அகத்தியர் பாய்ச்சிகை ஆருடம்.
பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்கட்டை ஆகும். நான்கு முகங்களிலும் 1, 2, 3, 6 என்று குறிப்பிட்டு மூன்று முறை உருட்ட வேண்டும். கிடைக்கும் எண்களின் அடிப்படையில் பலன்களை அகத்திய முனிவர் அருளியுள்ளார். இதில் முதல் முறை ஒன்றும் இரண்டாம் முறை ஒன்றும் மூன்றாம் முறையும் ஒன்று வந்தால் நிகழக்கூடிய நிகழ்வுகளின் தொகுப்பாக அகத்தியர் உரைப்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பாடல்
மும்முறையொன்றேவந்தால் முடிந்திடும் நினைத்த எண்ணம்
அயபுவி மீது நீயும் அரசனைப் போல வாழ்வாய்
பம்பு சூனியமும் நீங்கும் பலவித லாப முண்டாம்
தம்பிரான் சாக்ஷியாக தாக்ஷிதானிலைபாரே.
விளக்கம்
மூன்று முறையும் ஒன்று விழுந்தால் எண்ணிய எண்ணம் நிறைவேறும். மன்னன் போல் வாழ்வாய்.
பம்பு, சூனியம் நீங்கும் பலவிதத்தில் லாபமுண்டாகும். ஒருவித கவலையும் ஏற்படாது.
No comments:
Post a Comment
தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி