-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Monday, June 15, 2015

எப்பொழுது வேலை கிடைக்கும்

உங்களுடைய முயற்சின் பலன் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும். முயற்சி தன் மெய் வருத்தக்கூலி தரும். ஆனால் காலம் கனிந்து வரும் வரை முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். சரியான வாய்ப்புகள் வரும் வரை பொருமையாக இருக்க வேண்டும். காலம் கனிந்து வருவதை திசா புத்தி அந்தர காலங்களைக் கொண்டு கணிக்கலாம். ஜெனன ஜாதகத்தில் நாம் வாங்கி வந்த வரத்தைக் கணிக்க முடிவது போல வரம் பலன் தரும் காலத்தை திசா புத்தி அந்தரங்களின் மூலம் கணிக்க இயலும்.

பத்தாம் பாவம் தொழில் பாவம் பத்தின் பலன் 11ல் இலாபமாக கிடைக்கும். ஐந்தாம் பாவம் நம்முடைய அதிர்ஷ்டம் அல்லது முயற்சிக்கு மீறிய பலன். ஐந்துக்கு ஐநதான ஒன்பதாம் பாவம் பாக்கியமாக நமக்கு கிடைக்கக் கூடிய செல்வம். இந்த நான்கு பாவங்களும் திசா புத்தி அந்தர காலங்களுடன் தொடர்பில் இருந்தால் நிச்சயம் வேலை அல்லது தொழில் அமையும். அல்லது இருக்கும் நிலையில் நல்ல இலாபம் கிடைக்கும்.
வேலையில்லாப் பிரச்சனைகளும் ஜோதிடத் தீர்வுகளும்

திசா புத்தி அந்தர அதிபதிகள் 6, 8, 12 ஆக அமையாமல் இருப்பது நலம். அப்படி அமைந்தால் என்ன செய்வது. இருக்கும் வேலையில் இருப்பதும் தொழிலில் முதலீடுகளை குறைத்துக் கொள்வதும் சிறந்தது. வேறு வழியில்லாமல் புதிதாக துவங்க வேண்டும் என்றால் 5, 9, 11ம் அதிபதிகளின் கிழமைகள் மற்றும் நட்சத்திரங்கள் நடப்பில் உள்ள நாட்களில் துவங்குவது நல்ல முன்னேற்றமான அனுபவத்தைத் தரும்.

நன்றி. 

No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி