-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Sunday, December 13, 2020

ஒன்றுக்கு மற்றொன்று மாற்று

 *ஒரு முறை பயணிக்கும் போது புலவர் காளிதாசனுக்கு மிகவும் தாகமாக இருந்தது. அப்போது ஒரு பெண் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதைப் பார்த்தார்*.

*கிணற்றடிக்குச் சென்று அந்தப் பெண்ணிடம் தண்ணீர் கேட்டார்.*

*பெண்: "தருகிறேன். ஆனால் நீங்கள் யார்? உங்களை அறிமுகப் படுத்திக் கொள்ளுங்கள்" என்றாள்*.

*காளிதாசர்: தான் யார் என்று இந்த கிராமப்புற பெண் அறிய அருகதை அற்றவள் என்று எண்ணினார்.* 

*எனவே, "நான் ஒரு பயணி" என்றார்.*

*பெண்: "இந்த உலகில் இரண்டே பயணிகள்தானே உண்டு. அது சூரியனும் சந்திரனும் ஆகும். தினமும் உதித்து பிறகு அஸ்தமித்து சதா பயணித்துக் கொண்டே இருக்கிறார்கள்".*

*காளிதாசர்: "சரி. அப்படியானால் நான் ஒரு விருந்தினர்" என்றார்*

*உடனே அந்த பெண்: இந்த உலகில் இரண்டே விருந்தினர்தானே உண்டு - இளமையும் செல்வமும்... இரண்டும் தற்காலிக மானவை. எனவே அவற்றைதான் விருந்தினர் என்று ஏற்க முடியும்" என்றாள்.*

*ஆச்சரியப்பட்ட காளிதாசர்: "சரி, நான் ஒரு பொறுமைசாலி என்று வைத்துக்கொள்" என்றார்.*

*அதற்கு அந்த பெண்: இந்த உலகில் இரண்டே பொறுமைசாலிகள்தான் உண்டு. அவை, பூமியும் மரமும் ஆகும். யார் பூமியை எத்தனை மிதித்தாலும், பழத்திற்காக மரத்தின் மேல் எத்தனை கல் எறிந்தாலும், அவை பொறுமையாக இருக்கின்றன" என்றாள்.*

பொறுமை இழந்த காளிதாசர்: "மிகவும் சரி. நான் ஒரு பிடிவாதக்காரன்" என்றார்.*

*அதற்கு அந்த பெண்: புன்னகையோடு இந்த உலகில் பிடிவாத குணம் கொண்டவை இரண்டுதான் - நம் நகமும் தலைமுடியும் ஆகும். நாம் வெட்ட வெட்ட வளர்ந்து கொண்டே இருக்கும்" என்றாள்.*

*பொறுமை இழந்த காளிதாசர், கோபமாக, "சரி, நான் ஒரு முட்டாள்" என்றார்.*

*அந்த பெண் சிரித்துக்கொண்டே,* 

*"இந்த உலகில் அறிவும் ஆற்றலும் இன்றி ஆளும் அரசனும்,* *அவனைப் புகழ்ந்து துதி பாடும் அமைச்சருமே இரு வகை முட்டாள்கள் ஆவர்" என்றாள்.*

*தான் தோல்வி அடைந்ததை உணர்ந்த காளிதாசர் அந்த பெண்ணின் கால்களில் விழுந்து அவள் பாதங்களைப் பற்றி பின் எழுந்த போது,* *தான் கண்ட காட்சியில் உறைந்து விட்டார்.* 

*கற்பித்தல் மற்றும் அறிவுக்கும் கடவுள் ஆன அன்னை சரஸ்வதியை அங்கே காட்சி தந்து, "காளிதாசா, நீ புத்தி உள்ளவன்.* *ஆனால் நீ உன்னையே உணர்ந்தால்தான் நீ மனுஷ்யா.* *எவன் ஒருவன் தன்னை அறிவதில்லையோ அவன் மனுஷ்ய உச்சத்தை அடைவதில்லை" என்று ஆசீர்வதித்தார்.

படித்ததில் பிடித்தது.

No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி