-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Saturday, February 28, 2015

agathiyar-arudam-tamil-1-3-2

அகத்தியர் பாய்ச்சிகை ஆருடம்.


பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்கட்டை ஆகும். நான்கு முகங்களிலும் 1, 2, 3, 6 என்று குறிப்பிட்டு மூன்று முறை உருட்ட வேண்டும். கிடைக்கும் எண்களின் அடிப்படையில் பலன்களை அகத்திய முனிவர் அருளியுள்ளார். இதில் முதல் முறை ஒன்றும் இரண்டாம் முறை மூன்றும்  மூன்றாம் முறை இரண்டும்வந்தால் நிகழக்கூடிய நிகழ்வுகளின் தொகுப்பாக அகத்தியர் உரைப்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது

1-3-2

பாடல்

ஆமப்பா விழுந்த எண்தான் ஒன்று மூன்றிரண்டேயாகும்
காமத்தையளித்த மங்கை கைவிடுவாளேயுன்னை
ஷேமத்தை கெடுக்கவுந்தன் சொத்துக்களொழிந்து போகும்
போமப்பா உந்தன் கீர்த்தி பூஜிப்பாய் நவக்கிரகத்தை.

விளக்கம்

ஒன்றும், மூன்றும், இரண்டு விழுமானால் உனக்கு அபிமான தாரமாகிய ஓர் மங்கை உன் பொருள்கள் அனைத்தையும் அபகரித்து உன்னை கைவிடுவாள். அதனால் உன் நலம் கெடும். உனக்கு அபகீர்த்தி உண்டாகும். பலவிதமான கவலைகளும் உண்டாகும். ஆனால் இன்று முதல் ஒன்பது நாள் நவக்கிரக பூஜை செய் என்கிறார்.

No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி