அகத்தியர் பாய்ச்சிகை ஆருடம்.
1-3-2
பாடல்
ஆமப்பா விழுந்த எண்தான் ஒன்று மூன்றிரண்டேயாகும்
காமத்தையளித்த மங்கை கைவிடுவாளேயுன்னை
ஷேமத்தை கெடுக்கவுந்தன் சொத்துக்களொழிந்து போகும்
போமப்பா உந்தன் கீர்த்தி பூஜிப்பாய் நவக்கிரகத்தை.
விளக்கம்
ஒன்றும், மூன்றும், இரண்டு விழுமானால் உனக்கு அபிமான தாரமாகிய ஓர் மங்கை உன் பொருள்கள் அனைத்தையும் அபகரித்து உன்னை கைவிடுவாள். அதனால் உன் நலம் கெடும். உனக்கு அபகீர்த்தி உண்டாகும். பலவிதமான கவலைகளும் உண்டாகும். ஆனால் இன்று முதல் ஒன்பது நாள் நவக்கிரக பூஜை செய் என்கிறார்.
No comments:
Post a Comment
தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி