-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Saturday, July 28, 2018

விதியின் கோட்பாட்டை புரிந்து கொள்ளுங்கள்

விதியின் கோட்பாட்டை புரிந்து கொள்ளுங்கள்

உங்களின் விதிப்படித்தான் இந்த வாழ்க்கை அமைந்துள்ளது.  நீங்கள் வசிக்கும் நாடு, உங்களைச் சுற்றியிருக்கும் மனிதர்கள், உங்களின் சொந்த பந்தங்கள், பேசும் மொழி இப்படி அனைத்தும் விதிப்படியே அமைந்துள்ளது. உங்களின் இந்த வாழ்க்கைச் சூழல் தான் உங்களுக்கு விதிக்கப்பட்டது. இந்தச் சூழ்நிலையை இதே சூழ்நிலையில் அனுபவிப்பது தான் இந்தப் பிறவியில் நீங்கள் ஆற்றக்கூடிய கடமை. 

”இது தான் விதியென்றால் இந்த விதியை நான் மாற்றிக் காட்டுகிறேன்“ என்று  பலப்பலபல நாடுகளுக்குச் சென்று பலப்பல மனிதர்களிடத்தில்  வெவ்வேறான சூழ்நிலையிலும் வாழலாம்.  இதனை உங்களின் முயற்சி என்று கூட எடுத்துக்கொள்ளலாம்.  உங்களின் முயற்சியால் நீங்கள்  உங்களின் சூழ்நிலைகளை மாற்றியமைத்துக்  கொண்டே போகலாம். ஆனால் உங்களைப் பெற்றோர்கள், உங்களின் சகோதர்கள், உங்களின் பிள்ளைகள், உங்களுடைய கொள்ளுத் தாத்தா இப்படி உங்களின் உறவு முறைகளை  எந்த முயற்சியாலும் மாற்றிவிட முடியாது. இது தான் உங்களுக்கு விதிக்கப்பட்ட விதி.

இந்த விதியை அனுபவிப்பதன் மூலம் தான் விதியை மாற்றியமைக்க முடியும். 

தொடரும்....

No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி