-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Friday, September 7, 2012

சகுனங்கள் – மனிதனின் நம்பிக்கையா? அல்லது மூடநம்பிக்கையா?

சகுனங்கள் – மனிதனின் நம்பிக்கையா? அல்லது மூடநம்பிக்கையா?


மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை பலவிதமான நம்பிக்கைகளைக் கொண்டிருக்கிறான். நம்பிக்கைகளே மனித வாழ்வினை இயக்குகின்றன.  மக்கள் வாழ்வில் இந்நம்பிக்கைகள் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கின்றன.  அவ்வாறு உள்ள நம்பிக்கையில் முக்கியமாக காணப்படுவது சகுனங்கள். 

எந்த ஒரு செயலும் முன் அறிவித்தல்கள் இன்றி நடைபெறுவதில்லை. இது நிச்சயமான ஒன்று. இந்த அறிவித்தல்கள் தான் சகுனங்கள். நாம் ஒரு செயல் செய்ய முயலுகிறோம் அது எவ்வாறு நடக்க இருக்கும் என்பதற்கான அறிகுறியே இந்த சகுனங்கள். அதை உணர்ந்தால் உண்மை தெரிய வரும்.

சகுனங்கள் எதேர்ச்சயாக நடப்பதே ஆகும். அதாவது நம்முடைய தூண்டுதல் இல்லாமல் நடைபெறும் செயல் நம்மை பாதிக்கிறது என்று கூறுவது தான் சகுனங்கள். சகுனங்கள் என்றவுடன் உடனே நினைவுக்கு வருவது பூனை குறுக்கே செல்வது. வீட்டில் வளர்க்கும் பூனை அடுத்தவர்களுக்கு குறுக்கே போவதுதான் சகுனமே தவிர நம் வீட்டுப்பூனை நம்முன்னே செல்வது அல்ல இது அனைவருக்கும் தெரியும்.

பூனை குறுக்கே போனால் என்ன ஆகிவிடப்போகிறது. ஆனால் ஏன் குறுக்கே போகவேண்டும். தினமும் நான் நடக்கிறேன் அன்றும் நடக்கிறேன். அனைவரும் நடக்கின்றனர் ஆனால் நான் அன்று செல்லும் போது மட்டும் ஏன் குறுக்கே செல்ல வேண்டும். அப்பொழுது ஒரு செய்தி உணர்த்தப் படுகிறது. அந்த செய்தியை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கழுதைபடத்தைப் போட்டு என்னைப் பார் யோகம் வரும் என்கிறார்கள். அதை வீட்டு வாசலில் கட்ப்போட்டு தினமும் காலையில் பார்த்து வந்தால் அது யோகமாகாது. அது போலத்தான் அனைத்து சகுனங்களும்.

அதற்காக சகுனங்கள் பார்த்துத்தான் அனைத்து முடிவும் எடுக்க வேண்டும் என்பதற்கில்லை. நீங்கள் ஒரு செயலை செய்ய முடிவெடுத்த பின்பு அதை எவ்வாறு நிறைவேற்றப் போகிறோம் என்பதற்கான ஒரு முன் அறிவித்தல் தான் இந்த சகுனங்கள்.

நாம் வேகமாக பயணிக்கும் போது நமக்கு முன்னே செல்பவர் இடறிவிழுந்தால் நாம் என்ன செய்வோம் ஒரு நிமிடம் யோசித்து நம் வேகத்தைக் குறைத்து செல்வோம். ஏன் அதன் பாதிப்பு நம்மை சிந்திக்க வைக்கிறது. அதே சமயம் ஒரு சுவாமி நகர்வலம் வருகிறது அப்பொழுதும் நாம் வேகத்தைக் குறைத்து இறைவனை ஆத்மார்த்தமாக வணங்கி செல்வோம். இரண்டு நிலைகைளுக்கும் உள்ள வேறுபாடு என்ன. நாம் மெதுவாகச் சென்றது உண்மைதான். ஆனால் நம் மனம் உணர்ந்தது என்ன? முன்னது விபத்து பின்னது யோகம். இது தான் சகுனம்.

சகுனங்களில் நல்லது எது கெட்டது எது?

சகுனங்கள் என்பது ஒரு நிகழ்வு. அந்த நிகழ்வு உங்கள் மனதை மகிழ்ச்சி படுத்துமானால் அது நல்ல சகுனம். அதனால் நீங்கள் உற்சாகமாகிவிடுவீர்கள் உங்கள் செயல் இன்னும் வேகமாக திருப்தியாக நடைபெறும்.

ஒரு நிகழ்வு உங்கள் மனதை காயப்படுத்துமானல் அதற்காக நீங்கள் மனவருத்தம் அடைந்தால் அது உங்கள் செயல் நிலையை பாதிக்கும் பொறுமைகாத்து அந்த செயலை செய்வது அவசியம்.

எந்த ஒரு நிகழ்வு உங்கள் மனதை பாதிக்கவில்லையோ அது சகுனம் ஆகாது என்பது அர்த்தமில்லை. நீங்கள் அதை சரியாக உணரவில்லை என்று அர்த்தம்.

நமக்கு நடக்கஇருப்பதை கோள்கள் நமக்கு கண்டிப்பாக உணர்த்தும். நாம் தான் உணரவேண்டும். அது தான் ஜோதிடம்

சகுனங்கள் நம்பிக்கையா அல்லது மூட நம்பிக்கையா?

நம்பிக்கை என்பதும் மூட நம்பிக்கை என்பதும் ஒரே செயல் வெவ்வேறு நபரால் பார்க்கப்படுவது ஆகும். எனக்கு நம்பிக்கை என்பது மற்றவருக்கு அது மூட நம்பிக்கை ஆகலாம் அதற்கு நான் பொறுப்பாளியல்ல. மேலும் ஆதாரப்பூர்வமாக விளக்கமுடியாதெதல்லாம் மூடநம்பிக்கை என்பதும் இல்லை. ஆசையே அழிவிற்கு காரணம் ஆசை விட்டொழி என்கிறது மதம். இங்கு குறிப்பிடப்படும் ஆசை என்பது பேராசையைக் குறிக்கிறது என்றாலும் கூட, பேராசை என்பது என்ன? திட்டவட்டமாக நிறுபிக்க முடியாத வார்த்தை அது. அப்படி யென்றால் ஆசையே அழிவிற்கு காரணம். இது மூடநம்பிக்கையா?

கியுராசிட்டி விண்கலம் செவ்வாய்க்கு சென்றுள்ளது என்பது நம்பிக்கையா? மூடநம்பிக்கையா? அதை ஏவியவர்களுக்கு அது நம்பிக்கை. கியுராசிட்டி சென்ற இடத்திற்கு செவ்வாய் என்று பெயர் வைத்திருக்கலாம் ஆனால் அது செவ்வாய் கிரகத்திற்குத் தான் சென்றுள்ளது என்பது எப்படி தெரியம். ஜோதிடத்தில் உள்ள செவ்வாய் கிரக குணநலன்களைத் தான் அறிவியலும் கூறப்போகிறது அதற்காக விண்கலம் செவ்வாய் தான் சென்றுள்ளது என்று கூறமுடியுமா? இது நம்பக்கையா? அல்லது மூட நம்பிக்கையா?

எந்த ஒரு செயலும் ஏதோ ஒரு தூண்டுதலின் பெயரில் தான் நடக்கிறது என்பது உண்மை. அனைத்து வினைகளுக்கும் எதிர் வினை உண்டு என்பதும் உண்மை. அந்தத் தூண்டுதல்களுக்கும் எதிர்வினைக்கும் பொதுவாக உள்ளது தான் இந்த சகுனங்கள். அதனால் தான் எப்பொழுதும் மனிதனின் நம்பிக்கையாகத் திகழ்கிறது.

No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி