-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Friday, November 13, 2020

பைசா செலவில்லாமல் புண்ணியம்

பைசா செலவில்லாமல் புண்ணியம்

வாய்ப்புக்கள் கிடைக்காதபோது தன்னால் இயலாத பொழுது ஒழுக்கமாக இருந்து பயனில்லை சாப்பிடும் உணவு இருந்தும் நல்ல உடல் இருந்தும் விரதத்தை மேற்கொள்வது புண்ணியம்.

வாகனத்தை மற்றவர்களுக்கு அச்சுறுத்தலாக இல்லாத அளவிற்கு ஓட்டுவது புண்ணியம்.

தன்னிடம் அதிகமாக இருக்கிறது என்பதற்காக தேவை இல்லாமல் செலவு பண்ணாமல் இருப்பது புண்ணியம்.

பெற்றோருக்கு பிடித்த நல்ல உணவை மனம் கோணாமல் பரிமாறுவது புண்ணியம்.

உடன்பிறந்தவர்கள் தன் அளவுக்கு உயர்வு பெற உதவி செய்வது புண்ணியம்.

உடல் அழகை வெளிக்காட்டாமல் அடக்கமாக இருப்பது புண்ணியம்.

தனக்குத் தெரிந்த உண்மை கருத்துக்களை பொதுவெளியில் உரக்கச் சொல்லுவது புண்ணியம்.

பஞ்சபூதங்களை பாழ்படுத்தாமல் இருப்பது புண்ணியம்.

தன்னை நம்பியவர்களை ஏமாற்றாமல் இருப்பது புண்ணியம்.

சரியான எடையில் பொருள்களை விற்பனை செய்வது புண்ணியம்.

தன்னிடம் மட்டுமே கிடைக்கும் என்றாலும் அதிகமாக லாபம் சேர்த்து விற்பனை செய்யாமல் இருப்பது புண்ணியம்.

அடுத்தவர்களின் வளர்ச்சியைக் கண்டு பொறாமை கொள்ளாமல் இருப்பது புண்ணியம்.


Business consultancy service based on your requirements with your horoscope

https://www.facebook.com/groups/3153466734740198/?ref=share

Join with us in telegram

https://t.me/Vedhajothidam

Or mail us

Info@Vedhajothidam.in

Or Whatsapp number

83007 68867















No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி