-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Wednesday, January 15, 2020

நன்றி நன்றி நன்றி

எனக்கு எல்லாம் கொடுத்துக்கொண்டிருக்கும் இயற்கைக்கு நன்றி

உறுதுணையாய் இருந்து கொண்டிருக்கும் உறவுகளுக்கு நன்றி 

நல்லதையே கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி

என்றும் பாதுகாப்பாய் விளங்கிக் கொண்டிருக்கும் நட்புகளுக்கு நன்றி 

எப்பொழுதும் ஆதரவாக இருந்து கொண்டிருக்கும் சுற்றங்களுக்கும் நன்றி 

நான் சந்தித்த முகங்களுக்கும் என்னை சந்தித்த முகங்களுக்கும் நன்றி 

நான் சிந்தித்த எண்ணங்களுக்கும் என்னை சிந்திக்க வைத்த எண்ணங்களுக்கும் நன்றி 

இந்த வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் ஒற்றுமையாகவும் ஒழுக்கமாகவும் வாழ வைத்துக் கொண்டிருக்கும்
அனைத்து ஆன்மாக்களுக்கும் நன்றி 

என்னைப் பார்த்து மகிழ்ச்சி அடையும் பெற்றோர்களுக்கும் நன்றி

நான் பார்த்து மகிழும் என் குழந்தைகளுக்கும் நன்றி

எனக்காகவே வாழும் என் மனைவிக்கும் நன்றி 

என்னுள் இருந்து என்னை ஆட்கொள்ளும் கடவுளுக்கும் நன்றி

அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் திருநாளாம் இத்தைப்பொங்கல் திருநாளில் உங்களுக்கு நன்றி தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்

அனைவருக்கும் தைப்பெருநாள் நல்வாழ்த்துக்களுடன்

உங்கள்
வேதஜோதிடம்


No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி