள். எவ்வளவு காலத்திற்குள் அதை அடைய வேண்டும் என்பதை தீர்மானம் செய்த கொள்ளுங்கள். நீங்கள் வெற்றி பெற என்னென்ன வேண்டும் என்பதை பட்டியலிடுங்கள். இறுதியாக உங்களின் எதிரிகள் யார் யார்  என்பதை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.  அனைத்தையும் எழுதுங்கள்.

உங்களின் எதிரி யார் என்பதை எப்படி கண்டு கொள்வது...

வேள்வி தொடரும்...








No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி