-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Friday, February 27, 2015

agathiyar-arudam-tamil-1-2-6

அகத்தியர் பாய்ச்சிகை ஆருடம்.


பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்கட்டை ஆகும். நான்கு முகங்களிலும் 1, 2, 3, 6 என்று குறிப்பிட்டு மூன்று முறை உருட்ட வேண்டும். கிடைக்கும் எண்களின் அடிப்படையில் பலன்களை அகத்திய முனிவர் அருளியுள்ளார். இதில் முதல் முறை ஒன்றும் இரண்டாம் முறை இரண்டும் மூன்றாம் முறை ஆறு வந்தால் நிகழக்கூடிய நிகழ்வுகளின் தொகுப்பாக அகத்தியர் உரைப்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது

1-2-6

பாடல்
தைரியத்தை விடாதே தனியொன்றும் மிரண்டுமாறும்
வைரயா யிருந்தபேரும் வணங்குவாருன்னைக் கண்டால்
சௌரியத் தொழிலில் பாபம் சஞ்சலம் பிணியும் நீங்கும்
பரிவுடன் பிறக்கும் பிள்ளை பலித்திடும் அதனால்யோகம்.



விளக்கம்

ஒன்றும், இரண்டும், ஆறும் விழுந்தால் பகையாயிருப்பவர்களும் உறவாக வந்து சேருவார்கள். தொழிலில் மேன்மையான லாபமும், பிணியும் , கெண்டமும், பலவித கவலைகளும் நீங்கும்.ஆண்குழந்தை பிறக்கும். ஆதனால் லாபமுண்டாகும் என்கிறார்.

No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி