-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Sunday, August 18, 2019

ஆய கலைகள் அறுபத்தி நான்கு

கலைகள் இவ்வளவு தான் என்று வரையறை செய்ய முடியாது. காரணம். கலைகள் இடத்திற்கு இடம் காலத்திற்கு காலம் மாறக்கூடியது. பண்பாடும கலாச்சாரமும் கலைகளின் வளர்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு நாட்டின் பண்பாடு கலாச்சாரத்திற்கேற்ப கலைகள் வடிவம் பெறுகின்றன.  மொழிக்கேற்ப சில கலைகள் உறுவாக்கம் பெற்றுள்ளன. சில கலைகள் நவீன காலத்திற்கேற்ப மாற்றம் அடைந்துள்ளன. ஆனால் ஒவ்வொரு கலைகளும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியதுதான். கலைகள் ஒருசில நபரால் உருவாக்கப்பட்டிருக்க முடியாது. பரந்து விரிந்த பிரபஞ்சத்தில் ஒத்த கருத்துக்கள் ஒரே காலகட்டத்தில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு மனிதர்களால் உணரப்பட்டிருக்கும்.  அதே போல ஒவ்வொரு காலகட்டத்திலும் கலைகளை வகைப்படுத்தும் முறைகளும் மாறியிருக்க வாய்ப்புகள் உள்ளன. அதனால் தான் ஆய கலைகள் 64 என்பது பல்வேறு விதமாக கூறப்படுகின்றது. இன்றைய காலகட்டத்தில் நமக்கு கிடைத்த தகவல்களின் படி கலைகளின் தொகுப்பை இங்கே காணலாம்.

 அறுபத்து நாலு கலைகளாவன:

1. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்);
2. எழுத்தாற்றல் (லிகிதம்);
3. கணிதம்;
4. மறைநூல் (வேதம்);
5. தொன்மம் (புராணம்);
6. இலக்கணம் (வியாகரணம்);
7. நயனூல் (நீதி சாத்திரம்);
8. கணியம் (சோதிட சாத்திரம்);
9. அறநூல் (தரும சாத்திரம்);
10. ஓகநூல் (யோக சாத்திரம்);
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்);
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்);
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்);
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்);
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்);
16. மறவனப்பு (இதிகாசம்);
17. வனப்பு;
18. அணிநூல் (அலங்காரம்);
19. மதுரமொழிவு (மதுரபாடணம்);
20. நாடகம்;
21. நடம்;
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்);
23. யாழ் (வீணை);
24. குழல்;
25. மதங்கம் (மிருதங்கம்);
26. தாளம்;
27. விற்பயிற்சி (அத்திரவித்தை);
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை);
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை);
30. யானையேற்றம் (கச பரீட்சை);
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை);
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை);
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்);
35. மல்லம் (மல்ல யுத்தம்);
36. கவர்ச்சி (ஆகருடணம்);
37. ஓட்டுகை (உச்சாடணம்);
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்);
39. காமநூல் (மதன சாத்திரம்);
40. மயக்குநூல் (மோகனம்);
41. வசியம் (வசீகரணம்);
42. இதளியம் (ரசவாதம்);
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்);
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்);
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்);
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்);
47. கலுழம் (காருடம்);
48. இழப்பறிகை (நட்டம்);
49. மறைத்ததையறிதல் (முஷ்டி);
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்);
51. வான்செலவு (ஆகாய கமனம்);
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்);
54. மாயச்செய்கை (இந்திரசாலம்);
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்);
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்);
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்);
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்);
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்);
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்);
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்);
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்);
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்);
64 சூனியம் (அவத்தைப் பிரயோகம்).

இது போன்று மேலும் சில 64 கலைகளின் தொகுப்பை தொடரந்து காணலாம்.

No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி